search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "infant jesus"

    • இந்த விழா 15-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • தினமும் குழந்தை ஏசு ஜெபமாலை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    பார்வதிபுரம் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா இன்று(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணிக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். வடசேரி பங்கு அருட்பணியாளர் புரூனோ மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு குழந்தை ஏசு ஜெபமாலை, நவநாள், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் 15-ந்தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் ஜோண்ஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து மற்றும் திருவிழா நிறைவு திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஜேக்கப் ஆஸ்வின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு ஞாயிறு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் அருள் தலைமையில் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    • இந்த திருத்தலத்திற்கு ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள்.
    • கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த திருத்தலத்திற்கு அதிகம் வருகிறார்கள். அவர்கள் 9 நாட்கள் நவநாள் ஜெபம் அல்லது 9 வாரம் நவநாள் என்ற அடிப்படையில் குழந்தை இயேசுவை பிரார்த்தனை செய்கிறார்கள். அவ்வாறு செய்தவன் மூலம் ஏராளமானோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

    அன்பு, அமைதி, பொறுமை, தியாகம் இவற்றையெல்லாம் கிறிஸ்தவம் மிகவும் வலியுறுத்தி வருகிறது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க திருச்சபையில் குழந்தை இயேசுவின் மீதுள்ள பக்தி பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் மனதில் இருந்து வருகிறது. இயேசுவின் புனிதமான குழந்தை பருவத்தை கிறிஸ்தவர்கள் இன்றளவும் வணங்கி வருவதுபோல் புனித குழந்தை தெரசா, புனித பிரான்சிஸ் அசிசி, புனித அந்தோணியார் மற்றும் புனித அவிலா தெரசா போன்ற பல புனிதர்கள் தெய்வீக குழந்தை இயேசுவின் மீது மிகவும் பக்தி கொண்டிருந்தார்கள்.

    பூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் பெங்களூருவில் கடந்த 1969-ம் ஆண்டில் குழந்தை இயேசு மீதான பக்தி மக்களிடையே மிக அதிகமாக பரவ தொடங்கியது. பெங்களூருவில் உள்ள சொன்னேனஹள்ளி, வண்ணாரப்பேட்டை, நீலசந்திரா, ஆஸ்டின் டவுன், ஆனேபாளையா, ஈஜிபுரா போன்ற பகுதிகளில் பெருந்திரளான மக்கள் குழந்தை இயேசுவை வேண்டி ஜெபிக்க ஆரம்பித்தனர்.

    குழந்தை இயேசு மீது கொண்ட தீவிர ஈடுபாட்டால்பெண் ஒருவர் விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு பேராலயம் கட்ட இடம் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி அவர் ஒரு பாதிரியாரிடம் கூறி முறையிட்டார். அப்போது விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட இடம் கிடைக்க குழந்தை இயேசுவிடம் ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த பாதிரியார் குழந்தை இயேசுவை நோக்கி நவநாள் ஜெபத்தை ஆரம்பித்தார். அதன்பேரில் அங்கு தேவாலயம் கட்ட இடம் கிடைத்தது.

    1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தேவாலயம் கட்டப்பட தொடங்கிய நிலையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஜெபக்கூடத்தில் குழந்தை இயேசுவின் சொரூபம் மக்கள் வணங்குவதற்காக வைக்கப்பட்டது. அங்கு தினமும் மக்கள் வந்து குழந்தை இயேசுவிடம் தங்கள் பிரச்சினைகளை கூறி பிரார்த்தனை செய்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக சூறாவளி காற்று, புயல் இப்படி பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி அந்த ஜெபக்கூடம் குழந்தை இயேசுவின் அருளால் எந்தவித சேதமும் இன்றி இருந்தது. இதுவே கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் தொடர்ந்து நவநாள் ஜெபமும் நடத்தப்பட்டது.

    குழந்தை இயேசுவின் அற்புதத்தைக் கண்டு ஏராளமான மக்கள் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்திக்க ஆரம்பித்தனர். 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வியாழக்கிழமை அன்று முதல் நவநாள் ஜெபம் தொடங்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று இந்த தேவாலயத்தில் நவநாள் ஜெபம் நடக்கிறது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ந் தேதி இந்த திருத்தலத்தின் ஆண்டு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அதுவும் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    பல்வேறு காலக்கட்டத்திற்கு பிறகு தற்போதுள்ள தேவாலயம் கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி முழுமையாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் குழந்தை இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தால் தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திருத்தலத்திற்கு இன்று ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.

