search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in a dense forest"

    • நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மரைகிராமங்கள் உள்ளன.

    இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு தாளவாடியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் மூலமாக சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    தமிழகம்-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் அருகே செல்லும் போது அடந்த வனப்பகுதியில் பஸ் பழுதாகி நின்றது.

    டிரைவர் மேற்கொண்டு பஸ்சை இயக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கடும் அவதிபட்டனர். பின்னர் 1 மணி நேரத்திற்க்கு பிறகு தாளவாடியில் இருந்து குளியாடா செல்லும் அரசு பஸ்சில் பயணிகள் அனைவரும் சத்தியமங்கலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி பயணிகள் கூறும்போது:-

    மலைப்பகுதியில் பழைய பஸ்கள் மட்டுமே இயக்கப் படுவதால் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. எனவே மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

    ×