search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Debt Pariharam"

    • ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு.

    மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த காசை சிறுக சிறுக சேமித்து வைத்து, அதிலிருந்து சிறு தொகையை எடுத்து ஒரு பொருளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அதையும் அடகு வைக்கும் நிலைமை வரும் பொழுது நமது மனதிற்குள் ஏற்படும் மனக் குமுறல்களை சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற பெண்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறார்கள்.

    நகையை அடகு வைப்பதாக இருந்தால் அதற்கான சரியான காரணம் இருந்தால் மட்டுமே அடகு வைக்க வேண்டும். ஏனென்றால் ஜோதிடத்தின் படி பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு. இவர்களுடைய ஸ்தானம் ஜாதகத்தில் பாதகமாக இருந்தது என்றால் அந்த நேரத்தில் நகையை அடகு வைக்க வேண்டிய நிலைமை உண்டாகும். இவற்றை அறிந்து கொள்ள நம்மை நாமே சற்று கவனமாக சிந்திக்க வேண்டும். அதிகமாகக் கோபப்படுவது, குழப்பம் அடைவது, அதிக ஆசை கொள்வது, வருகின்ற கோபம் உச்சத்தை அடைவது இவ்வாறான வெளிப்பாடுகள் இருந்தது என்றால் அது நமது ஜாதகத்தில் சரியான நிலைமை இல்லை என்பதை தெரிந்து கொள்வதாக அமைகிறது.

    ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலாவதாக ராகு திசை நடக்கிற பொழுது நகையை வைத்து ஏதேனும் தொழிலில் முதலீடு செலுத்துவதாக இருந்தால் அந்தப் பணம் விரையம் தான் ஆகும். இரண்டாவதாக குரு திசை நடக்கின்ற பொழுது அடகு வைக்கின்ற நகை நூற்றுக்கு 70 சதவிகிதம் மறுபடியும் நமது கைக்கு வராமல் போய்விடும்.

    அவ்வாறு நூற்றுக்கு 70 சதவீதம் சுக்ர திசை நடப்பவர்களுக்கும், நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் கேது திசை நடப்பவர்களும் பாதிப்பு ஏற்படும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு நகை ஒரு முறை அடகிற்க்கு சென்று விட்டது என்றால் அது மீண்டும் மீண்டும் அடகு வைக்க சென்றுகொண்டே இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக நகையைக் முதன் முதலில் வாங்கி அணிகின்ற பொழுது ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லி அணிய வேண்டும்.

    மந்திரம்

    "ஓம் சொர்ண காஞ்சன மாதங்கி

    வசம் வசம் வசம் வா ஸ்ரீம் மம

    தநூகரன புவாய நமோ நம".

    அதேபோல் நகையை அடகு வைத்தவர்கள் இந்த மந்திரத்தைதினமும் சொல்லி வந்தால் விரைவில் அடகு வைத்த நகையை மீட்டெடுக்கலாம்.

    • குளிகை நேரத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் விரைவில் கடன் பிரச்சனை தீரும்.
    • எந்த கிழமையில் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

    தீராதக் கடன் தொலையில் தவிப்பவர்களுக்கு தினமும் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைத்தால் அதாவது நீங்கள் ஒருவருக்கு பத்தாயிரம்ரூபாய் தர வேண்டும் என்றால் அதில் 2000 ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள் என்றால் அந்தத் தொகையை நீங்கள் இந்த குளிகை நேரத்தில் கொடுத்தால் கடன் விரைவில் அடைக்கப்படும். இது அனுபவபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

    இந்தக் குளிகை நேரத்தில் கடன் அடைக்கலாம், சுப காரியங்களை செய்யலாம். சவ அடக்கம் செய்யக்கூடாது. கடன் வாங்க கூடாது. காரணம் இந்த நேரத்தில் நீங்கள் இது போன்ற காரியங்களை செய்தால் அது மறுபடி, மறுபடி நடக்கும். எனவே மன உளைச்சல் தரும் கடன் தொல்லை இருப்பவர்கள் இந்த தினமும் வரும் குளிகை நேரத்தை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

    குளிகை நேரம்

    ஞாயிற்றுக்கிழமை : மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

    திங்கட்கிழமை : மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை

    செவ்வாய்க்கிழமை : மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. முடிந்தவரையில் செவ்வாய்க்கிழமைகளில் கடன் வாங்குவதை தவிர்க்கவேண்டும். ஆனால் செவ்வாய்க் கிழமையில் மட்டும் எந்த நேரத்திலும் கடனை அடைக்கலாம்.

