search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vastu"

    • வீட்டு தோட்டத்தில் துளசி செடி இருப்பது மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
    • நெல்லி வளர வளர செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    அனைத்து வீடுகளிலும் செடிகள் மரங்கள் வைப்பது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. வீட்டின் கட்டமைப்புக்கு இடவசதிக்கு ஏற்றவாறு மரங்கள் சிறு செடிகள் கொடிகள் என்று தோட்டங்கள் பராமரிக்கப்படுகிறது. தாவரங்கள் வீட்டில் வளர்ப்பதால் காற்றோட்ட வசதியும் மனிதனின் உடலுக்கும் வீட்டிற்கும் பல நன்மைகளையும் தருகிறது.

    கட்டிடங்கள் கட்டுவதற்கு மட்டும் வாஸ்து பார்க்காமல் செடி கொடிகள் வைப்பது தோட்டத்தை உருவாக்குவதற்கும் தோட்டத்தில் தாவரங்கள் நடுவதற்கும் வாஸ்து சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டும். பண்டைய கால முதலே எந்தெந்த செடிகள் வீட்டில் வளர்க்கலாம் எங்கு வளர்க்கலாம் எந்த திசை நோக்கி வைக்கலாம் என்பது பற்றி தெரிந்து கொண்டு தோட்டங்கள் வைப்பது சால சிறந்தது.

    உங்கள் வீட்டு தோட்டத்தில் துளசி செடி இருப்பது மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மல்லிகை, மா, பலா, எலுமிச்சை, பாதாம், அன்னாசி, மாதுளை மற்றும் வேப்பமரம் இவைகளை வளர்ப்பதும் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். வேம்பும் மாதுளையும் மருத்துவ ரீதியாகவும் பல வகைகளில் பயன்படுகிறது.

    நெல்லி வளர வளர செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இவ்வகை தாவரங்கள் வீட்டில் வளர்ப்பதால் நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. வீட்டின் உட்புறத்தில் ஜன்னல் ஓரங்களில் செடிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அமைவது நேர்மறை ஆற்றல் வீட்டுக்குள்ளே வருவதை ஜன்னல்கள் தடுக்கின்றன.

    வீட்டின் வெளிப்புறத்தில் முள் செடிகளை வளர்த்தல் நல்லது. சூரிய ஒளி தண்ணீர் வசதி உள்ள இடங்களில் தாவரங்களை வளர்ப்பது மிக முக்கியம்.

    வீட்டில் மா வாழை மரங்களை நடுவதும் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும் வீட்டில் மரங்களை நடும்போது வீட்டிற்கும் மரங்களுக்கும் நடுவில் இடைவெளி அதிகமாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் மரத்தின் வேர்கள் கட்டடத்தை பாதிக்காத வண்ணம் செடிகளை பராமரிக்கலாம்

    வீட்டை சுற்றி தோட்டங்கள் அமைக்கும் போது நேர்மறை ஆற்றலை உருவாக்கும் தாவரங்களை தேர்வு செய்து நடுவது மிக முக்கியம். அவைகளை எந்த திசை நோக்கி எந்த திசையில் வைக்கலாம் என்பதையும் தெரிந்து நடுவது நல்லது.

    வடக்கு திசைகளில் தோட்டங்கள் அமைப்பது சிறப்பானது. துளசி கிழக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும். பெரிய மரங்களை வீட்டில் நடுவதை கொஞ்சம் தவிர்க்கலாம். தோட்டங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது அவைகளை வடக்கு திசையில் வைத்து பேணிக்காப்பது நன்றாகும்.

    கிழக்கு திசை துளசி மற்றும் மரம் வைப்பதற்கு மிகவும் உகந்தது. அழகான பூந்தோட்டங்கள் கிழக்கு திசைகளில் அமைக்கலாம். குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல் கிழக்கு திசையில் கட்டலாம். கிழக்கு திசையில் பெரிய மரங்கள் வைப்பது தவிர்க்க வேண்டும். கிழக்கு திசையில் சிறிய நீரூற்றுகளை அலங்கரிக்கலாம். இவையெல்லாம் நேர்மறை ஆற்றலை தரும்.

    தெற்கு திசையில் தோட்டத்தை அலங்கரிக்கும் சிலை போன்ற தோட்ட கலை அமைப்புகளை உருவாக்கலாம். அசோக மரம் போன்ற உயரமான மரங்களை தெற்கு திசை நோக்கி வைத்தால் மிகவும் நல்லது. மல்லிகை சாமந்தி போன்ற பூச்செடிகளை தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் வளர்க்கலாம்.

