என் மலர்
நீங்கள் தேடியது "A ceremony"
- புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலுார்:
புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மாலை வேலூர் ரங்காபுரத்தில் உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது .
ரங்காபுரம் கோதண்ட ராமர் கோயில் எதிரே நடந்த சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில், போட்டியிட்ட அணிகளில் , காகி தப்பட்டறை அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து வாணவேடிக்கையுடன் ஸ்ரீ கிருஷ்ணர் வீதி உலா நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- பாணாவரத்தில் நடந்தது
- ஏராளமானோர் பங்கேற்றனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் யாதவா் ெதருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா் கோவிலில் கிருஷ்ணா் ஜெயந்தியை முன்னிட்டு 27-ம் ஆண்டு உறியடி திருவிழா நடந்தது.
முன்னதாக அதிகாலை கோவில் திறக்கப்பட்டு கிருஷ்ணா், ராதா, ருக்மணி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
தொடா்ந்து மகாபார சொற்பொழிவும் அன்னதானம் நடைப்பெற்றது. மாலை உறியடி திருவிழா, வழுக்குமரம் ஏறுதல், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை நடைப்பெற்றது. இதில் இளைஞா்கள் சிறுவா்கள் என ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து மாலை ஸ்ரீ கிருஷ்ணா் ராதா, ருக்மணி சாமிகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மங்கள வாத்தியங்கள் முழங்க திரு வீதி உலாவந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனர்.
அப்போது இளைஞா்கள் கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதனை தொடா்ந்து இரவு ஆரணி நாடக மன்றத்தினரால் தெருகூத்து நாடகம் நடைப்பெற்றது.
- வேலூர் காகிதப்பட்டறையில் நடந்தது
- ஏராளமானோர் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை ராதா ருக்மணி சமேத கிருஷ் ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறி யடி மற்றும் சறுக்கு மரம் ஏறும் திருவிழா நேற்று நடை பெற்றது.
இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு சறுக்கு மரம் ஏறினர். மேலும் ஒருவர் மீது ஒரு வர் ஏறி நின்று உறியடித்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் அங்குதிரண்டு நின்று கண்டுகளித்தனர்.
முன்னதாக ஆற்காடுசாலையில் மின் விளக்கு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. வீடுகள் மற்றும் சாலையில் ஏராள மான பொதுமக்கள் நின்று தரிசனம் செய்தனர்.