    புதன்கிழமை : காலை 10.30 மணிமுதல் 12 மணிவரை

    வியாழக்கிழமை : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    வெள்ளிக்கிழமை : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சனிக்கிழமை : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • பைரவர் வழிபாடு கடன் பிரச்சினையை தீர்க்கும்.
    • செவ்வாய்கிழமை கடனை அடைக்கலாம்.

    அவசிய தேவைக்காக நாம் திங்கட்கிழமை கடன் வாங்கலாம். செவ்வாய்கிழமை கடனை அடைக்கலாம். கடன் பிரச்சினையில் இருந்து அடைபட வேண்டும் என்றால் ருண விமோசனரை வழிபடலாம்.

    பைரவர் வழிபாடு கடன் பிரச்சினையை தீர்க்கும். 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும்.

    பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும்.

    தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். தீபம் ஏற்றும் போதே கடன் தீர மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    • சித்தர்களால் நமக்கு சொல்லி வைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான நேரம்.
    • ஒருவருக்கு நிறைய பண பிரச்சனை உள்ளது.

    பொதுவாகவே நம்மில் நிறைய பேருக்கு இந்த மைத்ரேய முகூர்த்தம் பற்றி தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஒரு சிறிய குறிப்பு. ஒருவருக்கு நிறைய பண பிரச்சனை உள்ளது. நிறைய இடத்தில் கைநீட்டி கடனை வாங்கி விட்டதால், அவரால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதில் இருந்து எப்படி தப்பிப்பது. நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கீங்களா, அந்த நபருக்கு குறிப்பிட்ட இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் கடன் தொகையில் இருந்து ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து விட்டால், நீங்கள் வாங்கிய கடன் சீக்கிரத்தில் படிப்படியாக குறைந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இது சித்தர்களால் நமக்கு சொல்லி வைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான நேரம். இந்த நேரத்தை தான் மைத்ரேய முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்.

    ஒருவேளை நீங்கள் கடன் வாங்கிய நபர், கடன் தொகையை சிறு சிறு தொகையாக திருப்பிப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றால், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் ஒரு சிறு தொகையை அவருடைய பெயரைச் சொல்லி ஒரு உண்டியலில் சேர்த்து வரலாம். அப்படி இல்லை என்றால் அவர் பெயரை ஒரு கவரின் மேல் எழுதி, அந்த கவருக்குள் உங்களுடைய பணத் தொகையை குறிப்பிட்ட இந்த நேரத்தில் போட்டு வரலாம். அதாவது அவர் கையில் கொடுக்கவில்லை. அவர் பெயர் எழுதிய கவரில் அல்லது உண்டியலில் ஒரு சிறு தொகையை வைக்கப் போகிறீர்கள். இது அவருக்கு கடன் தொகையை திருப்பிக் கொடுப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. அவ்வளவு தான். உங்களுடைய ராசிக்கு ஏற்ற பொதுவான மைத்ரேய முகூர்த்த நேரம் எது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

    உங்களுடைய ராசிக்கு ஏற்ற பொதுவான மைத்ரேய முகுர்த்த நேரம் எது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

    மேஷம்: வியாழக்கிழமை காலை 9:00 மணியிலிருந்து 10.30 முப்பது மணி வரை.

    ரிஷபம்: வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.30 முப்பது மணி வரை.

    மிதுனம்: புதன் கிழமை காலை 7:30 மணி முதல் 9.00 மணி வரை.

    கடகம்: திங்கட்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை.

    சிம்மம்: ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியிலிருந்து 12.30 மணி வரை.

    கன்னி: வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 6:30 மணி வரை.

    துலாம்: சனிக்கிழமை காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணி வரை.

