என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Annual function"
- புனித அலோசியஸ் கலையரங்கத்தில் வைத்து ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மாலையில் நடந்தது.
- 9,11-ம் வகுப்பு மாணவிகள் நடனம் ஆடினர். தலைமையாசிரியர் வேளாங்கண்ணி செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் புனித அலோசி யஸ் மேல்நிலைப்பள்ளியில் 66-வது விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடந்தது. உதவி பங்குதந்தை ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
புனித அலோசியஸ் கலையரங்கத்தில் வைத்து ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மாைலயில் நடந்தது. உதவி தலைமையாசிரியர் பெர்டினான்ட் மோரிஸ் வரவேற்று பேசினார். 9,11-ம் வகுப்பு மாணவிகள் நடனம் ஆடினர். தலைமையாசிரியர் வேளாங்கண்ணி செல்வி ஆண்டறிக்கை வாசித்தார், வள்ளியூர் டி.ஜே.ஆர். கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் தேவேந்திரன் விளையாட்டு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் வள்ளியூர் டி.டி.என் கல்விக்குழுமம் உரிமையாளர் டி.டி.என்.லாரன்ஸ் கல்வி பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார். முனைவர் ஜெரால்டு ரவி ஆசியுரை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் அலெக்ஸ் ரெனோ நன்றி கூறினார்.
- செங்கோட்டை மேலூரில் நகர வாணியா் சமுதாய 24-ம் ஆண்டு கல்வி நிதி பரிசளிப்பு மற்றும் காந்தி் ஜெயந்தி விழா நடந்தது.
- 10, 12ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
செங்கோட்டை:
செங்கோட்டை மேலூரில் நகர வாணியா் சமுதாய 24-ம் ஆண்டு கல்வி நிதி பரிசளிப்பு மற்றும் காந்தி் ஜெயந்தி விழா நடந்தது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட காந்தி படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனா். விழாவிற்கு நகர வாணியா் சமுதாய தலைவா் (கல்வி நிதி) குமரேசன் தலைமை தாங்கினார்.
குற்றாலம் வாணியா் பவனம் டிரஸ்ட் தலைவா் துரைராஜ், மேலூர் சமுதாய தலைவா் ரவி, தஞ்சாவூர் தெரு சமுதாய தலைவா் முருகன், எஸ்.ஆர்.கே. தெரு கிழக்கு சமுதாய தலைவா் மோகன்ராஜ், எஸ்.ஆர்.கே. தெரு மேற்கு சமுதாய தலைவா் முருகையா, தஞ்சாவூர் தெரு துணைத்தலைவா் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
துணைச்செயலாளா் மாடசாமி இறைவணக்கம் பாடினார். செயலாளா் செண்பகக்குற்றாலம் வரவேற்றார். துணைத்தலைவா் ராமகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளா் முருகன் வரவு செலவு கணக்கு வாசித்தார்.
தொடா்ந்து 10, 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்த மாணவமாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்ற ஹரீஸ்கார்த்திக் என்ற மாணவனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. நிலக்கிழார் சுப்பையா செட்டியார் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் வாணியா் பவனம் டிரஸ்ட் முன்னாள் தணிக்கையாளா் செல்லப்பா, துணைச்செயலாளா் குருசாமி, மாவட்ட வாணியா் பேரவை தலைவா் குருவிகுளம் ஆனந்தராஜ் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனா். மேலுார் வாணியா் சமுதாய செயலாளா் செந்தில்ஆறுமுகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்