search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "African Swine Flu"

    • நோய் பாதித்த பகுதிகளில் இருந்த 2 பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • தொற்று பாதித்த பன்றி பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு பன்றிப்பண்ணையில் 2 பன்றிகள் திடீரென இறந்தன. அவை வினோத நோய் பாதிப்பால் இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பன்றிகளின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள விலங்குகள் நோய் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு பரிசோதனை நடத்தியதில், இறந்த 2 பன்றிகளுக்கும் கொடிய வைரஸ் நோயான ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கொடிய வைரஸ் நோய் பாதித்த பகுதிகளில் இருந்த 2 பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி 2 பண்ணைகளில் இருந்த 9 பெரிய பன்றிகள் மற்றும் 9 குட்டி பன்றிகள் கொல்லப்பட்டு, நெறிமுறைகளின்படி தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக புதைக்கப்பட்டன. தொற்று பாதித்த பன்றி பண்ணையை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

    அந்த இடங்களுக்கு பன்றி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கொண்டுசெல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் தொற்று பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பன்றி இறைச்சி வினியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த பகுதிகளில் இருந்து மற்ற இடங்களுக்கு இறைச்சியை கொண்டுசெல்லவும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

    ×