    விருச்சிகம்: வியாழக்கிழமை மாலை 3:00 மணியிலிருந்து 5:30 மணி வரை.

    தனுசு: செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணி வரை.

    மகரம்: சனிக்கிமை காலை 8:00 மணியில் இருந்து 10:30 மணி வரை.

    கும்பம்: திங்கட்கிழமை மாலை 3:00 மணியிலிருந்து 5:30 மணி வரை.

    மீனம்: வியாழக்கிழமை காலை 3:00 மணியிலிருந்து 10:30 முப்பது மணி வரை.

    எந்த கஷ்டமும் படாதீங்க. மேலே உள்ள 12 ராசிகளில் நீங்கள் எந்த ராசியில் பிறந்தவர்கள் என்பதை பாருங்கள். உங்களுக்கு எந்த கிழமை, எந்த நேரம் கொடுக்கப்பட்டு இருக்கின்றதோ, அந்த நேரத்தில் உங்களுடைய கடன் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். நகை கடனாக இருக்கட்டும், கைமாத்தாக வாங்கிய பணமாக இருக்கட்டும், வங்கி கடனாக இருக்கட்டும், வீட்டு லோன், கார் லோன், எதுவாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட இந்த நேரத்தில் போனில் ஆன்லைன் மூலம் டிரன்சாக்சன் செய்தாலும் பரவாயில்லை. இந்த நேரத்தில் கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டீர்கள் என்றால், கடன் சுமை இல்லாமல் உங்கள் கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையத் தொடங்கும். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக கடன் இல்லாத நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • தாமரை மலர்களால் அவரை அர்ச்சித்து வழிபட வாழ்வில் வசந்தம் பொங்கும்.
    • குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், மற்றும் எமபயத்திலிருந்தும் நிவர்த்தி அளிப்பார்.

    கடன்கள் மற்றும் நோய் தீர்க்கும் கடவுள் என்று போற்றப்படுபவர் 'ரிண-ருண விமோச்சனர்' ஆவார். இவர் அருள் புரியும் கோயில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் உள்ளது. மன்னார்குடியில் திருபாற்கடல் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காசிவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் சுமார் எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது சிவாலயங்களில் உள்ள அனைத்து அம்சங்களும் நிறைந்த இக்கோயிலில் மிகவும் போற்றப்படுபவர். தனிச்சந்நதியில் அருள்புரியும் 'ரிண- ருண விமோச்சனர்' ஆவார்.

    இங்கு அருள்பாலிக்கும் காசி விஸ்வநாதருக்கு திங்கட்கிழமையில் அபிஷேகம் முடிந்ததும் தாமரை மலர்களால் அவரை அர்ச்சித்து வழிபட வாழ்வில் வசந்தம் பொங்கும். காசி விசாலாட்சிக்கு வெள்ளிக்கிழமையிலும். வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு செவ்வாய்க்கிழமையிலும், ராகு காலத்தில் துர்க்கைக்கும், தேய்ப்பிறை அஷ்டமியில் பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன 'ரிண-ருண விமோச்சனர்' தெற்கு திசை நோக்கி தனி சந்நதியில் பெரிய சிவலிங்கத் திருமேனியில் அருள் புரிகிறார்.

    இக்கோயிலில் மேற்கு கோபுரவாசல் அருகேயுள்ள கமலாயத் திருக்குளத்தில் நீராடி, அங்கு அருள் புரியும் 'படிக்காசு விநாயகரை வழிபட்ட பின் தியாகராஜப் பெருமானையும். அன்னை கமலாம்பிகையையும், நீலோத்யல அம்பாளையும், புற்றீஸ்வர(வான்மீக) பெருமானையும் வழிபட்டபின் 'ரிண-ருண விமோச்சனப் பெருமானை தரிசிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

    அபிஷேக, ஆராதனைகள் முடிந்ததும் பதினோருமுறை வலம் வந்து இந்த ஈஸ்வரரின் இடது புறத்தில் தனிச் சந்நதியில் சன்டேஸ்வரராக அமர்ந்திருக்கும் எமனையும் வழிபட்டால் நோய் நொடிகளிலிருந்தும், கடன் பிரச்சனைகள், வழக்குகள். குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், மற்றும் எமபயத்திலிருந்தும் நிவர்த்தி அளிப்பார்.

