search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A cow fell into a well"

    • 60 அடி கிணற்றில் விழுந்தது
    • பசுமாட்டை காயமின்றி காப்பாற்றினர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே நாயனசெருவு மூக்கனுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னமணி (வயது 55). இவருக்கு சொந்தமாக பசுமாடு உள்ளது.

    இதில் 7 மாதம் சினை மாட்டை மேய்ச்சலுக்காக நேற்று விவசாய நிலத்தில் அழைத்து சென்றார். அப்போது 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னமணி பசு மாட்டை மீட்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் பொறுப்பு கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி பசுமாட்டை காயமின்றி உயிருடன் மீட்டனர்.

    • பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.
    • எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னபாண்டி மனைவி மாலா. இவருடைய பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

    ×