    மேற்கு திசையில் ஆலமரம் மா போன்ற பெரிய மரங்களை நடுவதற்கு ஏற்றது. கலை அலங்காரப் பொருட்களும் மற்றும் நீரூற்றுகளையும் மேற்கு திசையில் அலங்கரிக்கலாம்.

    வீட்டுக்குள்ளேயும் மணி பிளாண்ட் போன்ற செடிகளை வளர்ப்பது பண வரவை அதிகரிக்கும். வீட்டை சுற்றி தோட்டங்களில் கற்றாழ ஓமவள்ளி வெற்றிலை கொடி போன்ற மூலிகை செடிகளையும் வளர்ப்பது வீட்டிற்கும் உடல் நலத்திற்கும் உகந்ததாகும்.

    • வீட்டில் இருக்கும் ஒரு சில மூலைகளில் குப்பையை வைத்தால் பண கஷ்டம் ஏற்படும்.
    • எந்த மூலையில் குப்பையை வைக்கக்கூடாது என்று தெரிந்துக்கொள்வோம்.

    வீட்டைக்கூட்டி குப்பையை வீட்டில் இருக்கும் மூலையில் ஒதுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆம். அப்படி செய்தால் வீட்டில் தரித்திரம் உண்டாகும் என நம்புகின்றார்கள். ஆனாலும் அதை நம் காதில் எடுத்துக்கொள்வதில்லை. வீட்டைக்கூட்டி மூலையில் தான் வைப்போம்.

    வீட்டில் குப்பையை வைத்தால் வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு தடங்கள் ஏற்படும்.

    அதுபோலவே வீட்டில் இருக்கும் ஒரு சில மூலைகளில் குப்பையை வைத்தால் பண கஷ்டம் ஏற்படுமாம். அது எந்த மூலை என்று முதலில் தெரிந்துக்கொள்வோம்.

    நாம் வீடு கட்டும் போதே வாஸ்து பார்த்து கட்டுவது தான் வழக்கம். வீட்டில் இருக்கும் படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கதவு என்பவைகளை வாஸ்து பார்த்து தான் கட்டுவோம்.

    அவ்வாறு கட்டினால் தான் வீட்டில் நன்மைகள் ஏற்படும். தென்கிழக்கு மூலையை தான் பொதுவாக அக்னி மூலை என்று கூறுவோம்.

    தென்கிழக்கு திசையில் தான் பொதுவாகவே சமையலறை அமைப்பார்கள். சமையலறை இருக்கும் இடங்களில் குளியலறை இருக்க கூடாது. அதாவது நீரை பயன்படுத்தி எதுவும் செய்ய கூடாது.

    அதுபோலவே தென்கிழக்கு மூலையில் குப்பைகளையும் ஒதுக்க கூடாது. அவ்வாறு செய்யதால் வீட்டில் சம்பாதிக்கும் பணம் நீடிக்காது.

    பணக்கஷ்டம், தொழிலில் கஷ்டம் மற்றும் குடும்பத்தில் பிரச்சினை என்பவை ஏற்படும். ஆகவே வீட்டில் இருக்கும் தென்கிழக்கு மூலையில் குப்பைகளை ஒதுக்கி வைக்க கூடாது என்பதை மறக்கக்கூடாது.

    • வாசற்படிக்கு மேல் ஒரு படிகாரம் கல்லை கருப்புநிற கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும்.
    • ஒரு வீட்டின் முன்பாக விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை இருப்பது நல்லது.

    தெய்வீகத் தன்மை வாய்ந்த நேர்மறை சக்திகள் நம் வீட்டுக்குள் நுழைந்து நிரந்தரமாக தங்கி நமக்கும் நமது பிற்கால சந்ததியினருக்கும் எல்லாவிதமான நன்மைகளையும் ஏற்படுத்தி நிறைவான வாழ்க்கையை வாழ உதவும் சில எளிய குறிப்புகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்

    ஒருவரது வீட்டில் எப்போதும் நேர்மறையான ஆற்றல்கள் தங்கியிருக்க வீட்டில் இருக்கும் பெண்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினத்தன்றும் வீட்டு வாசற்படியை சுத்தம் செய்து, அந்த வாசற்படியில் மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வருவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் இப்படி செய்வதால் செல்வ மகளான லட்சுமி தேவி, அந்த வீட்டிற்குள் நிரந்தரமாக தங்கி, அந்த வீட்டில் நிறைவான செல்வம் இருக்கும்படி வழிவகை செய்வாள்

    வீட்டின் முன்பாக நிலை வாசற்படிக்கு மேல் ஒரு படிகாரம் கல்லை கருப்புநிற கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இப்படிச் செய்வதால் அந்த வீட்டிற்குள் நுழைய முயல்கின்ற எதிர்மறை ஆற்றல்களை அந்தப்படிகாரக்கல் ஈர்த்துக் கொண்டு நாம் வாழும் வீட்டை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும்.