    அமாவாசை, ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பால் அபிஷேகம் செய்து மிளகு கலந்த உப்பினை இவரது திருவடியில் சமர்ப்பிப்துடன் வில்வபத்ரம், ரோஜா, நாகலிங்க புஷ்பம், வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை ஆகிய மலர்களால் வழிபட்டாலும் தீராதநோய்கள். கடன்கள் தீரும் என்பதும் நம்பிக்கை.

    • வராஹி அம்மனை புதன் கிழமைகளில் வழிபாட்டு வந்தால் கடன் தொல்லை நீங்கும்.
    • ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகத்தின் காரகத்துவம் உள்ளது.

    மகா வராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தொடர்ந்து விரதம் இருந்து வழிபாட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும்.

    பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலானவர்கள் அம்மன் வழிபாடு செய்வார்கள். ஆனால், ஸ்ரீ வராஹி அம்மன் வழிபாடு என்று வரும்போது, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதிகள் விசேஷம். எதிரிகள், செய்வினை, கண் திருஷ்டி, முடக்கம் ஆகியவற்றை நீக்கும், காக்கும் அம்மனாக வராஹி அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வராஹி அம்மனை புதன் கிழமைகளில் வழிபாட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

    மகா வராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதன் கிழமை அன்று வராஹி அம்மனை தொடர்ந்து வழிபாட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவாகிக் கொண்டே இருக்கிறது, வரவுக்கு மீறி செலவு, கடனை முழுமையாக தீர்க்க முடியாத சூழல், கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள், தீராத கடன் சுமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக புதன் கிழமை அன்று வராஹி அம்மனை தரிசித்து வரலாம்.

    ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகத்தின் காரகத்துவம் உள்ளது. வேத ஜோதிடத்தில் 12 ராசிகளில், 6 ஆவது ராசியான கன்னியின் ராசியின் அதிபதியாக புதன் இருக்கிறார். மேலும், கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில், ஆறாம் வீடு என்பது கடன், பகை, வம்பு, வழக்கு, நோய் ஆகியவற்றைக் குறிக்கும். புதன் கிழமையின் அதி தேவதை மகா விஷ்ணு, மகா விஷ்ணுவின் சொரூபம் தான் விஷ்ணுமாயா என்று அழைக்கப்படும் ஸ்ரீ வராஹி அம்மன். எனவே, புதனின் 6 ஆம் வீட்டு காரகத்தால் ஏற்படும் பாதிப்பை போக்குவதற்கு வராஹி அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டு வரலாம்.

    • பெரிய பணம் கொடுக்கும் போது சுய ஜாதக பரிசோதனை மிக அவசியமானதாகும்.
    • குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள்.

    படித்து நல்ல அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப் பெரிய தொழில் அதிபர்கள் தான் அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள். பணத்தை கொடுத்தவர்கள் அசல் வந்தால் கூட போதும் என்று புலம்புகிறார்கள். எந்த ஆதாரமும் இன்றி கொடுத்த பணம் எப்படி வரும்? பணத்தை பெருக்கி தருகிறேன் என்று கூறுபவர்கள் பெரும்பான்மையாக அறிமுகமான மிகவும் நம்பிக்கைக்குரிய உறவுகளாகவே இருக்கிறார்கள். உறவுகளை வெறுக்கவும், ஒதுக்கவும் முடியாமல் பணத்தை இழந்தவர்கள் படும் வேதனை அளப்பரியது.

    புதிய தொழில் முயற்சிக்காக தொழிலில் பங்குதாரர் ஆக பணம் கொடுத்து ஏமாறுவது, வீடு, மனை வாங்க இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது, அரசு உத்தியோகம் வாங்கித் தருகிறேன் என்று கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது- மேலே கூறிய இந்த முறையில் சில லட்சம் முதல் பல லட்சம் கொடுத்து வேதனையில் இருப்பவர்களே அதிகம். எந்த ஆதாரமும் இன்றி பல லட்சம் பணத்தை பறிகொடுத்தவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் நடைப்பிணமாக காலம் தள்ளுகிறார்கள்.

