search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional Government Buses"

    • குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
    • 100 இடங்களில் நடக்கும் சம்பவங்களை பேரூராட்சி கண்காணிப்பு அறையின் பெரிய திரைகளில் பார்க்க முடியும்.

    கருமத்தம்பட்டி,

    கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் சசிகுமார் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராக இருந்து வருகிறார்.

    மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அந்த பகுதிகள் முழுவதும் சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 6 கி.மீ. சுற்றளவில் முக்கிய இடங்கள் மற்றும் தெருக்கள் உள்பட 100 இடங்களில் நடக்கும் சம்பவங்களை பேரூராட்சியில் உள்ள கண்காணிப்பு அறையின் பெரிய திரைகளில் பார்க்க முடியும். இதன்மூலம் அந்த பகுதியில் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்கள் நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. இதற்கான விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகமும் திறந்து வைக்கப்பட்டது.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், அனைத்து கிராமங்களிலும் கண்கா ணிப்பு காமிராக்கள் பொரு த்த வேண்டும், மேலும் பொதுமக்கள் வீடுகளிலும் கண்காணிப்பு காமிரா பொருத்த முன்வர வேண்டும். சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குற்றங்கள் குறைய வாய்ப்புகள் உண்டு என கூறினார்.

    பின்னர் கிராந்திகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் தனியார் பங்களிப்போடு 100 சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் குற்றங்கள் நடை பெறுவதை எளிதாக கண்டறிய முடியும்.

    கோவையில் ஒரு பேரூராட்சியில் முதன்முறையாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பேரூராட்சியில் கட்டணமில்லா இலவச சேவை மையம், நூலகம் என முன்னோடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

    மேலும் செல்போன் செயலி மூலம் நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்புவது கண்காணிக்கப்பட்டு வருகிறது, கோவையில் உள்ள அனைத்து பகுதிகளும் திடக்கழிவு மேலாண்மை சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை தரப்பட்டு உள்ளது. தேவைப்படும் பட்சத்தில், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் இயக்குனர் துவகராநாத்சிங், கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்விக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா்.
    • பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

     திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சுற்றுப் பகுதியை சோ்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.இந்த கல்லூரியானது காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 மணி வரையில் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8 மணி முதல் 9 மணி வரை பல்லடம் வழித்தடத்தில் போதுமான அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என தெரிகிறது. இதனால் இலவச பயணத்தை நம்பியுள்ள மாணவிகள் வேறு வழியின்றி தனியாா் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு செல்கின்றனா்.

    இது குறித்து எல்.ஆா்.ஜி., கல்லூரி மாணவிகள் கூறியதாவது:-

    அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்விக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் காலை வேளைகளில் போதிய அளவு அரசு பேருந்துகள் இல்லாததால் தனியாா் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்காகவே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    ×