    மேலும், குழந்தைகள் உடல்நிலை ஆரோக்கியமாகவும், அவர்கள் சிறந்த அறிவுத்திறனுடன் இருக்க வேண்டியும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும் குழந்தைகளுடன் இந்த திருத்தலத்திற்கு வந்து குழந்தை இயேசுவை பிரார்த்திக்கிறார்கள்.

    • இன்று இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
    • நாளை திருக்கொடி இறக்கம் நடக்கிறது.

    அன்பிற்காகத் தம்மையே அர்ப்பணித்து எளிய முறையில் சிறிய வழியில் இறையன்பையும் பிறர் அன்பையும் நிறைவாக வாழ்ந்து காட்டிய எம் பாதுகாவலி புனித குழந்தை இயேசுவின் தெரசா இறையருளை வாரி வழங்கத் தேர்ந்தெடுத்த இடம்தான் கண்டன்விளை.

    கண்டன்விளை காரங்காடு பங்கின் ஒரு பகுதியாக இருந்தது. காரங்காடு பங்கு மிகப்பெரியதாக இருந்தமையால் புதிதாக இன்னும் ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென விரும்பிய அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா கண்டன்விளையில் இடம் தேர்வு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

    புனித குழந்தை இயேசுவின் தெரசா

    1923-ஆம் ஆண்டு ரோம் நகரில் புனித குழந்தை இயேசுவின் தெரசா அருளாளராக அறிக்கையிடப்பட்ட விழாவில் கலந்து கொண்ட அன்றைய ஆயர் பென்சிகர் கண்டன்விளையில் எழுப்பப்படும் ஆலயம் சிறுமலரின் முதல் ஆலயமாக அமையும் என ஆயர் பேரவையில் அறிவித்தது கண்டன்விளைப் பங்கை உலகறியச் செய்தது. இந்த ஆலயம் 7-4-1924 அன்று அர்ச்சிக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட புதிய ஆலயம் 7-4-1929 அன்று கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒலிக்கும் இரு ஆலய மணிகளும் புனித தெரசாவின் சொந்த சகோதரிகள் (அன்பளிப்பாக) அன்பாக அனுப்பி வைத்தவையாகும். அம்மணிகளில் நான் அனைத்து இந்திய மக்களையும் சிறுமலருக்கு வணக்கம் செலுத்த கண்டன்விளைக்கு அழைப்பேன் என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புனித குழந்தை தெரசாவின் இரு சொரூபங்களும் கார்மல் மாதா சொரூபமும் ரோமிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவையாகும்.

    திருத்தந்தையால் அனுப்பி வைக்கப்பட்ட புனிதையின் பேரருளிக்கமும் இங்கு பக்தர்களின் வணக்கத் திற்காக வைக்கப்பட்டுள்ளது. 1944-ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்ட கண்டன்விளைக்கு அருட் தந்தை. ஸ்டீபன் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப் பேற்றார். முன்னாள் பங்குத் தந்தையர் மற்றும் பங்கு மக்களின் முயற்சியால் புனித லூர்து அன்னை கெபி, ஒரே கல்லாலான கொடி மரம், சக்கரங்களையுடைய தேர், குருசடி, அருட்சகோதரியர் இல்லம், அருட்பணிப்பேரவை அலுவலகம், அழகிய பீடம், முப்பக்கக் கோபுரங்கள், நடுநிலைப்பள்ளி, தெரஸ் அரங்கு, செபமாலை மலைச்சிற்றாலயம், கூடாரம், யூடிக்கா மருத்துவமனை, புனித தெரசா மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி ஆகிய அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன.

    நூற்றாண்டு விழா

    1994-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட பங்கு பொன் விழாவின் நினைவாக, அன்றுமுதல் வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.15 மணிக்கு செபமாலையும் தொடர்ந்து நவநாள் திருப் பலியும் நடைபெற்று வரு கின்றன. பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்று இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர். இங்கு நாள்தோறும் காலை 6.15 மணிக்கு ஞாயிறு மற்றும் திருநாட்களில் காலை 7 மணிக்கும் திருப்பலி நடைபெற்று வருகிறது.இந்த ஆலயத்தின் நூற்றாண்டு விழா 2023-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ம் ஆண்டு நிறைவு பெறஉள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    தேர்ப்பவனி

    விழாவில் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு, காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலியை திருத்துவபுரம் பங்குதந்தை பீட்டர் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். கருமாத்தூர் குருமட அதிபர் தேவராஜ் அருளுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 9.30 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.

