என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ayurvedic Medicine"
- முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் முறையீடு
- மருத்துவ கவுன்சில் இல்லாததால் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பி.ஏ.எம்.எஸ். பட்டம் படித்தவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
பெருந்தலைவர் காமராஜர் மருத்துவ கல்லூரி சங்கத்தின் சார்பில் மாகி பிராந்தியத்தில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு சென்டாக் மூலம் 50 ஆயுர்வேத பட்டப்படிப்பு களில் மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். 4 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பு முடித்தவுடன் ஒரு ஆண்டு பயிற்சி டாக்டராக பணியாற்ற வேண்டும்.
புதுவைக்கு தனியாக மருத்துவ கவுன்சில் இல்லாததால் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பி.ஏ.எம்.எஸ். பட்டம் படித்தவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே பயிற்சி டாக்டராக சேர முடியும்.
இந்த நிலையில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் 2022-23-ம் ஆண்டில் பட்டம் முடித்த மாணவர்களை அங்கீகரித்து சான்றிதழ் வழங்க மறுத்து வருகிறது.
இதனால் புதுவை மாணவர்கள் சான்றிதழ்களை பதிவு செய்ய முடியாமலும், பயிற்சி பெற முடியாமலும் 4 ½ மாதமாக தவித்து வருகின்றனர்.
இந்த மாணவர்கள் புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர். அப்போது, அவர் தமிழக அரசிடம் பேசி, கல்வி சான்றிதழ்களை பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் உறுதியளித்தார்.
- கொசு கடிப்பதால் இந்த நோய் உண்டாகிறது.
- டெங்கு தாக்குதலில் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி
டெங்கு காய்ச்சல், நான்கு வகையான டெங்கு வைரஸ்களில் ஒன்றை கொண்டு செல்லும் கொசு கடிப்பதால் இந்த நோய் உண்டாகிறது. ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் இது ஜிகா மற்றும் சிக்குன்குனியாவையும் உண்டு செய்கிறது. இவை தீவிரமான நிலையில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும். இந்த டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வந்தால் குணப்படுத்த உதவும் ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டெங்குவின் தாக்கம் ஒரு வாரகாலத்துக்குள் குறையவும், அதேநேரம் ரத்த தட்டுக்களின் உற்பத்தி விகிதத்தை அதிகரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலமும் உடலை புத்துயிர் பெறவும் கவனமாக இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க 30-க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன.
* டெங்கு தாக்குதலில் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது தான். மேலும் உடலில் வளர்சிதை மாற்றத்தை பராமரிப்பதும் முக்கியம் ஆகும். இந்த அமிழ்தவள்ளி மற்றும் துளசி இலைகளின் தண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் மூலிகை பானம் டெங்குபாதிக்கப்பட்ட உடலில் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடும்.
* துளசி நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. துளசி இலையை கருப்பு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை இரண்டு மணி நேரம் இடைவெளியில் குடித்து வர வேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவும். துளசி மருத்துவ குணங்களை கொண்டது என்பதோடு பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்க அளவோடு எடுப்பது நல்லது.
* பப்பாளி இலைகளை நசுக்கி அல்லது அதன் சாறு எடுத்து நேரடியாக குடித்து வரலாம். இது டெங்குவால் உடலில் ரத்த அணுக்கள் குறைந்திருப்பதை அதிகரிக்க செய்வதோடு சோர்வு மற்றும் குமட்டல் அறிகுறிகளையும் நீக்க செய்கிறது. உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும் வரை தினமும் பப்பாளி இலை சாறு குடித்து வரலாம்.
* கரு ஊமத்தை சக்தி வாய்ந்த மூலிகை. இது டெங்குவினால் உண்டாகும் அறிகுறிகளை குறைக்க செய்கிறது. பெரும் மருத்துவ குணங்களை கொண்டுள்ள இது நன்மை செய்யகூடியது என்றாலும் சுயமாக எடுக்கமால் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் கலந்தாலோசிட்து எடுப்பது நல்லது.
* நெல்லிக்கனி வைட்டமின் சி நிறைந்தது. உடலில் நோயெதிர்ப்புசக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மிகவும் உதவும். ஆயுர்வேதத்தில் நெல்லி அற்புதமான மருத்துவகுணங்களை கொண்டதாக விவரிக்கிறது. இவை உடல் முழுவதும் நன்மை செய்யகூடியது. நெல்லியை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் எடுத்து வரலாம்.
* டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருக்கும். அதிமதுர வேர்கள் மோசமான தோஷங்களை சமப்படுத்தவும் வீக்கத்தை குறைக்கவும் உதவும். இதை தேநீராக்கி குடிப்பது காய்ச்சல், வீக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
* வேப்பிலை கசப்பு நிறைந்தது. இது பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. இதன் மருத்துவ குணங்களுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இது பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. டெங்குவில் உள்ள வேப்ப இலை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. உடலில் இருக்கும் நச்சை வெளியேற்றுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில் 3-4 வேப்ப இலைகளை போட்டு ஊறவைத்து நாள் முழுவதும் கஷாயத்தை குடிப்பதன் மூலம் பலனை பெறலாம்.
டெங்குவுக்கு இந்த ஆயுர்வேத மருத்துவத்தை எல்லோரும் பின்பற்றலாம் என்றாலும் உங்கள் உடல் வாகு மற்றும் உங்கள் உடலில் உள்ள நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவரின் பரிந்துரை படி இதனை எடுத்துக்கொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்