search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayikudi"

    • தென்காசியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகளின் சார்பாக ஊட்டச்சத்து மாதவிழா ஆய்க்குடி பகுதியில் உள்ள ஜே.பி. பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
    • வளர் இளம் பெண்களிடையே ஏற்படும் ரத்தசோகையை அகற்றிட தன் சுத்தம், யோகா போன்ற விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகளின் சார்பாக ஊட்டச்சத்து மாதவிழா ஆய்க்குடி பகுதியில் உள்ள ஜே.பி. பொறியியல் கல்லூரியில்நடைபெற்றது. இதில், வளர் இளம் பெண்களிடையே ஏற்படும் ரத்தசோகையை அகற்றிட தன் சுத்தம், யோகா போன்ற விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றால் போல் மக்கள் துரித உணவுகளை விரும்பி உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் கண் பார்வை குறைபாடு, ரத்த சோகை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் ஊட்டச்சத்து மாத விழா என்ற பெயரில் பாரம்பரிய உணவு தானியங்களான கேழ்வரகு, கம்பு, ராகி, சோளம், திணை, குதிரைவாலி, உள்ளிட்ட தானியங்களை காட்சி படுத்தினர். அதே போன்று அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் பாரம்பரிய தானியங்களினால் செய்யப்பட்ட உணவு வகைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.இந்த உணவுகளை உண்பதால் ஏற்படும் நம்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    இதில், கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.
    • வீடுகளில் ஏற்றுவதற்கான வழிமுறைகளை தெரிவித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் ஆகியோரின் அறிவுரைபடி 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி பேரூராட்சியில் வருகிற 15-ம் தேதி வரை வீடுகளில் ஏற்றுவதற்கு வீடு வீடாக தேசிய கொடி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்குவதற்கு பணியாளர்களுக்கு ஆணையிட்டு வீடுகள் தோறும் தேசியக்கொடியினை வழங்கி வீடுகளில் ஏற்றுவதற்கான வழிமுறைகளை தெரிவித்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் செயல் அலுவலர் மாணிக்கராஜ், துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வார்டு உறுப்பினர்கள் இலக்கியா, கார்த்திக், உலகம்மாள், புணமாலை, பசுமதி, முத்துமாரி, நமச்சிவாயம், விமலாராணி, சிந்துமொழி, வெங்கடேஷ், அருள் வளர்மதி, ஷோபா, பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×