    திருவிழா சிறப்பு திருப்பலி

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மறைமாவட்ட அருட்பணியாளர் இஞ்ஞாசி ராஜசேகரன் தலைமை தாங்கி மலையாள திருப்பலியை நிறைவேற்றுகிறார். 11.30 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு திருக்கொடி இறக்கம் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வெ.சகாய ஜஸ்டஸ், இணை பங்குதந்தை சத்தியநாதன், துணைத்தலைவர் பி.எம். ஜஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லல்லி மலர், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    பாவத்தில் விழுகையில் மனம் திரும்பி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே இந்த நூல் சொல்லும் அடிப்படைச் செய்தி.
    சாமுவேல் முதல் நூலும், இரண்டாம் நூலும் இணைந்த ஒரே நூலாக இருந்தவை. எபிரேயத்திலிருந்து கிரேக்கத்துக்கு மொழிபெயர்த்த போது அதை வசதிக்காக இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்கள். சாமுவேல் இரண்டாம் நூல் தாவீது மன்னனைச் சுற்றியே நகர்கிறது.

    சாமுவேல் நூலை எழுதியவர் இறைவாக்கினர் சாமுவேல் என பாரம்பரியம் சொல்கிறது. அவருடன் நாத்தானும், காத்தும் இணைந்து இந்த நூலை உருவாக்கினார்கள் என்பது வரலாறு.

    ஆனால் முதல் பாகத்திலேயே சாமுவேல் இறந்து விடுவதால், இந்த பாகத்தை நாத்தான், காத் போன்றவர்கள் எழுதினார்கள், அல்லது அவர்களுடைய எழுத்தை பிற்காலத்தில் தொகுத்தார்கள் என இறையியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    கிமு 971 -க்கும், 1011-க்கும் இடைப்பட்ட நாற்பது ஆண்டுகாலத்தை இந்த நூல் மையப்படுத்துகிறது. அது தான் தாவீது மன்னன் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செலுத்திய காலம்.

    சாமுவேல் முதலாம் நூல் இஸ்ரயேல் மக்களின் முதல் மன்னனான சவுலையும், அவருடைய ஆட்சியையும் பலவீனங்களையும் பேசியது. இறைவனை விட்டு விலகி நடந்த சவுல் மன்னனின் வாழ்க்கை அது.

    சாமுவேல் இரண்டாம் நூல், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்த தாவீது மன்னனையும், அவரது ஆட்சியையும், அவருடைய பலம், பலவீனம் போன்றவற்றைப் பேசுகிறது. தன்னை எதிர்த்த சவுலின் மறைவிற்கும், தன்னை நேசித்த யோனத்தானின் மறைவுக்கும் தாவீது மன்னர் கசிந்துருகுகிறார். அது அவருடைய இளகிய மனதை எடுத்துக்காட்டுகிறது.

    தாவீது மன்னனின் வழிமரபிலிருந்து தான் மீட்பர் தோன்றுவார் எனும் இறைவாக்கு பின்னர் இயேசுவின் மூலம் நிறைவேறியது. ஆபிரகாமுக்கும், இயேசுவுக்கும் இடையேயான மையப்புள்ளியாய் தாவீது மன்னன் இருக்கிறார் என வைத்துக் கொள்ளலாம். நீதி, துணிச்சல், ஞானம், இறையச்சம், மனிதநேயம் போன்றவையெல்லாம் அவரிடம் காணப்பட்ட சில முக்கிய குணாதிசயங்கள்.

    இந்த நூலில் இருபத்து நான்கு அதிகாரங்களும், 695 வசனங்களும், 20,612 வார்த்தைகளும் உள்ளன. இது விவிலியத்தில் உள்ள பத்தாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது. விவிலியத்தில் மொத்தம் பன்னிரண்டு வரலாற்று நூல்கள் உள்ளன அவற்றில் இது ஐந்தாவது நூல்.

