search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abhishakam"

    • கார்த்திகை நட்சத்திரம் அன்றும் வளர்பிறை சஷ்டி அன்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
    • வருகிற 18-ந்தேதி சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

    தஞ்சாவூர் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலாக இக்கோவில் திகழ்கிறது.

    இத்தலத்தில் பக்தர்கள் திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய, முகூர்த்த ஓலை எழுத, திருமணம் செய்ய பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    இங்கு பிரதி கார்த்திகை நட்சத்திரம் அன்றும் வளர்பிறை சஷ்டி அன்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனையும் நடக்கிறது.

    இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டிப் பெருவிழா பத்து நாட்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலைப் போலவே இங்கும் நடைபெறுகிறது. அதன்படி வருகின்ற 12- ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 23-ம்தேதி வரை கந்தர் சஷ்டி பெருவிழா நடைபெறுகிறது . 12-ம்தேதி பூர்வாங்கம், 13-ம்தேதி துவஜாரோகணம் (கொடியேற்றம்) அன்ன வாகனம் , 14-ம்தேதி மான் வாகனம், 15-ம்தேதி பூத வாகனம்,16-ம்தேதி யானை வாகனம்,17-ம்தேதி ரிஷப வாகனம் (பஞ்சமூர்த்திகள் எழுந்தருளள்), 18-ம்தேதி வெகுவிமரிசையாக சூரசம்ஹாரம், ஆடு ,மயில் வாகனம்,19-ம்தேதி திருக்கல்யாணம் மற்றும் முத்துப்பல்லக்கு, 20-ம்தேதி குதிரை வாகனம், 21-ம்தேதி திருத்தேர், 22-ம்தேதி தீர்த்தம் கொடுத்தல் மயில் வாகனம் துவஜாஅவஅராகணம் (கொடி இறங்குதல்), 23-ம்தேதி சிறப்பு அபிஷேகம் ஊஞ்சல் ஏகாந்த சேவை நடக்கிறது.

    திருச்செந்தூர் சென்று கந்தசஷ்டி விரதம் இருக்க இயலாதவர்கள் இத்தலத்தில் கந்த சஷ்டி விரதம் இருந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கம்.
    • 18 வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள மூலை அனுமார் கோவிலில் பிரதி அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருடம் ஆடி மாதம் இரண்டு அமாவாசைகள் வருகிறது. இன்று முதல் அமாவாசையும் , ஆகஸ்ட் மாதம் 16-ம்தேதி இரண்டாவது அமாவாசை அன்று ஆடி அமாவாசையாக நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று ஆடி மாதம் முதல் அமாவாசையையொட்டி காலையில் லட்ச ராம நாமம் ஜெபமும் அதனை தொடர்ந்து வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் அபிஷேகம், சிறப்பு பாலாபி ஷேகம் அலங்காரம் தீபாரா தனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 6 மணிக்கு மூலை அனுமாருக்கு சிறப்பு அலங்காரமும் அதனையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.

    வருகின்ற ஆகஸ்ட் 16-ம்தேதி இக்கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு நடைபெறும் எலுமிச்சை பழங்களான சிறப்பு அலங்காரத்திற்கு பக்தர்கள் எலுமிச்சை பழங்கள் வாங்கி தந்து மூலை அனுமாரின் அருளை பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா , கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை கைங்கர்யம் குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×