search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto seized"

    • சில நபர்கள் சரக்கு ஆட்டோவில் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தல்
    • உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை

    அன்னதானப்பட்டி:

    சேலம் கருங்கல்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கடத்தி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சில நபர்கள் சரக்கு ஆட்டோவில் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    இது குறித்த தகவலின் பேரில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கி வைத்து, கடத்தலில் ஈடுபட்ட கருங்கல் பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த பாலு ( வயது 21), அவருக்கு உதவி செய்த அம்மாப்பேட்டை தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜீத் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். 1250 கிலோ அரிசி மூட்டைகள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

    அம்பை அருகே கேரள கழிவு பொருட்களை கொட்டிய 2 லோடு ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார் தோட்ட உரிமையாளர், டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்கை:

    கேரளாவில் இருந்து சிலர் கழிவு பொருட்களை லாரி மற்றும் வாகனங்களில் ஏற்றிவந்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டுவதாக போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ண‌ம் உள்ள‌ன. இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் அம்பை அருகே உள்ள மன்னார் கோவில் பகுதியில் சாலை ஓரமாக இரு லோடு ஆட்டோக்களில் கேரள கழிவு பொருட்களை கொட்டினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இது தொடர்பாக அம்பை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லோடு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கேரள மாநில பலராமபுரம் என்ற பகுதியில் இருந்து இந்த கழிவு பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அப்பகுதியை சேர்ந்த சுல்பிகான் என்பவருக்கு சொந்தமாக‌ மன்னார்கோவில் அருகே தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு உரம் கொண்டுவருவது போன்று கழிவுகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.



    இந்த ஆட்டோவை டிரைவர் யாசின் சதிகர் என்பவர் ஓட்டிவந்துள்ளார். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற கேரள கழிவுகளை கொட்டும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் குறையும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ள‌னர். #tamilnews
    ×