search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADK"

    திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். #LSPolls
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    ஆரணி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வந்தவாசியில் நாளை மாலை 4.45 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர், செய்யாறில் மாலை 5.30 மணிக்கும், ஆரணியில் மாலை 6.30 மணிக்கும், போளூரில் இரவு 7.30 மணிக்கு பிரசாரம் செய்கிறார்.

    பின்னர், திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கலசப்பாக்கத்தில் இரவு 8 மணிக்கு பிரசாரம் செய்கிறார். இதையடுத்து, திருவண்ணாமலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றுகிறார். அதன் பிறகு, திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் தங்குகிறார்.

    இதைத் தொடர்ந்து மறுநாள் 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு கீழ்பென்னாத்தூரில் பேசுகிறார்.

    பின்னர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தனது பிரசாரத்தை முடித்து கொண்டு விழுப்புரம் மாவட்டம் செல்கிறார்.

    முதல்-அமைச்சரின் பிரசாரம் நடைபெறும் இடம் மற்றும் அவர் செல்லும் வழித்தடம், பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். #LSPolls
    ×