search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "additional assistance fund"

    கஜா புயல் நிவாரணமாக தமிழகத்துக்கு ஆயிரத்து 146 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. #GajaCyclone
    புதுடெல்லி;

    கஜா புயல் காரணமாக தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 8 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு 1500 கோடி ரூபாய் கேட்டிருந்தது.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், சமீபத்தில் கஜா புயல் நிவாரணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ஆயிரத்து 146 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு என தெரிவிக்கப்பட்டது.



    இந்த நிதி மத்திய பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே, மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு 353.70 கோடி ரூபாய் நிவாரணமாக நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. #GajaCyclone
    ×