என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா
- பாணாவரத்தில் நடந்தது
- ஏராளமானோர் பங்கேற்றனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் யாதவா் ெதருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா் கோவிலில் கிருஷ்ணா் ஜெயந்தியை முன்னிட்டு 27-ம் ஆண்டு உறியடி திருவிழா நடந்தது.
முன்னதாக அதிகாலை கோவில் திறக்கப்பட்டு கிருஷ்ணா், ராதா, ருக்மணி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
தொடா்ந்து மகாபார சொற்பொழிவும் அன்னதானம் நடைப்பெற்றது. மாலை உறியடி திருவிழா, வழுக்குமரம் ஏறுதல், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை நடைப்பெற்றது. இதில் இளைஞா்கள் சிறுவா்கள் என ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து மாலை ஸ்ரீ கிருஷ்ணா் ராதா, ருக்மணி சாமிகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மங்கள வாத்தியங்கள் முழங்க திரு வீதி உலாவந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனர்.
அப்போது இளைஞா்கள் கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதனை தொடா்ந்து இரவு ஆரணி நாடக மன்றத்தினரால் தெருகூத்து நாடகம் நடைப்பெற்றது.






