search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "artificial legs"

    • மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களளை கலெக்டர் வழங்கினார்.
    • அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநா தரெட்டி தலைமை தாங்கினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கும்,

    அவர்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    இதில், வேலைவாய்ப்பு, சுயதொழில் கடனுதவி, வீட்டுமனை பட்டா, வீடு, உதவித்தொகை, இருசக்கர வாகனம், 3 சக்கர வண்டி, குடும்ப அட்டை, திறன் பயிற்சி, அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உபகரணங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 500 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களுக்கு தீர்வுகாணுமாறு, கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மனு அளித்த கால்களை இழந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்ச ர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களையும், ஊன்றுகோல் வேண்டி மனு அளித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு நவீன ஊன்றுகோல் மற்றும் மூக்கு கண்ணாடியையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இதில் திட்ட இயக்குநர்கள் திலகவதி, தெய்வேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) ஜெயராணி, வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் முருகவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்நாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஷாலினி மற்றும் பல ர் கலந்து கொண்டனர்.

    சிரியாவில் பிறவியிலேயே கால்கள் இன்றி முடங்கி கிடந்த தனது குழந்தைக்கு வெளியுலகை காட்டி நடக்க வைத்த தந்தையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    இஸ்தான்புல்:

    சிரியாவில் உள்ள அலெப்பி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது மெர்கி (34). இவரது மகள் மாயா மெர்கி (8). இவள் கால் இன்றி பிறந்தாள். பிறவியிலேயே இவளுக்கு முழங்காலுக்கு கீழ் பகுதி இல்லை. எனவே இவலால் நடக்க முடியவில்லை. வெளி உலகை காண முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தாள்.

    உள் நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்பி பகுதியில் இருந்து இட்லிப் அகதிகள் முகாமுக்கு மக்கள் குடிபெயர்ந்தார்கள். அங்கும் அவள் கூடாரத்துக்குள் முடங்கி கிடந்தாள்.

    அதை பார்த்து மனம் வேதனைப்பட்ட அவளது தந்தை முகமது மெர்கி மிகவும் மெதுவான பொருட்களால் செயற்கை கால் தயாரித்து ஓரளவு நடக்க உதவினார். அதற்கு அதிக செலவானதால் பிளாஸ்டிக் டியூப்பில் ‘டின்கேன்’களை சொருகி கால் தயாரித்து கொடுத்தார்.


    அதன் மூலம் கஷ்டப்பட்டு நடந்த மாயா மெர்கியின் வீடியோ இணைய தளங்கள் மூலம் வைரலாக பரவி உலக மக்களின் பார்வையை ஈர்த்தது.

    இந்த நிலையில் துருக்கி ரெட் கிரசண்ட் என்ற சமூக சேவை அமைப்பு அவளுக்கு உதவ முன் வந்தது. சிறுமி மாயா மெர்கி அவளது தந்தை முகமது மெர்கி ஆகியோரை இஸ்தான்புல் நகருக்கு அழைத்தது.

    அங்கு சென்ற சிறுமி மாயா மெர்கியை டாக்டர் மெக்மெட் ஷெகி குல்ரு பரிசோதித்தார். பிறவியிலேயே கால் இன்றி பிறந்ததால் அவளுக்கு முழுமையாக கால் வழங்க முடியாது.

    ஆனால் செயற்கை மூலம் தயாரிக்கப்பட்ட கால்களை ஆபரேசன் மூலம் பொருத்தி நடக்க வைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். கடவுளின் விருப்பம் இருந்தால் இன்னும் 3 மாதத்தில் அவளால் நடக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

    அவர் மீது நம்பிக்கை உள்ளதாகவும், தனது மகளின் வாழ்வில் புதிய ஒளி பிறக்கும் என்றும் முகமது மெர்கி தெரிவித்தார்.

    ×