என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்10 Jan 2019 3:33 AM GMT (Updated: 10 Jan 2019 3:33 AM GMT)
நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில், பொன்னப்பநாடார் காலனியில் அற்புத குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய கொடியை கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஏற்றி வைத்தார்.
இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை மாலையில் செபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.
வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசிஸ் பென்சிகர் மறையுரை நிகழ்த்துகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு செபமாலை, திருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது. கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் மைக்கல் ஏஞ்சலஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் ஜெய்ல்சிங் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான் பெல்லார்மின் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை மாலையில் செபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.
வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசிஸ் பென்சிகர் மறையுரை நிகழ்த்துகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு செபமாலை, திருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது. கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் மைக்கல் ஏஞ்சலஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் ஜெய்ல்சிங் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான் பெல்லார்மின் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X