search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadhaar verdict"

    காங்கிரசை பொருத்தவரை ஆதார் என்பது இந்தியரை வலுப்படுத்தும் சாதனம். காங்கிரசின் நோக்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். #AadhaarVerdict #RahulGandhi
    புதுடெல்லி:

    ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம், அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம், செல்போன் நம்பர் மற்றும் வங்கி சேவையை பெற ஆதார் கட்டாயம் ஆகியவை தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கல்வின்கர், ஏகே சிக்ரி, அஷோக் பூஷன், சந்த்ரசூட் ஆகியோர் அமர்வு இன்று மிக முக்கியமான இந்த தீர்ப்பை வழங்கியது. 

    ஆதார் அட்டை சட்ட அங்கீகாரம் கொண்டது எனவும், அரசின் சேவைகளை பெற ஆதார் கட்டாயம் எனவும் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். எனினும், வங்கிக்கணக்கு, செல்போன் எண், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரி சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும் தீர்ப்பு வழங்கினர்.

    நீதிபதி சந்திரசூட் மட்டும் ஆதார் அட்டைக்கு எதிராக தீர்ப்பை வழங்கினார். எனினும், 4 நீதிபதிகள் மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளதால் அந்த தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். 



    இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளதாவது, “காங்கிரஸைப் பொறுத்தவரை ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியரையும் வலுப்படுத்தும் சாதனமாகும். பாஜகவை பொறுத்தவரை அது மக்களை கண்காணிக்கவும், ஒடுக்கவும் பயன்படுத்த முனைந்தது. காங்கிரஸின் நோக்கமே சரியானது என்று இன்று உச்சநீதிமன்றமே தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தி விட்டது. காங்கிரஸின் நோக்கத்தை காப்பாற்றியமைக்காக உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
    ஆதார் அடையாள அட்டை செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ள நிதி மந்திரி அருண் ஜெட்லி, “ஆதார் அட்டையால் 90 ஆயிரம் கோடி ரூபாயை அரசு சேமித்துள்ளது’’ என தெரிவித்துள்ளார். #AadhaarVerdict #ArunJaitley
    புதுடெல்லி:

    ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம், அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம், செல்போன் நம்பர் மற்றும் வங்கி சேவையை பெற ஆதார் கட்டாயம் ஆகியவை தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. 

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கல்வின்கர், ஏகே சிக்ரி, அஷோக் பூஷன், சந்த்ரசூட் ஆகியோர் அமர்வு இன்று மிக முக்கியமான இந்த தீர்ப்பை வழங்கியது. 

    ஆதார் அட்டை சட்ட அங்கீகாரம் கொண்டது எனவும், அரசின் சேவைகளை பெற ஆதார் கட்டாயம் எனவும் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். எனினும், வங்கிக்கணக்கு, செல்போன் எண், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரி சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும் தீர்ப்பு வழங்கினர்.

    நீதிபதி சந்திரசூட் மட்டும் ஆதார் அட்டைக்கு எதிரான தீர்ப்பை வழங்கினார். எனினும், 4 நீதிபதிகள் மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளதால் அந்த தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். 

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ள மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, “சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆதார் அட்டையால் அரசுக்கு சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது” என தெரிவித்துள்ளார். 

    மேலும், மத்திய மந்திரிகள் ரவி சங்கர்  பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். 
    புதிதாக வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை என்றும், தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்களை கோரக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #AadhaarVerdict #JusticeSikri #Aadhaar
    புதுடெல்லி

    வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்பு, மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதார் வலுவூட்டுவதுடன் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் அளிக்கிறது. ஆதாரை போலியாக தயாரிக்க முடியாது. எனவே, இது மற்ற அடையாள அட்டைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

    ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது. அரசியல் சாசனத்தின்படி ஆதார் செல்லுபடியாகும். ஆனால் அதில் சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும். ஆதார் எண்களை தனியார் நிறுவனங்கள், செல்போன் நிறுவனங்கள் கோர முடியாது. தேச பாதுகாப்புக்கு மட்டுமே ஆதாரை பயன்படுத்த வேண்டும். ஆதார் தரவுகளை பாதுகாக்க உடனடியாக சட்டம் கொண்டு வரவேண்டும்.


    புதிய வங்கி கணக்குகள் தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை. யுஜிசி, நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம். பான் எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும். ஆதார்  தகவல்களை வெளிநாட்டில் இருந்து திருட வாய்ப்பு இல்லை. ஆதார் இல்லை என்பதற்காக தனிமனித உரிமை பாதிக்கப்படக் கூடாது.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.  #AadhaarVerdict #JusticeSikri #Aadhaar
    அரசியல் சாசனத்தின்படி ஆதார் செல்லுபடியாகும் என்றும், ஆதார் எண்களை தனியார் நிறுவனங்கள் கேட்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. #AadhaarVerdict #JusticeSikri
    புதுடெல்லி:

    இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி எண்கள் கொண்ட அடையாள அட்டை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி கடந்த 2009-ம் ஆண்டு ஆதார் அட்டை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

    இந்தியாவில் குறைந்த பட்சம் 182 நாட்கள் வசித்தவர்கள் ஆதார் அடையாள அட்டை பெற தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆதார் அட்டை 12 இலக்க எண்கள் கொண்டதாகும்.