    இருபத்து நான்கு அதிகாரங்கள் உடைய இந்த நூலின் முதல் பத்து அதிகாரங்கள் தாவீது மன்னனின் வெற்றிப் பயணத்தை விவரிக்கிறது. அவரது வெற்றிகளையும், அவரை மக்கள் போற்றுவதையும், அவரது நடனத்தையும் சுவை பட விவரிக்கிறது. தனது நண்பன் யோனத்தானின் உடல் ஊனமுற்ற மகனை தன்னோடு அரண்மனையில் வைத்து பராமரிக்கும் அவரது அன்பு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. தனது ஆட்சிக்குட்பட்ட எந்த இடத்திலும் சிலை வழிபாடு நடக்காமல் பார்த்துக் கொண்ட இஸ்ரயேலின் மன்னராக தாவீது விளங்கினார்.

    நூலின் இரண்டாவது பகுதியில் தாவீது மன்னனின் பலவீனம் பதிவு செய்யப்படுகிறது. உரியா என்பவருடைய மனைவியான பத்சேபா மீது பொருந்தாக் காதல் கொள்கிறார் மன்னன். அவளை அடைவதற்காக அவரது கணவனை சூழ்ச்சியால் கொல்கிறார். இதனால் கடவுளின் கோபம் அவர் மேல் விழுகிறது. பத்சேபாவுக்குப் பிறக்கும் அவரது குழந்தை இறந்து விடுகிறது. அது தாவீது மன்னனை கலங்கடிக்கிறது.

    தனது தவறை நாத்தான் இறைவாக்கினர் மூலம் புரிந்து கொள்ளும் மன்னர் உடனடியாக கதறி, இறை வனிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதில் தாவீது மன்னன் தனித்துவம் பெறுகிறார். தவறிழைக்கும் போதெல்லாம் இறைவனே கதியென திரும்பி வருவதில் அவரது இறை நம்பிக்கை வெளிப்படுகிறது.

    அதனால் தான் இறைவன் தாவீதையும், அவரது தலை முறைகளையும் தனது வாக்குறுதியின் படி காக்கிறார்.

    அவரது வாழ்க்கையில் சில நிகழ்வுகள் கசப்பானவையாகவும், நெகிழ்ச்சியானவையாகவும் நடந்து விடுகின்றன. அம்னோன் என்னும் அவரது ஒரு மகன், தனது மாற்றாந்தாய்க்கும் பிறந்த சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார். அவரை, இன்னொரு மகன் அப்சலோம் கொன்று விடுகிறார். பின்னர் அவர் தாவீது மன்னனுக்கு எதிராகவே திரும்பி விடுகிறார்.

    அவரது மகன் அப்சலோமுக்கும், அவருக்கும் இடைேயயான அந்த மனக்கசப்பும். தந்தையைக் கொல்லத் தேடும் மகனின் வெறித்தனமும், மகனை வெறுக்க முடியாத தந்தை தாவீதின் தவிப்பும் இந்த நூலின் ஈரமாக எழுதப்பட்டிருக்கின்றன.

    தாவீது மன்னன் எழுதிய இரண்டு பாடல்களும் இந்த நூலில் சிறப்பிடம் பெறுகின்றன. ஒரு ஏழை ஆடு மேய்ப் பனான தாவீது, இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்டு ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நாற்பது ஆண்டுகள் சிறப்புற வழிநடத்தியது வியப்பின் வரலாறு.

    பாவம் செய்வது இயல்பு. எவ்வளவு பெரிய இறை மனிதராக இருந்தாலும் அவர் பாவத்தில் விழும் வாய்ப்பு நிச்சயம் உண்டு. அப்படி பாவத்தில் விழுகையில் மனம் திரும்பி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே இந்த நூல் சொல்லும் அடிப்படைச் செய்தி. அற்புதமான கதைகளுக்காகவும், ஆழமான ஆன்மிக புரிதலுக்காகவும் இந்த நூலை நிச்சயம் படிக்கலாம்.

    சேவியர்
    பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.
    பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.

    வரலாறு

    1628ல் இளவரசி பொலிக்சேனா (1566-1642) பிராகா நகர் கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியதிலிருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. இந்தச் சொரூபம், அவிலா புனித தெரேசாவால் எசுப்பானிய அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1] அந்தக் குடும்பத்தின் விலையேறப் பெற்ற சொத்தாக மதிக்கப்பட்ட இந்தச் சொரூபம், இளவரசி பொலிக்சேனாவின் திருமணப் பரிசாக அவரது தாய் மரிய மான்ரிக்கால் 1603ல் வழங்கப்பட்டது.

