search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Applications are welcome"

    • 1,330 திருக்குறட் பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு 2021-ம் ஆண்டு முதல் பரிசுத் தொகை ரூ.10,000-த்திலிருந்து ரு.15,000 ஆக உயர்த்தி பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெறுகின்றனர்.
    • திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவு செய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப் பெறுகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 1,330 திருக்குறட் பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு 2021-ம் ஆண்டு முதல் பரிசுத் தொகை ரூ.10,000-த்திலிருந்து ரு.15,000 ஆக உயர்த்தி பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெறுகின்றனர்.

    திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவு செய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப் பெறுகிறார்கள். திருக்குறள் முற்றோதல் திறனாய்வு சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை தெரிவுக் குழுவால் மேற்கொள்ளப்பெறும். தெரிவு செய்யப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.15,000-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்.

    திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கு 1,330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராகவும், இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும்திறன் பெற்றவராகவும், திருக்குறளின் அடைமொழி கள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்கு றளின் சிறப்புகள் ஆகிய வற்றை அறிந்தவராகவும், சேலம் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

    அரசு, அரசு உதவிபெறும், தனியார் பதின்மப்பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரைபயிலும் மாண வர்கள் பங்குபெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசினை ஏற்கனவே பெற்ற வராக இருத்தல் கூடாது. திருக்குற ளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும். மாணவர்கள் தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப் பெற்ற விண்ணப்பங்களை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவ லக வளாகத்தில் 2-ம் தளத்தில் அமைந்துள்ள மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ 31.10.2023-க்குள் அளிக்கு மாறு கேட்டுக்கொள்ளப் பெறுகிறார்கள். இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
    • 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவ -மாணவியர்களுக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது:-

    திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் "திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்" திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 1330 குறட்பாக்க–ளையும் ஒப்பிக்கும் மாணவ -மாணவியர்களுக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

    2022-23 ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன்கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.

    போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in//) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை நிறைவு செய்து 26.12.2022-க்குள் நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×