search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "An old man was arrested"

    • நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனி யசாமி தலைமையிலான போலீசார் கிராமப்பகுதி களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது குமரப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் கள்ளச்சாரா யம் காய்ச்சி விற்பனை செய்தவரை கைது செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படு வதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனி யசாமி தலைமையிலான போலீசார் கிராமப்பகுதி களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குமரப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் கள்ளச்சாரா யம் காய்ச்சி விற்பனை செய்த ராஜேந்திரன் (55) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கள்ளச்சாராய ஊரல் 5 லிட்டர் மற்றும் மண் பானை, பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். ராஜேந்திரன் மட்டும் இதில் ஈடுபட்டாரா வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • கோவையில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • பீரோவில் இருந்த ரூ.16 லட்சத்து 65 ஆயிரத்தை காணவில்லை

    கோவை:

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜி.கே.டி நகரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 56). தொழில் அதிபர்.

    இவர் கோவையில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் உள்ள பீரோவில் ரூ.20 லட்சம் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் வியாபாரம் சம்பந்தமாக செல்வக்குமார் கடந்த 24-ந் தேதி சென்னை சென்றார். பின்னர் அங்கிருந்து மறுநாள் கோவை திரும்பினார். வீட்டிற்கு வந்தபோது வீட்டு பீரோவில் இருந்த ரூ.16 லட்சத்து 65 ஆயிரத்தை காணவில்லை. மீதமுள்ள பணம் அப்படியே இருந்தது.

    வீட்டு வேலைக்கு வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் அன்று வேலைக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த செல்வக்குமார் தனது வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அதில், வீட்டு வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முதியவர் சகாதேவன்(62) என்பவர் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சகாதேவனை கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் இருந்து ரூ. 13.65 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சகாதேவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×