என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anthiyur temple"

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவர்.
    • மாட்டுச்சந்தை, குதிரைச்சந்தை உள்ளிட்டவைகளை குடும்பத்துடன் சென்று பார்வையிட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமர்சியாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு பண்டிகை கடந்த 13-ந்தேதி தொடங்கியது. புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து குருநாதசாமி, பெருமாள்சாமி, காமாட்சியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனகோவிலுக்கு பக்தர்களால் தோலில் சுமந்து மகமேறு தேரில் குருநாதசாமியும், பெருமாள் சாமியும் சென்றது. சப்பரத்தில் காமாட்சி அம்மன் வனகோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தேர்களை தோள்களில் சுமந்து சென்று வன கோவிலை சென்றடைந்தனர்.

    திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் குதிரை சந்தைக்கு தமிழகத்தில் ஈரோடு, மதுரை, திருச்சி, திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை, நாமக்கல்,கோவை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவர்.

    இந்த சந்தையில் மார்வார் இன குதிரைகள், நொக்ரா, சப்ஜா, வெள்ளை சட்டை, செவலை சட்டை, கருப்பு, நாசி, முஸ்கி என பல நிற குதிரைகள் 1500 முதல் 3 ஆயிரம் குதிரைகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சந்தையில் 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான குதிரை வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இந்த பண்டிகையை காணவும் சாமி தரிசனம் செய்யவும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் தமிழரசு, அவரது மனைவி மோகனாம்பாள் மற்றும் குடும்பத்தாருடன் அந்தியூர் எம்.எல்.ஏ ஏஜி வெங்கடாஜலம் கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு தரிசனம் செய்தனர். பின், மாட்டுச்சந்தை, குதிரைச்சந்தை உள்ளிட்டவைகளை குடும்பத்துடன் சென்றுபார்வையிட்டனர். அவரை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றனர். அவரிடம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கினர்.

    அந்தியூரில் சாப்பாடு கொடுக்காததால் கோவிலில் படுத்து தூங்கிய 2 பேரை அடித்து கொன்றதாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    அந்தியூர்:

    அந்தியூரை அடுத்த ஆத்தப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லான் என்கிற நல்லசாமி.

    நேற்று முன்தினம் இரவு, அந்தியூரை அடுத்த கொன்ன மரத்தையன்கோவில் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த வெள்ளை பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த வடிவேல், டி.என். பாளையத்தை சேர்ந்த கந்த சாமியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தான்.

    கொலையாளி நல்லானை கைது செய்த அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனக்கு மனைவி இல்லை. நான் தனியாக வசித்து வருகிற காரணத்தினால், எனக்கு சாப்பிட உணவு கிடைப்பதில்லை.

    சாப்பாடு கேட்டு எங்கள் ஊரிலும் மற்ற பகுதிகளிலும் பலரிடம் சென்றேன். ஆனால் அவர்கள் எனக்கு உணவு வழங்க மறுத்து விட்டனர்.

    சம்பவத்தன்று இரவு கோவிலில் இருந்த கந்தசாமியிடமும் வடிவேலிடமும் சாப்பாட்டுக்கு பணம் கேட்டேன். அவர்கள் இல்லை என்று கூறிவிட்டனர்.

    மேலும் கோவிலுக்கு பக்கத்து வீடுகளில் இருந்தவர்களிடமும் சாப்பாடு கேட்டேன் அவர்களும் இல்லை என்று துரத்தி விட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த நான் எங்கள் வீட்டிற்கு சென்று மூங்கில் கம்பை கொலை செய்யும் எண்ணத்தில் எடுத்து வந்தேன்.

    அங்கு நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமி, வடிவேலுவை மூங்கில் கம்பு மற்றும் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்றேன்.

    சந்தியாபாளையத்தை சேர்ந்த பெரியசாமியை அடித்தபோது அவர் தப்பி சென்று ஒளிந்து கொண்டார். அதன்பிறகு ஆத்திரம் குறையாத நான் எங்கள் பகுதியை சேர்ந்த குமாரையும் கத்தியால் குத்தினேன். சாப்பாடு கிடைக்கவில்லை என்ற வெறியால் இதை செய்தேன்.

    இவ்வாறு வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். #tamilnews
    ×