    ஒரு வீட்டின் முன்பாக விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை இருப்பது அந்த வீட்டிற்கு இருக்கின்ற வாஸ்து குறைகளை போக்குவதோடு வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழையாமல் காக்கிறது. அதிலும் அந்த விநாயகர் சிலை வெள்ளருக்கு மரக்கட்டையால் செய்யப்பட்ட விநாயகர் சிலையாக இருந்து அந்த வெள்ளெருக்கு விநாயகர் சிலைக்கு தினம் மலர் சாற்றி தீப தூபம் காட்டி வருவதால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும். உங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கும் சுவர் அல்லது கதவில் செம்புக் கம்பியால் செய்யப்பட்ட "ஓம்" என்கிற பிரணவ மந்திர வடிவத்தை மாட்டி வைப்பதால் வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்

    சிவன் கோவில்களில் இருக்கின்ற பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்ற விபூதியை வாங்கி கொண்டு வந்து உங்கள் வீட்டின் வெளிப்புற வாயில் பகுதியின் இரண்டு புறமும் சிறிதளவு போட்டு வைப்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தீய ஆற்றல்களிடமிருந்து பாதுகாப்பை கொடுக்கும்

    உங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கின்ற நிலை வாயில் கதவில் "சுவஸ்திக்" சின்னம் அல்லது "திரிசூலம்" சின்னத்தை வரைந்து வைப்பது நல்லது. முருகப்பெருமானின் ஆயுதமான "வேல்" சின்னத்தையும் வீட்டின் கதவுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு மேலாக இருக்கின்ற இடத்திலோ வரைந்து வைப்பது நல்லது. உங்கள் வீட்டின் நிலை வாசலில் இரண்டு புறமும் மஞ்சள் கிழங்கு மாலையை மாட்டி வைப்பது நேர்மறையான ஆற்றல்களை உங்கள் வீட்டுக்குள் நுழைய வழிவகை செய்யும்.

    உங்கள் வீட்டின் வாயிற்படியின் இரண்டு பக்கத்திலும் மரம் அல்லது மண் கொண்டு செய்யப்பட்ட யானை பொம்மைகளை வைப்பதால் மங்களகரமான பலன்கள் அந்த வீட்டில் இருப்பவர்களின் வாழ்வில் உண்டாகும். மேலும் வீட்டு நிலை வாசல் படியின் மேலாக ஒன்று அல்லது ஏழு குதிரைகள் இருக்கின்ற வகையான படத்தினை மாட்டி வைப்பது உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்து விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற செய்யும் குதிரை படம் இல்லாதவர்கள் வண்டி இழுக்கும் குதிரையின் காலில் இருந்து கழண்ட பழைய குதிரை லாடத்தை மாட்டி வைப்பதும் மேற்சொன்ன பலன்களை உங்களுக்கு தரும்.

    தாங்கள் வசிக்கின்ற வீடுகளில் ஏதாவது ஒரு குறையினால் பொருளாதார ரீதியான கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் மஞ்சளில் தோய்த்த ஒரு பருத்தித் துணியில் பூஜையறையில் பூஜை செய்யப்பட்ட ஒரு தேங்காயை எடுத்து அந்த மஞ்சள் துணியில் வைத்து அதனுடன் சிறிது நாணயங்களை வைத்து முடிச்சி போன்று கட்டி உங்கள் வீட்டு வாயிற்படியில் மேலாக கட்டி வைப்பதால் பணம் சம்பந்தமான பிரச்சினைகளில் உங்களுக்கு நன்மையான பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

    • கடிகாரத்திற்கும் வாஸ்து உள்ளது.
    • பெரிய கூண்டு கடிகார வாஸ்து பிரகாரம் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

    * காலம் பொன்னானது என்பதற்கு ஏற்ப அனைத்து வீடுகளிலும் கடிகாரம் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. மரத்தால் ஆன சாவி கொண்டு இயங்கும் மணியடிக்கும் பெரிய சுவர் கடிகாரங்கள் பண்டைய காலத்தில் வீடுகளில் உபயோகப்படுத்தப்பட்டது. நேரத்தை குறிக்கும் வண்ணம் மணி சத்தம் கேட்கும்.

    * அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சத்தமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எண்ணிக்கையின் நேரத்துக்கு ஏற்ப எண்ணிக்கையில் சத்தமும் கேட்கும் மரத்தினாலான பெரிய கூண்டு கடிகார வாஸ்து பிரகாரம் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

    * வாஸ்து என்பது இன்று அனைவரது வாழ்க்கையிலும் அனைத்து இடங்களிலும் பொருள்களிலும் மிக முக்கியமானதாக உள்ளது. கடிகாரத்திற்கும் வாஸ்து உள்ளது. எந்த கடிகாரம் எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை வாஸ்து பரிகாரம் கடைபிடித்தால் நேர்மறை ஆற்றலை உருவாக்குவதுடன் வீட்டில் நல்ல மாற்றங்களையும் தருகிறது.

    * வீட்டு கதவு முன்னால் கடிகாரத்தை தொங்கவிடுதல் கூடாது. வீட்டுக்குள்ளே வீட்டின் அறைகளுக்கு ஏற்றவாறு மரத்தாலான கடிகாரங்களை உபயோகிப்பது மிகவும் நல்லது. அலங்கார கண்ணாடியாலான அலங்கார கடிகாரங்களையும் உபயோகிக்கலாம்.

    • வாஸ்து முறைப்படி வீடுகளை அமைக்க வேண்டும் என்று பலருக்கும் எண்ணம் இருக்கிறது.
    • வீடுகளில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    வாஸ்து முறைப்படி வீடுகளை அமைக்க வேண்டும் என்று பலருக்கும் எண்ணம் இருக்கிறது. அப்படி அமையாத வீடுகளில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    * பசு நெய் அல்லது நல்லெண்ணெயால் தினமும், மாலை வேளையில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.

    * வீட்டை தினமும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    * வீட்டில் தினமும் வாசனை திரவியங்கள், சாம்பிராணி, தூபம் போட்டு வர வேண்டும்.

    * சங்கு, மயில் இறகு போன்ற பொருட்களை வீட்டில் வைக்கலாம்.

    * வீட்டு முன் வாசலில் எலுமிச்சைப் பழம், பச்சை மிளகாய் போன்றவற்றை கட்டி தொங்க விடலாம்.

    * ஒரு குவளையில் நீர் வைத்து, அதில் எலுமிச்சைப் பழத்தை போட்டு வைக்கலாம்.

    * வீட்டின் நான்கு பக்கங்களிலும் கண்ணாடி அல்லது பீங்கான் குவளையில் கல் உப்பு போட்டு வைக்கவும். வாரம் ஒரு முறை உப்பை மாற்றவும். பழைய உப்பை வாஷ்பேஷனில் கொட்டிவிடவும்.

    * தோஷம் உள்ள இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கவும்.

    * வீட்டில் கணபதி ஹோமம், வாஸ்து தோஷம் செய்யலாம்.

    * வீட்டில் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாம்.

    * வாசல் படிகளில் மஞ்சள், குங்குமம் இட வேண்டும். தலைவாசலில் மாவிலை கட்டி தொங்க விடலாம்.

    * வீட்டில் துளசி மாடம் அமைப்பது நல்லது. அதனை தினமும் நல்ல முறையில் பராமரித்து வழிபட வேண்டும்.

    * ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு வேளையில் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடலாம்.

    * வீட்டில் தெய்வீக சுலோகங்கள், இறைவனின் நாமங்கள், மந்திரங்களை ஒலிக்க விடலாம்.

    • குபேர மூளை என சொல்லப்படும் தென்மேற்கு பகுதி உயரமாக இருக்க வேண்டும்.
    • வடக்கு பார்த்த வாசல் அல்லது கிழக்கு பார்த்த வாசல் இருப்பது நலம்.

    வாஸ்து சாஸ்திரப்படி வீடு மற்றும் பணி புரியும் இடம் இருப்பது நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்தது. பலரும் இப்போது கேட்கின்ற கேள்வி, வாஸ்து பற்றின பொதுவான விதிகளை சொல்லுங்கள் என்பதே!

    வாஸ்து பொதுவான விதிகள்:-

    குபேர மூளை என சொல்லப்படும் தென்மேற்கு பகுதி உயரமாக இருக்க வேண்டும். அந்த மூலையில் கனமான பொருட்களை வைக்கலாம். அந்த மூலையில் சாளரம் இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டின் தலைவர் புழங்கும் இடமாக, விலை உயர்ந்த பொருட்களை வைக்க கூடிய இடமாக இந்த தென்மேற்கு மூலை இருக்கும்.

