search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank robberies"

    • திண்டிவனம் அருகே அம்மன் கோவில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ணாவூர் பகுதியில் பஞ்சனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று மர்ம நபர்கள்கோவில் கேட்டில் இருந்த பூட்டை உடைத்தனர். பின்னர் உள்ளே இருந்த 2 உண்டியல்களை மர்ம நபர்கள் உடைத்து, அதிலிருந்த பணம் மற்றும் காணிக்கை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    பிரேசிலில் வங்கிகளில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராயிஸ் நகரின் பிரதான சாலையில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் உள்ளன. நேற்று அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் வங்கிகளுக்குள் சென்று  கொள்ளையடிக்க முயன்றது. 

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இந்த சண்டையில் 25 கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இயந்திர துப்பாக்கிகள், துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் குண்டு துளைக்காத ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    விசாரணையில், விடுமுறையில் வங்கிகளை கொள்ளையடிக்க இந்த குழு திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது என போலீசார் தெரிவித்தனர்.

    ×