search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abolition Of Untouchability"

    • இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது
    • புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை

    அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளினையொட்டி தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

    இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அம்பேத்கர் பிறந்தநாளான, சமத்துவ நாளினையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை. பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • அண்ணல் அம்பேத்கர் பிறந்த திருநாளான ஏப்ரல் 14-ஆம் நாளை, "சமத்துவ நாள்" என அறிவித்துள்ளோம்
    • அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றி வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம்

    அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ல் தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள் மராட்டிய மாநிலத்தில் பிறந்தவர். இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர், பரோடா மன்னர் உதவியுடன் அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார். உயர் கல்விக்காக வெளிநாட்டிற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அண்ணல் அம்பேத்கருக்கு உண்டு.

    தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த சாதி காரணமாக இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளுக்கும் அவமானத்திற்கும் ஆளானவர். அதன் காரணமாக, தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துக் கடுமையாகப் போராடியவர். பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இந்து சமயத்தை துறந்து புத்த சமயத்தைத் தழுவியவர்.

    பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர். ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூக நீதிப் புரட்சியாளர் எனப் பன்முகத்திறன்களைப் பெற்றவர். இந்திய அரசியல் அமைப்புச் சாசனத்தின் வரைவுக் குழுத் தலைவராக விளங்கிய மிகப்பெரிய சட்ட மேதை அம்பேத்கர். நாடு சுதந்திரம் அடைந்த பின், பிரதமர் நேரு அமைச்சரவையில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் திகழ்ந்தவர்.

    அண்ணல் அம்பேத்கரின் புகழைப் போற்றும் வகையில் வியாசர்பாடி அரசுக் கலைக் கல்லூரிக்கு அம்பேத்கர் அரசுக் கலைக் கல்லூரி என்றும், சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்றும் பெயர் சூட்டியதுடன், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் அமைத்து, அதில் அவர் சிலையையும் நிறுவி அம்பேத்கரைப் போற்றியுள்ளது தி.மு.க. அரசு

    சாதி-சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்கிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த திருநாளான ஏப்ரல் 14-ஆம் நாளை, "சமத்துவ நாள்" என அறிவித்துள்ளோம். அந்நாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் ! அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றி வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம்.!. என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • மாணவர்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் செயல்பட்ட வேண்டும்.
    • அனைவரையும் சமத்துவமாக கருதி சகோதர எண்ணத்துடன் மட்டுமே பழகுவேன்.

    தஞ்சாவூர்:

    சமீப காலமாக உயர்கல்வி நிறுவனங்களில் தீண்டாமை கொடுமைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்நிலையில், ஜோதி அறக்கட்டளை சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தஞ்சையில் உள்ள மாற்றுத்திறன் பள்ளி மாணவர்கள் "தீயை விட தீமை, தீண்டாமை" என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    தஞ்சை மேம்பாலம் அரசு செவித்திறன் குறைபாடு டையோர் பள்ளி மாணவர்களும், அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவர்களும் சேர்ந்து, 12-ம் வகுப்பு மாணவர் ராமச்சந்திரன் தலைமையில் 'மாணவர்களாகிய நான் யாரையும் எந்த வித பாகுபாட்டுடன் நடத்தாமல் அனைவரையும் சமத்துவமாக கருதி சகோதர எண்ணத்துடன் மட்டுமே பழகுவேன்' என உறுதிமொழி எடுத்துக்கொ ண்டனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில்:-

    மாணவர்கள் அனைவரும் யாரிடமும் தீண்டாமையை கடைபிடி க்காமல் அனைவரிடமும் நல்லிணக்கத்துடன் செயல்பட்டு பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தஞ்சாவூர் பள்ளி மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றனர்.

    நிகழ்ச்சியில் அரசு செவி த்திறன் குறைபாடுடையோர் பள்ளி தலைமையாசிரியர் சக்ரவர்த்தி, அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளி தலைமையாசிரியர் சோபியா மாலதி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில், அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வை யாளர் கல்யாண சுந்தரம் உள்ளி ட்டோர் செய்திருந்தனர்.

    ×