search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A broken down"

    • நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மரைகிராமங்கள் உள்ளன.

    இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு தாளவாடியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் மூலமாக சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    தமிழகம்-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் அருகே செல்லும் போது அடந்த வனப்பகுதியில் பஸ் பழுதாகி நின்றது.

    டிரைவர் மேற்கொண்டு பஸ்சை இயக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கடும் அவதிபட்டனர். பின்னர் 1 மணி நேரத்திற்க்கு பிறகு தாளவாடியில் இருந்து குளியாடா செல்லும் அரசு பஸ்சில் பயணிகள் அனைவரும் சத்தியமங்கலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி பயணிகள் கூறும்போது:-

    மலைப்பகுதியில் பழைய பஸ்கள் மட்டுமே இயக்கப் படுவதால் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. எனவே மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

    • இன்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற கண்டெய்னர் லாரி காலை 7 மணியளவில் திம்பம் மலைப்பாதை 9 வளைவில் திரும்பும் போது பழுதாகி நின்றது.
    • இதனால் திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

    தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற கண்டெய்னர் லாரி காலை 7 மணியளவில் திம்பம் மலைப்பாதை 9 வளைவில் திரும்பும் போது பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுது நீக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதனால் திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    ×