search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar Center"

    • ஆதார்கார்டு திருத்தம் உள்ளிட்ட பணிகளை அருகில் உள்ள தபால் நிலையம் சென்று மேற்கொள்ள அறிவுறுத்துகின்றனர்.
    • தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பொதுமக்களை மிகவும் அலட்சியமாக பேசுவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஆலங்குளம் விளங்கி வருகிறது. இங்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் காய்கனி சந்தை, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், அரிசி ஆலைகள் உள்ளன.

    மேலும் இங்கு சார்பதிவாளர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட வகை ளும் உள்ளன. விரைவில் வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமை க்கப்பட உள்ளது. ஆலங்கு ளத்தை சுற்றிலும் அமைந்து ள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் தேவைகளுக்கு இங்கு தான் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக ஆதார் கார்டு திருத்தம், வருமானச்சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், ரேசன் கார்டு, பட்டா விண்ணப்பித்தல் உள்ளிட்ட வற்றுக்கும் ஆலங்கும்-தென்காசி சாலையில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு தான் மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    இந்த அலுவலகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சான்றி தழ்கள் விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஒரு மாதமாக அந்த மையம் பூட்டியே கிடக்கிறது. பொதுமக்கள் அங்கு வந்து ஏமாந்து திரும்பி செல்கின்றனர். இதுதொடர்பாக அங்கு பணியாற்றும் ஊழியர்க ளிடம் கேட்டால், அருகில் உள்ள தபால் நிலையம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவற்றில் சென்று ஆதார்கார்டு திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்து கின்றனர்.

    ஆனால் அங்கோ நாளொன்றுக்கு 5 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக திருத்தம் மேற்கொ ள்ளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் குறிப்பாக தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பொதுமக்களை மிகவும் அலட்சியமாக பேசுவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    எனவே தாலுகா அலுவலகத்தில் முடங்கி கிடக்கும் மையம் செயல்பட ஏதுவாக உடனடியாக அங்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் முறையாக செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தொண்டி:

    திருவாடானை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்திற்கு புகைப்படம் எடுக்கவும், பெயர், முகவரி திருத்தம் உள்பட பல்வேறு திருத்தங்களை சரி செய்வதற்காக பல தரப்பட்டவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு ஆதார் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

    ஆனால் எப்போது அந்த டோக்கன் வழங்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் பொதுமக்கள் அதிகாலையிலேயே டோக்கன் பெறுவதற்கு வந்து காத்திருக்கின்றனர். அதிகபட்சமாக சுமார் 25 முதல் 30 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து இங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் பொதுமக்களின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்வதில்லை.

    டோக்கன் பெற்றவர்கள் பல நேரங்களில் இணைய தள வசதியில் குறைபாடு, மின்தடை போன்ற பல காரணங்களால் மாலை வரை காத்திருந்து ஆதார் புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்பிசெல்கின்றனர். தனியார் இ-சேவை மையங்களில் இது போன்ற சேவைகளை பெறமுடிவதில்லை. இதனால் பொதுமக்கள் வேறுவழியின்றி இங்கு வரவேண்டியுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு வங்கி கணக்கு அவசியம் தேவை என்பதால் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வங்கி கணக்கு தொடங்க முடிகிறது.

    இதற்காக இம்மையத்திற்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பசியுடன் காத்திருக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. பல நேரங்களில் முன்னறிவிப்பு இல்லாமல் ஆதார் மையம் பூட்டப்பட்டு இருக்கும். இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் திருவாடானை ஆதார் மையம் முறையாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்கு கூடுதல் பணியாளர்கள், கணினி வசதி, காத்திருப்பவர்களுக்கு இருக்கை, நிழற்குடை, குடிநீர், கழிப்பறை, போதிய கட்டிட வசதிகள் போன்றவற்றை செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×