search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு
    X

    விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்ட காட்சி.

    கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு

    • 60 அடி கிணற்றில் விழுந்தது
    • பசுமாட்டை காயமின்றி காப்பாற்றினர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே நாயனசெருவு மூக்கனுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னமணி (வயது 55). இவருக்கு சொந்தமாக பசுமாடு உள்ளது.

    இதில் 7 மாதம் சினை மாட்டை மேய்ச்சலுக்காக நேற்று விவசாய நிலத்தில் அழைத்து சென்றார். அப்போது 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னமணி பசு மாட்டை மீட்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

    இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் பொறுப்பு கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி பசுமாட்டை காயமின்றி உயிருடன் மீட்டனர்.

    Next Story
    ×