search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A fire broke out"

    • குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது.
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட அறச்சலூர் ரோட்டில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் உள்ள ஒரு குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.

    இந்த தீ விபத்தில் சில பொருட்கள் எரிந்துள்ளது.

    யாரோ புகை பிடிப்பதற்காக பற்ற வைத்த தீயை அணைக்காமல் சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    • ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள, மளவென பிடித்து தீ மற்ற இடங்களிலும் பரவ தொட ங்கியது. இது குறித்து பவானி தீய
    • தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தாக விசாரணயில் தெரிய வந்தது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கூத்தாடியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் ஆப்பகூடல்- பவானி மெயின் ரோட்டில் தகர செட் மற்றும் தென்னை ஓலையிலான ஒரு ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு இரு ந்தது.

    இந்த நிலையில் இந்த ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள, மளவென பிடித்து தீ மற்ற இடங்களிலும் பரவ தொட ங்கியது. இது குறித்து பவானி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது.

    இதையடுத்து தீ அணைப்பு துறை நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொட ர்ந்து அவர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்த னர். இதில் ஓலை கொட்ட கை எரிந்து நாசமானது.

    இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தாக விசாரணயில் தெரிய வந்தது. இதில் ஓட்டலில் இருந்த ரேஷன் கார்டு, டி.சி., மார்க் சீட், இட பத்தி ரம் உட்பட பல்வேறு பொரு ட்களும் எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
    • கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அங்குள்ள ஒரு கடையில் சம்சுதீன் என்பவர் மீன், கோழி வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அவரது கடையில் கியாஸ் சிலிண்டர் மற்றும் கோழி சுத்தம் செய்யும் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கு புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சம்சுதீன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், அது பலன் அளிக்கவில்லை. பின்னர் தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் அங்கிருந்து கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். தகவல் அறிந்த தாசில்தார் காயத்ரி, பள்ளி விட்டு மாணவ-மாணவிகள் செல்லும் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால், பாதுகாப்பு கருதி அந்த வழியாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லாத வகையிலும், கடைக்கு பின்புறம் உள்ள தாசில்தார் அலுவலக சாலையில் போக்குவரத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தும் நடவடிக்கை எடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×