search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
    X

    ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றிய காட்சி.

    வேலூர் அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் நடவடிக்கை
    • தரைக்கடைகள் தினசரி வாடகை ரூ.41 ஆக குறைப்பு

    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் பழைய மீன் மார்க்கெட்டில் இருந்து ராஜா தியேட்டர் பஸ் நிறுத்தம் வரையில் சாலையோரம் ஏராளமானோர் கடைகள் வைத்துள்ளனர்.

    குறிப்பாக அந்த பகுதியில் உள்ள நடைமேடைகளை தின்பண்ட கடைகள் ஆக்கிரமித்துள்ளன.

    இதனால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் தினந்தோறும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் வெங்கடேசன் தலைமையில் அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை அகற்றினர்.

    அங்கிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அண்ணா சாலையில் நடைபாதை மற்றும் சாலை ஆக்கிரமித்து எந்த கவித காரணத்தைக் கொண்டும் கடைகள் வைக்கக்கூடாது பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் ஏற்கனவே தரைக் கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    எச்சரிக்கை

    அந்த இடத்தில் பழக்கடைகளை வைக்க வேண்டும் என மீறி சாலைகள் கடை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் இந்த சம்பவத்தால் இன்று காலை அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் மாநகராட்சி சார்பில் தரைக் கடைகள் கட்டப்பட்டுள்ளன .இந்த இடத்தில் வியாபாரம் ஆகாததால் வியாபாரிகள் மண்டி தெரு, லாங்கு பஜார் மற்றும் அண்ணா சாலைகளை ஆக்கிரமித்து பழக்கடைகள் வைத்துள்ளனர்.

    தற்போது சாலைகளில் கடை வைக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. மேலும் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் இருந்து தரைக் கடைகளுக்கு தினசரி வாடகை ஒரு 100 வசூலிக்கப்பட்டு வந்தது இந்த கடைகளுக்கு தற்போது தினசரி வாடகை ரூ.41 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×