    பெரிய பணம் கொடுக்கும் போது சுய ஜாதக பரிசோதனை மிக அவசியமானதாகும். ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் தந்தையால் வராக்கடன் உருவாகும். குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள். ஆறாம் அதிபதி பத்தில் இருந்தால் தொழில் சார்ந்த நஷ்ட கடன், கூடிக் கொண்டே இருக்கும். கஷ்டமான தொழில் செய்யும் சூழல், திடீர் விரையம் உண்டாகும். இவர்கள் கடனுக்கு பொருள் விற்பதால் வராக்கடன் கூடும். அதனால் டென்ஷன் மிகுதியாகும். இந்த அமைப்பு உடையவர்கள் கடனுக்கு பயந்து நோயை வரவழைத்துக் கொள்வார்கள். மிகுதியான தொழில் எதிரிகள் உண்டு.

    ஜோதிட ரீதியாக வராக்கடன், பண இழப்பு ஏற்படும் காலம் எது?

    6, 8-ம் அதிபதி அல்லது 6, 8-ல் நின்ற கிரகத்தின் தசை புத்தி, அந்தரம் நடப்பவர்களுக்கு புதன் தசை நடக்கும் காலங்களில் ஜனன கால ஜாதகத்தில் 7-ம் அதிபதி வக்ரம் பெற்று தசை நடத்தும் போது மேஷம், மகர லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு இயல்பாகவே வராக்கடன் இருக்கும்.

    6, 8-ம் அதிபதி லக்னத்தில் இருப்பவர்களுக்கு 7-ம் அதிபதி 6,8-ம் இடத்தோடு சம்பந்தம் இருப்பவர்களுக்கு மேலும் ஜனன கால ஜாதகத்தில் 2,8-ம் இடத்தில் சனி, ராகு/கேது இருப்பவர்கள் அல்லது 2, 8-ம் இடத்திற்கு வக்ர கிரகம் சம்பந்தம் இருப்பவர்கள் யாருக்கும் பணம், பொருள் கொடுத்தாலும் திரும்ப வராது.வயதோட்டத்தின் அடிப்படையில் 19, 28, 37,46, 55, 64,73 ஆகிய வயதில் ஏதாவது ஒரு காரணத்தினால் வராக்கடன் உருவாகுகிறது.

    ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து 6, 8, 12 ஆகிய மூன்று பாவகங்களும் 'துர் ஸ்தானங்கள்' அல்லது 'மறைவு ஸ்தாதானங்களாகும். ஒருவர் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை பரிபூரணமாக தருவது இந்த மறைவு ஸ்தானங்களே. மனித வாழ்வையே தடம் புரட்டி போடும் வலிமை கோட்சார கிரகங்களுக்கும் உண்டு.

    தசா புத்தியோடு தொடர்பு பெறாத கோட்சார கிரகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கம் குறைவாகவும் மாரக தசை, புத்தி யோடும் அதன் அதிபதிகளோடும் தொடர்பு பெறும் கோட்சார கிரகங்களுக்கு சாமானியர்களை கூட உறுத் தெரியாமல் செய்து விடும் வலிமை உண்டு. மறைவு ஸ்தானங்கள் வலிமை பெற்ற ஜாதகருக்கு நித்திய கண்டம் பூர்ண ஆயுள். இவர்கள் வராக்கடனால் மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். லக்ன அதிபதி 6, 8,12-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறும் போது ஜாமின் போடுவது, அல்லது ஏலச் சீட்டில் பணம் கட்டி ஏமாறுவது, குறுக்குவழி அதிர்ஷ்டத்தை நம்புதல் போன்ற காரணத்தால் வராக்கடனையும் சத்ருவையும் உருவாக்கி சொல்ல முடியாத துயரத்தை அடைகிறார்கள்.

