என் மலர்
நீங்கள் தேடியது "Adi Annamalai Temple Specialties"
- ஆதி அருணாசலம் என்ற பெயருடையது என்றும் கருதப்படுகிறது.
- தேவாரத்தில் 7 பாடல்கள் அடி அண்ணாமலையை குறிப்பிடுகின்றன.
அண்ணாமலையார் கோவிலின் ஆட்சிக்குட்பட்ட 3 கோவில்களில் ஒன்றாக விளங்கும் அடி அண்ணாமலை. அண்ணாமலையார் கோவிலுக்கும் முந்தியதும் என்றும், ஆதி அருணாசலம் என்ற பெயருடையது என்றும் கருதப்படுகிறது.
திருவண்ணாமலை நகரின் வடமேற்கு திசையில் உள்ள இந்த திவ்விய தலம், முன்னொரு காலத்து பிரம்ம தேவர் தம்மாற் படைக்கப்பட்ட திலோத்தமை மீது கொண்ட அதிமோகத்தினால் எங்கும் ஓடி திரிந்து தன்னிடத்திலே வந்து அங்கு எழுந்தருளும் சிவபெருமானை தரிசிக்கப்பெற்று அவர் அருளால் தங்கிச் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்டு மகிமை வாய்ந்தது. கிழக்கே திருமாலால் வழிபடப்பெற்ற மூர்த்தி அண்ணாமலை நாதர் எனவும் மேற்கே அவரால் வழிபடப்பெற்ற மூர்த்தி அடி அண்ணாமலை நாதன் எனவும் வழங்கப்படுவதாக புராணம் கூறுகிறது.
கிரிவலத்தின் 9 கி.மீட்டர் தொலைவில் மலையின் மேற்கு பகுதியில் உள்ள இச்சிற்றூரில் சிவபெருமானுக்கு அடி அண்ணாமலை என்றும் இப்பெரிய கோவிலும் மாணிக்கவாசகப் பெருமானுக்கு ஒரு கோவிலும், மாரியம்மன் கோவில் ஒன்றும், இரு குளங்களும் உள்ளன. திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி அண்ணாமலையை குறிப்பிடுகின்றன. மாணிக்க வாசகப் பெருமான், திருவெண்பாவை பாடிய இடத்திலேயே அவருக்கு கோவில் அமைத்து இருக்கிறது என்பர்.
இக்கோவில் அருகே உள்ள குளம் திருவெம்பாவையில் "பைங்கு வளை" எனத் தொடங்கும் பாடலில் பொங்குமடு (மடுகுளம்) என்று குறிப்பிட்டு இருக்கிறது. அடி அண்ணாமலையில் புதையுண்ட நகரத்தின் சின்னங்கள் கிடைக்கின்றன.
கார்த்திகை தீப நாளில் அண்ணாமலையார் கோவிலில் நிகழ்வது போன்ற சிறப்புகள் அடி அண்ணாமலை கோவிலிலும் நடைபெறுகின்றன. அண்ணாமலையார் கோவிலில் இருந்து இந்த கோவிலுக்கு சுரங்கப்பாதை இருப்பதாக சொல்வார்கள்.