    ஈசான மூலை என சொல்லப்படும் வடகிழக்கு பகுதி சற்றே தாழ்வாக இருந்தாலும் பரவாயில்லை. வளர்ந்திருப்பது நன்மை. கனமான பொருட்களை இங்கே வைக்கக் கூடாது. இறைவன் உறையும் இடம் என்பதால் சுத்தமாக இருக்க வேண்டும். நறுமணம் தரும் பொருட்களை இங்கே வைக்கலாம்.

    வீட்டின் தலை வாசல் உச்சத்தில் இருக்க வேண்டும்

    வடக்கு பார்த்த வாசல் அல்லது கிழக்கு பார்த்த வாசல் இருப்பது நலம். வீட்டுமனையும் அதில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடமும் சதுர வடிவம் அல்லது செவ்வக வடிவமாக இருப்பது சிறப்பு. அவ்வாறு கட்டும் போது வடக்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் காலியிடம் விட்டு கட்டலாம். குழந்தைகள் விளையாடுவதற்கும் வயதானவர்கள் மாலை நேரங்களில் நடப்பதற்கோ வாகனங்களை நிறுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தென்கிழக்கு பகுதியான அக்னி மூலையில் சமையலறை இருக்க வேண்டும். கிழக்கை நோக்கி பார்த்த வண்ணம் சமையல் செய்பவர்கள் நின்று சமையல் செய்யும்படி சமையல் மேடை இருப்பது நலம். வாயு மூளை என சொல்லப்படும் வடமேற்கு மூளையில் குளியலறை மற்றும் கழிவறைகள் வைக்கலாம்.

    • இங்கு வழிபாடு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூரில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.

    நாற்புறமும் அகழி சூழ அமைந்திருக்கும் இந்த கோவிலில் அருளும் இறைவன் அக்னீஸ்வரர், இறைவி கருந்தார்க்குழலி. சூளிகாம்பாள் என்ற பெயரும் இறைவிக்கு உண்டு.

    இத்தல இறைவியின் பெயர் கருந்தாள் குழலி. இங்கு சாயரட்சை காலத்தில் அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இத்தலத்தில் நிகழ்கால நாதர் என்னும் வர்த்தமானீஸ்வர், கடந்தகால நாதர் பூதேஸ்வரர், எதிர்கால நாதர் பவிட்ச்சேயேஸ்வர் ஆகியோரும் உள்ளனர். இவர்களை வழிபட்டால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் தோஷங்கள் நீங்கி நிகழ்காலத்தில் கிடைக்க வேண்டிய நன்மைகள், வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழலாம். அப்பர் பெருமான் உழவாரப்பணி செய்து கொண்டிருந்தபோது இறைவனடி சேர்ந்த திருத்தலம் இதுவாகும்.

    புதிதாக வீடு கட்டுபவர்கள் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் 3 செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு எடுத்து செல்கின்றனர். இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வடகிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும்.

    இவ்வாறு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி நாம் விரும்பியபடி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வாஸ்து பூஜை இத்தலத்தின் அனைத்து நாட்களிலும் செய்யப்படுகிறது.

    இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

    திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வந்து அங்கிருந்து நாகூர், திட்டச்சோி, திருமருகல் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 24 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் வேளாங்கண்ணி செல்லும் பஸ்சில் ஏறி நாகப்பட்டினத்தில் இறங்கி கோவிலை அடையலாம்.

    • வாழ்க்கை முழுவதுமே கற்றல் நடந்து கொண்டே இருக்கிறது.
    • வீட்டில் படிக்கும் வரை என்று ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.

    வீட்டுமனை வாங்கி புதிய வீடு கட்டுபவர்களுக்கு வீட்டில் படிக்கும் அறைகளை யார் யாருக்கு எங்கே? கட்டலாம் என்று கேள்வி எழும். முதலில் வீட்டில் படிக்கும் வரை என்று ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். சொந்த வீடாக நீங்கள் கட்டும்போது இதை முதலில் கவனியுங்கள்.

    வாழ்க்கை முழுவதுமே கற்றல் நடந்து கொண்டே இருக்கிறது. படிக்கும் அறையின் அளவு உங்கள் தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.

    படிக்கும் அறை வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். படிக்கும் குழந்தைகளோ பெரியவர்களோ கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து படிக்கும்படி இருப்பது நலம்.

    தென்மேற்கு அதாவது குபேர மூலையில் அமைந்துள்ள படுக்கையறையில் பெரியவர்கள் குடும்பத் தலைவன் தலைவி அறையாக இருப்பது நலம். திருமணமான இளம் தம்பதியினர்களுக்கும் தென்மேற்கு படுக்கையறை சிறப்பை சேர்க்கும்.

