search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aircel Maxis"

    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் நவம்பர் 26-ந்தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis #PaChidambaram
    சென்னை:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

    இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    ஏர்செல்-மேக்சிஸ் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது கடந்த ஜூன் 13-ந்தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பின்னர் துணை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 25-ந்தேதி ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் கோரியதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் பல்வேறு நேரங்களில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தடை விதித்தது. கடைசியாக நவம்பர் 1-ந்தேதி (இன்று) வரை இந்த தடையை நீட்டித்தது.

    இந்த நிலையில் ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்தது.

    இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் நவம்பர் 26-ந்தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.



    இதற்கிடையே வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு இன்று நிராகரித்தது.

    முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பல நிலுவையில் இருப்பதாகவும் உடனே விசாரிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் மறுத்தது.

    கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரும் மனு நாளை விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis #PaChidambaram
    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனியாக முறைகேடு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.



    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் சார்பில், வர்த்தக ரீதியாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    கார்த்தி சிதம்பரத்தின் இந்த கோரிக்கைக்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை கார்த்தி சிதம்பரம் தவறாக பயன்படுத்துவதாகவும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும், அதனால் இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டபடி அவர் செப்டம்பர் 20-ந்தேதியில் (நாளை) இருந்து 30-ந்தேதி வரை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். அத்துடன் அவருடைய விமான பயண திட்டம் குறித்த விவரங்கள், நாடு திரும்பும் நாள் குறித்த விவரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா திரும்பிய பிறகு அவர் தனது பாஸ்போர்ட்டை அமலாக்கத்துறை இயக்குனரகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.  #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis
    ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis
    புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை அக்டோபர் 8-ந்தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அதே கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்து உள்ளது.



    இதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கார்த்தி சிதம்பரம் அமலாக்கப்பிரிவின் விசாரணைக்கு முழுஅளவில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அப்படி இருந்தும் டெல்லி ஐகோர்ட்டு அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை தரப்பில் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே அவரை கைது செய்வது ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படும் அமலாக்கப்பிரிவின் இதுபோன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis

    2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் புகார்களை விசாரித்து வரும் அமலாக்கத்துறை துறை அதிகாரி ராஜேஸ்வர் சிங் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #AircelMaxis #RajeshwarSingh
    புதுடெல்லி:

    அமலாக்கத்துறையில் இணை இயக்குநராக உள்ள ராஜேஸ்வர் சிங் 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் விவகாரங்களை விசாரித்து வந்தவர். இந்நிலையில், ராஜேஸ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவரை பணியிலிருந்து விடுவித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ராஜ்னேஷ் கபூர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இதற்கு கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்திருந்த ராஜேஸ்வர் சிங். அதில், தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்படுகிறது. 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த தன் மீது குற்றம் சாட்டப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற குற்றச்சாட்டு எழுந்த போது, தன்னை குற்றமற்றவர் என சிபிஐ மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பகம் சான்றிதழ் அளித்தது என குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில், நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எஸ்.கே கவுல் அமர்வு முன்னிலையில் இன்று மேற்கண்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘மிக முக்கியமான வழக்குகளை விசாரித்த உங்களுக்கு (ராஜேஸ்வர் சிங்), எதிரான இந்த குற்றச்சாட்டை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்த விசாரணைக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என கூறிய நீதிபதிகள் பிற்பகல் 2 மணிக்கு உத்தரவுகளை வழங்குவதாக தெரிவித்தனர்.

    பின்னர், பிற்பகலில் மீண்டும் நீதிமன்றம் கூடியதும். “ராஜேஸ்வர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும். 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் குழுவில் இருந்து ராஜேஸ்வரை விடுவிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ×