search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரசின் நோக்கத்துக்கு ஆதரவாக இருந்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி - ராகுல் ட்வீட்
    X

    காங்கிரசின் நோக்கத்துக்கு ஆதரவாக இருந்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி - ராகுல் ட்வீட்

    காங்கிரசை பொருத்தவரை ஆதார் என்பது இந்தியரை வலுப்படுத்தும் சாதனம். காங்கிரசின் நோக்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். #AadhaarVerdict #RahulGandhi
    புதுடெல்லி:

    ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம், அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம், செல்போன் நம்பர் மற்றும் வங்கி சேவையை பெற ஆதார் கட்டாயம் ஆகியவை தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கல்வின்கர், ஏகே சிக்ரி, அஷோக் பூஷன், சந்த்ரசூட் ஆகியோர் அமர்வு இன்று மிக முக்கியமான இந்த தீர்ப்பை வழங்கியது. 

    ஆதார் அட்டை சட்ட அங்கீகாரம் கொண்டது எனவும், அரசின் சேவைகளை பெற ஆதார் கட்டாயம் எனவும் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். எனினும், வங்கிக்கணக்கு, செல்போன் எண், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரி சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும் தீர்ப்பு வழங்கினர்.

    நீதிபதி சந்திரசூட் மட்டும் ஆதார் அட்டைக்கு எதிராக தீர்ப்பை வழங்கினார். எனினும், 4 நீதிபதிகள் மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளதால் அந்த தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். 



    இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளதாவது, “காங்கிரஸைப் பொறுத்தவரை ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியரையும் வலுப்படுத்தும் சாதனமாகும். பாஜகவை பொறுத்தவரை அது மக்களை கண்காணிக்கவும், ஒடுக்கவும் பயன்படுத்த முனைந்தது. காங்கிரஸின் நோக்கமே சரியானது என்று இன்று உச்சநீதிமன்றமே தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தி விட்டது. காங்கிரஸின் நோக்கத்தை காப்பாற்றியமைக்காக உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×