    பொதுவாக மறைவு ஸ்தானத்திற்கு அதிக கிரகங்கள் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நல்லது. அவை எவ்வளவு கொடுத்தாலும் அவற்றால் ஜாதகர் நன்மை பெற முடியாமல் தவிக்கநேரும். ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் அதிபதி எந்த பாவகத்தில் இருக்கிறாறோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை சார்ந்து கடன், வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ், அடிதடி, சண்டை, போட்டி, பொறாமை, எதிரி, உத்தியோக பிரச்சிினைகள் இருக்கும். அடுத்தவருடைய கஷ்டத்திற்கு பாவம் என்று உதவி செய்தால் அந்த பாவம் உதவி செய்தவரை விடாமல் துரத்துகிறது. மிகப் பெரிய வங்கிகள், கார்ப்ரேட் கம்பெனிகள், நிதி நிறுவனங்கள் வராக்கடனை வசூலிக்க தனியான ஒரு அமைப்பு வைத்து இருக்கிறார்கள்.

    சாமானியர்கள் என்ன செய்வது?

    செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்புச் சாறு அபிசேகம் செய்யவும். செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு நல்லெண்ணையில் சிவப்பு திரி இட்டு 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட மாற்றம் உண்டாகும். விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை ஊரில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அமிர்தேஸ்வரி அம்மனை வழிபட வராக்கடன்கள் வசூலாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • இந்தப் பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களில் பலன் தெரிவதை காணலாம்.
    • வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

    பணம் என்றால் பிரச்சனை தான். இந்த பண பிரச்சனையில் இருந்து தப்பிக்க கடன் சுமையிலிருந்து வெளிவர ஒரு எளிமையான பரிகாரத்தை பார்க்கலாம்.

    நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் ஒரு தனி அறையில் அல்லது வரவேற்பறையில் கூட தனியாக படுத்துக் கொள்ளலாம். ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு நின்று உங்கள் தலையை சுற்றிய வெண்கடுகை நீங்கள் படுகின்ற இடத்தில் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு விடுங்கள்.

    நடுவே பாய் தலையணை மெத்தை போட்டுக் கூட படுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். மறுநாள் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக பல் தேய்த்து முகம் கழுவி விட்டு உடனடியாக ஒரு துடைப்பத்தை வைத்து இந்த வெண்கடுகை எல்லாம் கூட்டி அள்ளி ஒரு பேப்பரில் வைத்து மடித்து ஒரு அகல் விளக்கில் கொட்டி அதில் ஒரு கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி விடுங்கள். நெருப்பில் இந்த வெண்கடுகு எல்லாம் படபடவென எரிந்து முடிந்துவிடும்.

    இந்தப் பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களில் உங்களுடைய கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும். வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எந்த கிழமையில் செய்தாலும் சரி. ஏழு நாட்களுக்கு ஒரு முறை, மூன்று முறை இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உதாரணத்திற்கு இந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை மூன்று கிழமைகள், அதே ஞாயிற்றுக்கிழமையில் பரிகாரம் செய்யப்பட வேண்டும். நிச்சயமாக வாங்கிய கடனை திருப்பித் தரக்கூடிய நேரம் காலம் உங்களுக்கு கைகூடி வரும்.

    இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால் கடன் பிரச்சனை நீங்காது. கடனை திருப்பித் தர என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை நீங்கள் செய்ய வேண்டும். கூடவே சேர்த்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். முயற்சிகளில் வரும் தடைகள் நீங்கி உங்கள் கைக்கு பணம் வருவதில் இருக்கும் சிக்கல்கள் தீரும். சிக்கல்களை சரி செய்ய தான் பரிகாரமே தவிர, மந்திரம் போட்டால் மாங்காய் என்றைக்குமே வராது.

    • கடன் ஏற்படும் காலம் ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தை வைத்து கணிக்கலாம்.
    • நஷ்டம், பணத்தடை , தொழில் வேலை தடை, வெறுப்புகள் அதிகரிக்கும்.