    வீட்டில் உள்ள வயதானவர்களும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குமான அறையை வடகிழக்கு திசையில் அமைக்கலாம். வீட்டில் விருந்தினர்கள் வரும்போது அவர்களை தங்க வைக்க வடமேற்கு திசையில் விருந்தினர் அறை அமைக்கலாம்.

    • வடகிழக்கு திசையில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.
    • நிலம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருப்பது நல்லது.

    அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய வாஸ்து நெறிமுறைகள்:-

    கட்டிடம் கட்டப் போகும் நிலம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருப்பது நல்லது.

    கட்டிடம் கட்டப் போகும் நிலத்திற்கு தெற்கு அல்லது வடக்கு பகுதியிலோ குலம் குட்டை ஏறி போன்ற நீர் நிலைகள் இல்லாமல் இருப்பது நன்று.

    அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தெற்கு மேற்கு, தென்மேற்கு வாசற்படியை தவிர்க்கலாம் சிலர் ஜாதகத்திற்கு இது சிறப்பாக இருக்கிறது என்றால் அவர்கள் வைத்துக் கொள்ளலாம்.

    அடுக்குமாடி கட்டிடம் மையப் பகுதியில் திறந்த வெளி இருப்பது சிறப்பு சூரிய ஒளி பாய்வதால் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு சிகப்பு கருப்பு மற்றும் வெளிர் நீளம் வண்ணத்தில் பெயிண்ட் அடிப்பதை தவிர்க்கலாம்.

    கட்டிடத்தின் வாசற்படி மற்றும் ஜன்னல்களின் மொத்த எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருப்பது நல்லது.

    குடியிருப்பின் பால்கனி கிழக்கு மற்றும் வடக்கு திசையில் அமைந்திருப்பது நல்லது.

    வடகிழக்கு திசையில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.

    குபேர வாசல்

    பொதுவாகவே வடக்கு பார்த்த வீடு எல்லோரும் விரும்புகின்ற வீடு. வடக்கு பார்த்த வாசலும் சிறப்புடையது. வடக்கை பார்த்த வாசலில் வாசல் வடக்கு பக்கம் நடு பகுதியில் அமைந்து உள்ளதா என்பது மிக முக்கியம். இந்த வாசலை தான் குபேர வாசல் என்றும் அழைப்பர். வடக்கு பார்த்த வாசல் வடகிழக்கில் இருந்தால் அது ஈசானிய மூலை ஓரளவுக்கு பரவாயில்லை. வடமேற்கு மூலையில் வடக்கு பார்த்த வாசப்படி அமைப்பதை தவிர்க்கலாம்.

    வடக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு வாசல் மிகச் சிறப்பான பலன்களை தரக்கூடியது. அதில் குறிப்பாக குரு லக்னாதிபதி குரு நட்சத்திர அதிபதி உள்ளவர்கள் குரு திசை நடக்கும்போது சிறப்பான பலனை பெறுவார்கள். குரு உச்சத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஜாதகத்தில் மற்ற விதங்களில் குரு பலமாக இருந்து பலன் கொடுத்து வருபவர்களுக்கும் இந்த வடக்கு வாசல் நிஜமாகவே குபேரவாசல் தான்.

    • வீட்டின் கிழக்கு திசையில் காலியிடம் இருக்க வேண்டும்.
    • கிழக்கும் வடக்கும் சேரும் மூலையை ஈசான்யம் என்பார்கள்.

    * கிழக்கு பாகத்தின் பலன்கள் ஆண்களுக்குரியது . கிழக்கு பாகம் பொதுவாக தாழ்வாக இருக்க வேண்டும். வீட்டின் கிழக்கு திசையில் காலியிடம் இருக்க வேண்டும். இதனால் உடல் நலம், பொருளாதாரம் மற்றும் வம்ச விருத்தி உண்டாகும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் கிழக்கிலிருந்து வெளியேறினால் அந்த வீட்டு ஆண்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும். கிழக்கில் கிணறு, செப்டிக்டங்க் இருந்தால் நன்மைகள் உண்டாகும்.

    * கிழக்கும் வடக்கும் சேரும் மூலையை ஈசான்யம் என்பார்கள். எல்லா திசைகளிலும் சிறந்தது ஈசான்ய மூலை. வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஈசான்ய மூலை தூய்மையாக இருக்க வேண்டும். கனமான பொருட்கள் இருக்கக் கூடாது மற்றும் தடுப்புகள் இருக்கக் கூடாது. வீட்டின் ஈசான்ய மூலையில் உயரமான மரங்கள் இருக்கக் கூடாது. ஈசான்யத்தில் கிணறுகள் இருக்கலாம். பூஜை அறை ஈசான்ய திசையில் அமைக்கலாம். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் ஈசான்ய மூலை வழியாக வெளியேறினால் செல்வ வளம் மற்றும் வாரிசு வளர்ச்சி உண்டாகும்.

    • அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி ‘வீட்டு வாஸ்து’ குறிப்பிடும்.
    • நிலம் அல்லது தன்மைகள் பற்றிச் சொல்வது ‘பூமி வாஸ்து.’

    வாஸ்து என்பது வீடு, மனை ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைச் சொல்வது மட்டுமே என்று சிலர் நினைக்கின்றனர். உண்மையில் வாஸ்து நான்கு வகையாக உள்ளது. அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    பூமி வாஸ்து

    நிலம் அல்லது மனையின் தன்மைகள் பற்றிச் சொல்வது 'பூமி வாஸ்து.' மனையானது கிழக்கு மனையா, மேற்கு மனையா, வடக்கு மனையா, அல்லது தெற்கு மனையா என்பது பற்றிக் குறிப்பிடும். மேலும் மனைக்கு ஒரு பக்கத்தில் மட்டும் சாலையா, இரு பக்கமும் சாலைகளா, மூன்று புறங்களும் சாலைகளா, அல்லது நான்கு பக்கங்களும் சாலைகளா என்பதையும் எடுத்துக்காட்டும். பூமியில் சல்லிய தோஷங்கள் ஏதாவது உள்ளதா?, மனையானது சாலையில் இருந்து பள்ளத்தில் உள்ளதா?, அந்த மனையில் மண்ணின் நிறம் மற்றும் இதற்கு முன்பு அந்த இடம் என்னவாக இருந்தது என்பதையும் குறிப்பிடும்.

    வீட்டு வாஸ்து

    வீடு, அரண்மனை, வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளி - கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பொதுத்துறை கட்டிடங்கள் போன்ற அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி 'வீட்டு வாஸ்து' குறிப்பிடும். ஒரு இடத்தில் எந்த அளவில், எந்த முறையில், எப்போது, எவ்வாறு கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்பதையும், சொந்த வீடு அல்லது வாடகை வீட்டு விஷயங்களையும் இது எடுத்துக்காட்டும்.

    மேலும் அந்தக் கட்டிடம் வங்கியா, மருத்துவமனையா, வணிக வளாகமா, பள்ளி- கல்லூரியா, உணவகமா, தங்கும் விடுதியா, தொழிற் சாலையா, தகவல் தொழில்நுட்ப அலுவலகமா, வாடிக்கையாளர் சேவை மையமா, மற்ற பொதுத்துறை நிறுவனமா, ஊடகங்கள் சார்ந்த அலுவலகமா என்பதைப் பொறுத்து அதன் வடிவமைப்புகளையும் இது சொல்லும். முக்கிய நுழைவுவாசல், வரவேற்பறை, பின்புறம் அமையும் வாசல்கள், சமையலறை, உணவு உண்ணும் அறை, ஓய்வு அறை, பணியாற்றும் அலுவலகம், தலைமை அதிகாரியின் அறை, மின்சாதனங்கள் அறை, படிக்கட்டுகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், பாத்ரூம்-டாய்லெட் போன்ற எல்லா அறைகளின் அமைப்பையும் இது குறிப்பிடும்.

    இருக்கை வாஸ்து

    வீடுகள், வியாபார, தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் ஆகியவற்றில் இடம்பெறும் இருக்கைகள், ஊஞ்சல்கள், படுக்கைகள் அமைக்கும் விதம் பற்றி கூறுவது 'இருக்கை வாஸ்து.' ஒரு வீடோ, அலுவலகமோ அல்லது வேறு நிறுவனம் சார்ந்த கட்டிடங்களோ எதுவாக இருந்தாலும், அங்கு பணியாற்றுபவர்கள் அமர்வதற்கான இடம், மீட்டிங் ஹால்கள், கேண்டீன்கள், ஓய்வு எடுக்கும் இடம் பற்றிய எல்லாவித தகவல்களையும் சொல்லும் வாஸ்து இது. நிறுவனத்தின் தலைவர் எங்கே அமர வேண்டும், அவரைச் சந்திக்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும், பணிபுரிபவர்கள் எங்கே அமர வேண்டும் என்ற நுட்பங்களையும் இது தெளிவுபடுத்தும்.