    ஆதார் அட்டையில் கண்ணின் விழித்திரை, கைரேகை ஆகியவற்றுடன் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. தனி மனிதர்களின் தகவல்கள் அனைத்தும் கொண்ட ஆதார் அடையாள அட்டை தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் மானியத்தை பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து ஆதார் அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

    இதைத்தொடர்ந்து ஆதார் எண்களை வங்கிக்கணக்கு, ரேசன் கார்டு, சமையல் கியாஸ், பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் எண் அட்டையை ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டில் 31 பேர் ஆதார் கட்டாயம் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூ‌ஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடந்தது.

    விசாரணையின் போது வங்கி கணக்கு, செல்போன் எண், பான் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்கியதை ஆதரித்து மத்திய அரசு வாதிட்டது. ஆனால் வழக்கு தொடுத்தவர்கள் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மே மாதம் 10-ந்தேதி முடிந்தது. இதையடுத்து ஆதார் எண் கட்டாயம் ஆகுமா? அல்லது கட்டாயம் இல்லை என்று தீர்ப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.

    முதலில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தனது தீர்ப்பை வாசித்தார். அவரைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோரும் தீர்ப்பை வாசித்தார்கள். 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் ஒருமித்த கருத்தை வெளியிட்டதால் அவர்களது தீர்ப்பு ஏகமனதாக அறிவிக்கப்பட்டது.

    தீர்ப்பின் முக்கிய அம்சங்களாக அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும். தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது சட்ட விரோதம். தனி நபர் கண்ணியத்தை காக்க ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும். வங்கி கணக்கு, மொபைல் இணைப்பு, பள்ளி சேர்க்கை, நீட், சி.பி.எஸ்.இ. தேர்வு ஆகியவற்றுக்கு ஆதார் அவசியம் இல்லை. பான் எண்ணுக்கு மட்டும் ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டனர்.


    1. இந்தியாவில் ஆதார் விவகாரம் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்டது. எந்த வகையிலும் ஆதார் கார்டை போலியாக தயாரிக்க முடியாது.

    2. ஆதாருக்காக குறைந்த பட்ச அத்தியாவசிய தகவல்கள் மட்டுமே பெறப்படுகிறது.

    3. ஆதார் திட்டமும், சட்டமும் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டும் தான் பிரச்சனை.

    4. அரசின் நலத்திட்டங்களின் பலன்களை பெறவும், மானியம் பெறவும் ஆதார் அவசியமாகிறது என்ற மத்திய அரசின் கருத்து முக்கியமானது. சமூக நல திட்டங்கள் மக்களுக்கு போய் சேரும் என்ற மத்திய அரசின் எண்ணமும் குறிப்பிடத்தக்கது.

    5. ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்கள் போன்றதல்ல. ஆதார் சிறந்ததாக இருப்பதைவிட தனித்துவமானது என்பதே நல்லது. தனித்துவ அடையாளம் என்பது எளிய மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும்

    6. ஆதாருக்கான சட்ட விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட தகவல்கள் கசியாமல் பாதுகாத்திட வேண்டும்.

    7. தனிநபர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். தனிநபர் பாதுகாப்பை கவனமுடன் கையாள வேண்டும்.

    8. தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது, ஆதார் கட்டாயம் என்று கூறுவது சட்ட விரோதம்.

    9. ஆதார் தகவல்களை கசியவிடக் கூடாது.

    10. ஆதாருக்கான காரணம் காட்டி தனி நபர்களின் உரிமை மறுக்கப்படக்கூடாது.

    11. ஆதாரில் கையெழுத்து முதல் கைரேகை வரை முக்கியமானது. பாதுகாக்கப்பட வேண்டும். கையெழுத்தை கூட மாற்றலாம். கைரேகையை மாற்ற முடியாது.

    12. ஆதாருக்காக பெறப்படும் தகவல்கள் குறைவு. அதனால் கிடைக்கும் பயன்கள் அதிகம்.

    13. தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும்.

    14. சி.பி.எஸ்.இ., நீட் தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கக் கூடாது.

    15. பள்ளியில் குழந்தைகள் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயம் இல்லை. ஆதாரை காரணம் காட்டி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க மறுக்க கூடாது. ஆதாருக்காக கல்வி மற்றும் இதர சலுகைகளை மறுக்க கூடாது.

    16. அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்.

    17. வங்கி கணக்குகளை ஆதாருடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கி கணக்குகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை.

    18 மொபைல் எண்களுக்கும் சிம் கார்டு பெறவும் ஆதார் கட்டாயம் இல்லை.

    19. வருமானவரி கணக்கு தொடர்பான பான் எண்ணுக்கு ஆதார் கட்டாயம் ஆகும்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
    ×