    குழந்தை இயேசு பக்தியால் பல்வேறு அற்புதங்களைப் பெற்றுக்கொண்ட இளவரசி பொலிக்சேனா, தன்னிடம் இருந்த குழந்தை இயேசு சொரூபத்துக்கு அரச உடைகளும், மணிமகுடமும் அணிவித்து அழகு பார்த்தார். அரசர் 2ம் பெர்டினான்ட், தனது தலைநகரை பிராகாவிலிருந்து வியன்னாவுக்கு மாற்றியபோது, பொலிக்சேனா இந்தக் குழந்தை இயேசு சொரூபத்தை கார்மேல் சபைத் துறவிகளிடம் ஒப்படைத்தார். அவர்கள் குழந்தை இயேசு பக்தியை மக்களிடையே பரப்பினர். போர் உள்ளிட்ட சில காரணங்களால், துறவிகள் வாழ்ந்த கார்மேல் மடம் சிறிது காலம் மூடப்பட்டது. அக்காலத்தில் இந்தச் சொரூபம் மறைவான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டது.

    1637ஆம் ஆண்டு, கரங்கள் சேதமடைந்த குழந்தை இயேசுவின் இந்தச் சொரூபத்தை அருட்தந்தை சிரிலஸ் மீண்டும் கண்டெடுத்தார். அவர் குழந்தை இயேசு முன்பாகச் செபித்துக் கொண்டிருந்த வேளையில், "எனக்குக் கரங்களைக் கொடு; நீ என்னை மகிமைப்படுத்தினால், நான் உனக்கு அமைதியும் உயர்வும் தருவேன்" என்ற குரலைக் கேட்டார். அதன் பிறகு குழந்தை இயேசுவின் கரங்கள் சரிசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்நகரில் பரவிய கொள்ளை நோய் நீங்கியது. குழந்தை இயேசுவை நாடிச் சென்ற அனைவரும் அற்புதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அதனால், குழந்தை இயேசுவின் பக்தி உலமெங்கும் விரிந்து பரவியது.

    இயேசு கிறிஸ்துவின் குழந்தைப் பருவத்தைத் தியானிக்கும் பக்திமுயற்சியாக இது அமைந்துள்ளது.

    இன்றளவும், பிராகா நகர் குழந்தை இயேசுவை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிராகா குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழாவின் நிறைவில், குழந்தை இயேசுவின் திருப்பவனியும், குழந்தை இயேசுவுக்கு மகுடம் அணிவித்தலும் இக்காலம் வரை மரபாகத் தொடர்கின்றன.

    முற்காலத்தில், அயர்லாந்து நாட்டுத் திருமண நிகழ்ச்சிகளின்போது காலநிலை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு முந்திய நாள் இரவில் தங்கள் இல்லத்தின் முன்பாகப் பிராகா நகர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.[2]

    நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரேகு நகர் குழந்தை இயேசுவின் இரண்டு மரச் சொரூபங்கள் செய்யப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூர் குழந்தை இயேசு ஆலயத்திலும், பெரம்பூர் புனித தெரேசா ஆலயத்திலும் இந்தச் சொரூபங்கள் உள்ளன. 
    தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள குழந்தை ஏசு ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது.
    தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் குழந்தை ஏசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துக்கு தஞ்சை மாவட்ட தலைமை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமை தாங்கினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை ஏசுவை வைத்து தேர்பவனி நடைபெற்றது. பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் புனிதம் செய்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். முன்னதாக கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    விழாவில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி, ஆலய அதிபர் வென்சஸ்லாஸ் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
    பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.
    வரலாறு

    1628ல் இளவரசி பொலிக்சேனா (1566-1642) பிராகா நகர் கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியதிலிருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. இந்தச் சொரூபம், அவிலா புனித தெரேசாவால் எசுப்பானிய அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் குடும்பத்தின் விலையேறப் பெற்ற சொத்தாக மதிக்கப்பட்ட இந்தச் சொரூபம், இளவரசி பொலிக்சேனாவின் திருமணப் பரிசாக அவரது தாய் மரிய மான்ரிக்கால் 1603ல் வழங்கப்பட்டது.