    வாகன வாஸ்து

    இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தேர், பல்லக்கு போன்ற அனைத்து வகையான போக்குவரத்து சாதனங்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் வாஸ்து இது. இரு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ வீட்டின் அத்தியாவசிய ஒரு தேவையாக மாறிவிட்டது. அந்த வாகனத்தை வீட்டில் எப்படி நிறுத்துவது, வாகனங்களை எப்போது வாங்குவது, வாராந்திர பூஜை போன்ற முறைகளை இது விரிவாகச் சொல்கிறது. நமது பயணங்களுக்குத் துணை செய்யும் வாகனங்களின் முக்கியத்துவம் பற்றி இந்த வாஸ்து பிரிவு குறிப்பிடுகிறது.

    • நம் வீட்டிலும் பூஜை அறையை ஈசான மூலையில் அமைக்கலாம்.
    • ஈசான மூலை அடைபட்டதாக இருக்கக் கூடாது.

    பூஜை அறை என்றாலே நம் எல்லோர் நினைவுக்கும் உடனே வருவது ஈசானிய மூலை. காரணம் இறைவன் உறையும் இடம் ஈசானிய மூலை எனலாம். நம்முடைய பூமிப்பந்தும் வடகிழக்கு பக்கமாகத்தான் சாய்ந்து இருக்கிறது.

    பிரபஞ்சத்திலிருந்து ஆவாரம் ஆற்றலும் வடக்கிழக்கின் வழியே தான் மற்ற இடங்களுக்கு பரவுகிறது எனவும் கூறுவர். கோவில்களில் யாகசாலை அமைக்கும் போது ஈசான மூலையை வடகிழக்கு மூலையை தெரிவு செய்வார்கள் என்பதை பார்க்கின்றோம்.

    எனவே நம் வீட்டிலும் பூஜை அறையை ஈசான மூலையில் அமைக்கலாம். பொதுவாக ஈசான மூலை வளர்ந்திருந்தால் சிறப்பு. இந்த ஈசானி மூலையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கி வைக்கலாம் அல்லது வடக்கு நோக்கி வைக்கலாம். ஈசான மூலை அடைபட்டதாக இருக்கக் கூடாது நல்ல காற்றோட்ட வசதி உள்ளதாக இருத்தல் சிறப்பு. குறிப்பாக கிழக்கில் இருந்து சூரியக்கதிர்கள் ஈசான மூலைக்குள் வருவது நல்லது.

    இவ்வாறு ஈசான மூலையில் பூஜையறை அமைக்க இயலவில்லை என்றால் வீட்டின் கிழக்கு பக்கத்தில் அதாவது வடகிழக்கு தென்கிழக்கு நடுவில் பூஜை அறை அமைக்கலாம். இதற்கும் வாய்ப்பு குறைவாக இருப்பின் வடக்கு திசை அதாவது வடகிழக்கு வடமேற்கு இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் பூஜை அறை அமைக்கலாம். மேற்படி எந்த இடத்தில் அமைத்தாலும் பூஜை மாடம் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி இருத்தல் சிறப்பு.

    வாஸ்து முறைப்படி படிக்கட்டுகள்

    ஒரு வீட்டில் படிக்கட்டுகள் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. வெளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் படிக்கட்டுகள், வெளிப்பகுதியை வீட்டின் உட்பகுதியோடு இணைக் கிறது. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் இரண்டு தளங்களை இணைக்கிறது. இவ்வாறு தொடர்பு பாலங்களாக விளங்கும் படிக்கட்டுகள் வாஸ்துவில் முக்கிய இடம் பெறுகிறது. கட்டிடக்கலை வல்லுனர்களும் கட்டுமான பொறியாளர்களும் வாஸ்து சாஸ்திர நிபுணர்களும் படிக்கட்டுகள் அமையும் இடத்தையும் அவை எத்திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனமாக கருத்தில் கொள்கின்றனர்.

    வீட்டில் எப்பொழுதும் நல்ல மங்கலமான நேர்மறையான சக்தி நிறைந்திருக்க வேண்டும் எனும் கோணத்தில் வாஸ்து செயல்படுகிறது. வீட்டின் எல்லா பகுதிகளிலும் சமமான நேர்மறை சக்தி இணக்கமாக விளங்க வேண்டும் என்பதில் வாஸ்து சாஸ்திரம் மிகுந்த அக்கறை காட்டுகிறது. எனவே தான் படிக்கட்டுகள் அமைப்பதில் வாஸ்துவின் பங்கு மிக முக்கியமாகிறது.

    வீட்டின் தென்கிழக்கு பகுதியில் படிக்கட்டுகள் அமையும் என்றால் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். தென்மேற்கில் அமைகிறது என்றால் மேற்கை பார்த்தவாறு அமைய வேண்டும். வடமேற்கில் அமைந்தால் வடக்கு திசை பார்த்தவாறு அமைய வேண்டும். வடகிழக்கில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.

    ×