search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "barren land"

    • 15 ஏக்கர் தேர்வு செய்த திடலில் மரப்பயிர் நடவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படும் என அதிகாரிகள் கூறினர்.
    • தனிநபர் பட்டா விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 13500 வழங்கப்படும் எனவும் விவசாயிகளிடம் கூறினர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே கொடியங்குளம் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நில தொகுப்பு குறித்து, வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், வேளாண் துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் ஜெய செல்வின் இன்பராஜ், வேளாண்மை அலுவலர் சிவகாமி, வேளாண்மை துணை அலுவலர் ஜெயசீலன் உள்ளிட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் தரிசு நில தொகுப்பு விவசாயிகளை சந்தித்து பேசினார்.

    அப்போது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் 15 ஏக்கர் தேர்வு செய்த திடலில் போர்வேல் அமைத்து சோலார் மின் மோட்டார் அமைக்கப்பட்டு தொடர்ந்து மரப்பயிர் நடவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர். மேலும் அனைத்து பண்ணை குடும்பங்களும் 2 தென்னை மரம் விதம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினார்.

    தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்து உளுந்து மற்றும் சிறுதானியம் பயிரிடும் தனிநபர் பட்டா விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 13500 வழங்கபடும் எனவும் விவசாயிகளிடம் கூறினர். இதில் கொடியங்குளம் கிராமத்தின் திட்ட பொறுப்பு அலுவலர் மாயாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
    • கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2022-23 ஆம் நிதியாண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகரம், திருப்புகலூர், ஆதலையூர், பண்டார–வாடை, காரையூர், நெய்க்குப்பை, கோபுராஜ–புரம், ஆலத்தூர், திருச்–செங்காட்டங்குடி, கீழத்தஞ்சாவூர், மருங்கூர் உள்ளிட்ட 11 கிராமங்கள் இத்திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் வாயிலாக கிராமங்களில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்காக 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.விருப்பமுள்ள விவசாயிகள் மேற்குறிப்பி டப்பட்டுள்ள கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×