search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aide"

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்கே உலை வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட வழக்கில் அவரது முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. #PaulManafort #Trump
    வாஷிங்டன்:

    கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்பிஐ அதிகாரி முல்லர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. 

    இதற்கிடையே, கடந்தாண்டு அதிபர் டிரம்பின் பிரசார குழு தலைவராக இருந்த பால் மனாபோர்ட், உதவியாளர் ரிக் கேட்ஸ் ஆகியோர் உக்ரைனைச் சேர்ந்த அரசியல்வாதி விக்டர் யானுகோவிச், அவரது ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சியிடமிருந்து பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நிதிமோசடி, வங்கி மோசடி, வெளிநாட்டு வங்கிக்கணக்குகளை மறைத்தது உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனை அடுத்து, தலா 5  மில்லியன் டாலர் ஜாமீனில் அவர்களை விடுவித்த நீதிமன்றம் வீட்டுக்காவலில் வைத்தது.

    விர்ஜீனியா மாகாணத்தின் அலெக்ஸாண்ட்ரா கோர்ட்டில் நடந்து வந்த பால் மனாபோர்ட் மீதான வங்கி, வரி மோசடி வழக்குகள் மீதான விசாரணை முடிந்ததை அடுத்து, 8 வழக்குகளில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பாக விசாரித்து வரும் முல்லர் குழுவுக்கு கிடைத்த முன்னேற்றமாக கருதப்படுகிறது.

    மேலும், மானபோர்ட் மீதான மற்ற 10 வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வழக்குகளில் குறைந்தது 80 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.


    டிரம்ப் உடன் கோஹன்

    இந்த தீர்ப்பு டிரம்ப் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த அதிர்ச்சி அவருக்கு தீருவதற்குள்ளாக இன்னொரு அதிர்ச்சி டிரம்ப்புக்கு கிடைத்தது. அவரது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறியதாக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

    வேட்பாளரின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார். டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்தது தொடர்பாக கோஹன் இந்த சாட்சியம் அளித்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையில், கோஹன் வரி மற்றும் வங்கி பண மோசடிஉள்பட 8 அம்சங்களில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால், அவருக்கும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    மேற்கண்ட இரு சம்பவங்கள் முல்லர் குழுவுக்கு சாதகமாகவும், டிரம்ப்புக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது. இதனால், டிரம்ப்பின் பதவிக்கு ஆபத்து வரலாம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
    அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு புகார் டிரம்ப்புக்கு தலைவலியாக இருந்து வரும் நிலையில், அவரது முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் மீதான முறைகேடு வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. #PaulManafort #Trump
    வாஷிங்டன்:

    கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்.பி.ஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே, கடந்தாண்டு அதிபர் டிரம்பின் பிரசார குழு தலைவராக இருந்த பால் மனாபோர்ட், உதவியாளர் ரிக் கேட்ஸ் ஆகியோர் உக்ரைனைச் சேர்ந்த அரசியல்வாதி விக்டர் யானுகோவிச், அவரது ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சியிடமிருந்து பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது,

    இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நிதிமோசடி உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனை அடுத்து, தலா 5  மில்லியன் டாலர் ஜாமீனில் அவர்களை விடுவித்த நீதிமன்றம் வீட்டுக்காவலில் வைத்தது.

    இந்நிலையில், விர்ஜீனியா மாகாணத்தின் அலெக்ஸாண்ட்ரா கோர்ட்டில் நடந்து வந்த பால் மனாபோர்ட் மீதான வங்கி, வரி மோசடி வழக்குகள் மீதான விசாரணை முடிவடைந்தது. இதனை அடுத்து, வழக்கு குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க 12 ஜூரிக்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டார். (அமெரிக்க சட்ட முறைப்படி வழக்கின் தீர்ப்பை ஜூரிக்களின் கருத்தை வைத்தே நீதிபதிகள் அறிவிப்பர்)

    12 ஜூரிக்களும் வழக்கு தொடர்பாக விவாதித்து வருகின்றனர். இந்த வழக்கில் பால் மானாபோர்ட் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அது டிரம்ப்புக்கு பெரிய அடியாக அமையும். கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை பதவி விலக வைக்கவும் முடியும். இதனால், இந்த வழக்கின் தீர்ப்பை அமெரிக்காவே உற்று நோக்கியுள்ளது.
    மும்பையில் ஓட்டல் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான ராம்தாஸ் ரகானே காவல்துறையால் கைது செய்யப்பட்டார். #DawoodIbrahim
    மும்பை:

    மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட தாவூத் இப்ராகிம் சகல வசதிகளுடன் துபாய் நகரில் வாழ்ந்து வருகிறார். தாவூத் இப்ராகிமின் அடியாட்கள் இந்தியாவில் பிரபல சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.

    இதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் கிரிக்கெட் சூதாட்ட வளையத்தையும் நிர்வகித்து வரும் தாவூத் இப்ராகிமுக்கு இந்தியாவில் உள்ள அவரது அடியாட்கள், வசூலித்து வரும் மாமூலில் இருந்து பெரும்தொகை தாவூத் இப்ராகிமின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபல ஓட்டல் அதிபரிடம் தாவூத் இப்ராகிமின் அடியாட்கள் தொலைப்பேசி மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். தங்களது குழுவைச் சேர்ந்த ராம்தாஸ் ரகானே என்பவனிடம் 50 லட்சம் ரூபாய் மாமூலாக தர வேண்டும் இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவோம் என்று எதிர்முனையில் பேசியவர்கள் மிரட்டியுள்ளனர்.
     
    மேலும், உடனடியாக ராம்தாஸ் ரகானேவிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புமாறும் வற்புறுத்தினர். இந்த மிரட்டல் தொடர்பாக அந்த ஓட்டல் அதிபர் மும்பை நகர போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கண்காணித்து வந்த மும்பை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் திலீப் சாவந்த், ராம்தாஸ் ரகானேவை இன்று கைது செய்தார்.

    பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் அறுவுறுத்தியபடி இந்த மிரட்டலை இங்குள்ள தாதாக்கள் அந்த ஓட்டல் அதிபருக்கு அனுப்பி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பணம் கொடுக்காத ஓட்டல் முதலாளி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட போது ராம்தாஸ் ரகானேவை கைது செய்த போலீசார் அகமதுநகர் மாவட்டம், சங்கம்நெர் பகுதியில் உள்ள அவனது வீட்டில் நடத்திய சோதனையில் கைத்துப்பாக்கியும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் குறிப்பிட்டனர்.

    கைதான ரகானே மீது மும்பை குஜராத் பகுதியில் ஏரளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கடந்த 2011-ம் ஆண்டு மும்பை பகுதியில் பிரபல கட்டுமான நிறுவன அதிபர் மனிஷ் தோலாக்கியா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திலும் இவன் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்துள்ளது.

    இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரகானேவை வரும் 30-ம் தேதி வரை போலீசார் காவலில் எடுத்துவிசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DawoodIbrahim
    ×