    குழந்தை இயேசு பக்தியால் பல்வேறு அற்புதங்களைப் பெற்றுக்கொண்ட இளவரசி பொலிக்சேனா, தன்னிடம் இருந்த குழந்தை இயேசு சொரூபத்துக்கு அரச உடைகளும், மணிமகுடமும் அணிவித்து அழகு பார்த்தார். அரசர் 2ம் பெர்டினான்ட், தனது தலைநகரை பிராகாவிலிருந்து வியன்னாவுக்கு மாற்றியபோது, பொலிக்சேனா இந்தக் குழந்தை இயேசு சொரூபத்தை கார்மேல் சபைத் துறவிகளிடம் ஒப்படைத்தார். அவர்கள் குழந்தை இயேசு பக்தியை மக்களிடையே பரப்பினர். போர் உள்ளிட்ட சில காரணங்களால், துறவிகள் வாழ்ந்த கார்மேல் மடம் சிறிது காலம் மூடப்பட்டது. அக்காலத்தில் இந்தச் சொரூபம் மறைவான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டது.

    1637ஆம் ஆண்டு, கரங்கள் சேதமடைந்த குழந்தை இயேசுவின் இந்தச் சொரூபத்தை அருட்தந்தை சிரிலஸ் மீண்டும் கண்டெடுத்தார். அவர் குழந்தை இயேசு முன்பாகச் செபித்துக் கொண்டிருந்த வேளையில், "எனக்குக் கரங்களைக் கொடு; நீ என்னை மகிமைப்படுத்தினால், நான் உனக்கு அமைதியும் உயர்வும் தருவேன்" என்ற குரலைக் கேட்டார். அதன் பிறகு குழந்தை இயேசுவின் கரங்கள் சரிசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்நகரில் பரவிய கொள்ளை நோய் நீங்கியது. குழந்தை இயேசுவை நாடிச் சென்ற அனைவரும் அற்புதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அதனால், குழந்தை இயேசுவின் பக்தி உலமெங்கும் விரிந்து பரவியது.

    பக்திமுயற்சி

    இயேசு கிறிஸ்துவின் குழந்தைப் பருவத்தைத் தியானிக்கும் பக்திமுயற்சியாக இது அமைந்துள்ளது.

    இன்றளவும், பிராகா நகர் குழந்தை இயேசுவை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிராகா குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழாவின் நிறைவில், குழந்தை இயேசுவின் திருப்பவனியும், குழந்தை இயேசுவுக்கு மகுடம் அணிவித்தலும் இக்காலம் வரை மரபாகத் தொடர்கின்றன.

    முற்காலத்தில், அயர்லாந்து நாட்டுத் திருமண நிகழ்ச்சிகளின்போது காலநிலை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு முந்திய நாள் இரவில் தங்கள் இல்லத்தின் முன்பாகப் பிராகா நகர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரேகு நகர் குழந்தை இயேசுவின் இரண்டு மரச் சொரூபங்கள் செய்யப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூர் குழந்தை இயேசு ஆலயத்திலும், பெரம்பூர் புனித தெரேசா ஆலயத்திலும் இந்தச் சொரூபங்கள் உள்ளன.

    நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனியில் அற்புத குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய கொடியை கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஏற்றி வைத்தார்.

    இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை மாலையில் செபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசிஸ் பென்சிகர் மறையுரை நிகழ்த்துகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு செபமாலை, திருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது. கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் மைக்கல் ஏஞ்சலஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் ஜெய்ல்சிங் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான் பெல்லார்மின் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
    நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனியில் அற்புத குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு செபமாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும். நிகழ்ச்சியில் கோட்டார் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை மாலையில் செபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசிஸ் பென்சிகர் மறையுரை நிகழ்த்துகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு செபமாலை, திருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது. கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் மைக்கல் ஏஞ்சலஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் ஜெய்ல்சிங் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான் பெல்லார்மின் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    மணலி புதுநகர் குழந்தை ஏசு ஆலய 39-வது ஆண்டு விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    மணலி புதுநகர் குழந்தை ஏசு ஆலய 39-வது ஆண்டு விழா நேற்று மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதற்காக புதியதாக ரூ.12 லட்சத்தில் முற்றிலும் பளிங்கு கற்கலால் ஆன 65 அடி உயரத்தில் கொடி மரமும், அதன் உச்சியில் குழந்தை ஏசு உருவ சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக பளிங்கு கற்களை வியட்நாமில் இருந்து கொண்டுவரப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்து செதுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று ஆலயத்தில் நிறுவப்பட்டது.

    கொடி மரத்தை தர்மபுரி மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயாஸ் பிரதிஷ்டை செய்து வைத்து, கொடியேற்றி வைத்தார். இதில் பங்கு தந்தை தாமஸ் இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×