search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aggressive shops"

    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் நடவடிக்கை
    • தரைக்கடைகள் தினசரி வாடகை ரூ.41 ஆக குறைப்பு

    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் பழைய மீன் மார்க்கெட்டில் இருந்து ராஜா தியேட்டர் பஸ் நிறுத்தம் வரையில் சாலையோரம் ஏராளமானோர் கடைகள் வைத்துள்ளனர்.

    குறிப்பாக அந்த பகுதியில் உள்ள நடைமேடைகளை தின்பண்ட கடைகள் ஆக்கிரமித்துள்ளன.

    இதனால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் தினந்தோறும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் வெங்கடேசன் தலைமையில் அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை அகற்றினர்.

    அங்கிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அண்ணா சாலையில் நடைபாதை மற்றும் சாலை ஆக்கிரமித்து எந்த கவித காரணத்தைக் கொண்டும் கடைகள் வைக்கக்கூடாது பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் ஏற்கனவே தரைக் கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    எச்சரிக்கை

    அந்த இடத்தில் பழக்கடைகளை வைக்க வேண்டும் என மீறி சாலைகள் கடை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் இந்த சம்பவத்தால் இன்று காலை அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் மாநகராட்சி சார்பில் தரைக் கடைகள் கட்டப்பட்டுள்ளன .இந்த இடத்தில் வியாபாரம் ஆகாததால் வியாபாரிகள் மண்டி தெரு, லாங்கு பஜார் மற்றும் அண்ணா சாலைகளை ஆக்கிரமித்து பழக்கடைகள் வைத்துள்ளனர்.

    தற்போது சாலைகளில் கடை வைக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. மேலும் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் இருந்து தரைக் கடைகளுக்கு தினசரி வாடகை ஒரு 100 வசூலிக்கப்பட்டு வந்தது இந்த கடைகளுக்கு தற்போது தினசரி வாடகை ரூ.41 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை எந்தவித முன் அறிவிப்பு இல்லாமல் அகற்றியதற்கு அந்த பகுதி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    பூந்தமல்லி:

    புகழ்பெற்ற திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்.

    இந்த கோவில் அருகே உள்ள சன்னதிதெரு, கோவில் எதிரே மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்காய், பழம், பூ மாலை விற்கும் கடைகள், ஓட்டல், விடுதிகள் உள்பட 300-க்கும் அதிமான கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் வழியில் ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கின்றன. இதனால் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது பக்தர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அம்பத்தூர் ஆர்.டி.ஓ. தலைமையில் கருமாரி அம்மன் கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் 5 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அந்த கடைகள் அகற்றப்பட்டன.

    முன் அறிவிப்பு இல்லாமல் கடைகள் அகற்றப்பட்டதாக கூறி, இதற்கு அந்த பகுதி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளின் நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திடீரென்று கருமாரி அம்மன் கோவில் கதவை இழுத்து பூட்டினார்கள்.

    இதனால், கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அப்புறப்படுத்தி விட்டு கோவில் கதவை திறந்தனர்.

    பின்னர் வியாபாரிகள் கோவில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோவில் நிர்வாகத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோ‌ஷமிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். கடைகள் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 3 நாட்கள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும். #tamilnews
    ×