    கடன் ஏற்படும் காலம் ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் உள்ள செவ்வாய், கேது இருக்கும் இடத்திற்கு, கோட்சார சனி வரும் காலங்களில், ஜாதகரை கடன், வாங்க வைத்து, கடன் பிரச்சினைகளில் சிக்க வைப்பார். மேலும் அசிங்கம் அவமானம் எதிரிதொல்லை, விபத்து, உயிர் கண்டம் மருத்துவ செலவுகள், வம்பு, வழக்கு உருவாகும். குடும்பத்தினர், நண்பர்கள், சகோதர, சகோதரிகள், உறவினர்கள் ஜாதகரை வெறுப்பார்கள்.

    இதனால் ஜாதகர் தனிமை படுத்தப்படுவார். மேலும் நஷ்டம், பணத்தடை , தொழில் வேலை தடை, வெறுப்புகள் அதிகரிக்கும். ஜாதகருக்கு இடம் மாற்றம் ஏற்பட்டு, ஊர் மாற்றம், வெளிமாநிலம், வெளிநாடு செல்ல நேரும். பலரை தனிமை சிறையில் வைக்கும். இந்த காலகட்டத்தில் ராகு,கேது, சனி, செவ்வாய் தசைகள், 6, 8, 12 மற்றும் அதன் அதிபதிகள் தொடர்பு பெற்ற தசைபுத்திகள் நடந்தால் கடனால் சிரமம் உண்டாகும்.

    ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி,ராசி, ராசிஅதிபதி,தன, லாப ஸ்தானம் சுபத்தன்மையுடன் இருக்க வேண்டும். மேலும் லக்னாதிபதி, ராசிஅதிபதி, தன, லாப ஸ்தான அதிபதி ஆட்சி, உச்சிம், நட்பு, கேந்திரம் கோணத்தில் பலம் பெற்று இருந்தால், அந்த ஜாதகர் எவ்வளவு பெரிய கஷ்டம் பிரச்சினைகளை சந்தித்தாலும், எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவார். இவர்களுக்கு பெரிய சிக்கல் கூட சிறிதாக தெரியும்.

    இதற்கு மாறாக லக்னமும் பலம் இழந்து, லக்னாதிபதி, ராசி அதிபதி, தன, லாப ஸ்தானம் பலம் குறைந்து இருந்தால், இவர்கள் வாழ்நாள் முழுவதும் சிக்கல், பிரச்சினை, கஷ்டங்களை அனுபவிப்பர். தினம் தினம் இவர்கள் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும், இவர்களுக்கு சின்ன விசயம் கூட பெரிதாக தெரியும், சின்ன விசயத்தை கூட போராடித்தான் பெற வேண்டியது வரும்.

    ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்களை ஜாதகத்தையும், தசா புத்தியையையும் வைத்துதான் தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஒரு சம்பவம் எப்போது நடைபெறும் எப்படி நடைபெறும் என்பதை கோட்சார கிரகங்களே தீர்மானிக்கிறது. ஒருவரின் சுய ஜாதகத்தில் 2, 11-ம் அதிபதி 6-ம் அதிபதியை விட. வலுத்து இருந்தால் கடன் கண்டிப்பாக தீரும்.

    6-ம் அதிபதி தசை புத்தியில், 11-ம் அதிபதி அந்தரத்தில் கடன் தீரும்.கோட்சாரத்தில் அசுப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேதுக்கள் 6-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் காலங்களில் கடன் நிவர்த்தியாகும். பரிகாரம் பிறவிக் கடனை குறைக்க முயல்பவர்களுக்கு பொருள் கடன் இருக்காது. எனவே பெற்றோர்களையும் பெரியோர்களையும் மதிக்க வேண்டும்.

    கோட்சாரத்தில் ராசிக்கு ஒன்பதாமிடத்துடன் கோட்சார குரு, சனி சம்பந்தம் பெறும் காலங்களில் ஆதரவில்லாத வயோதிக தம்பதிகளின் தேவையறிந்து உதவி செய்ய கெடு பலன்கள் குறையத்துவங்கும். தீராத தீர்க்க முடியாத பிறவிக்கடனில் அல்லல்படுபவர்கள் சனிக்கிழமை திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து சித்தர்களையும், அண்ணாமலையாரையும் வணங்க வேண்டும். மீள முடியாத பொருள் கடனில் தவிப்பவர்கள் செவ்வாய் கிழமை கிரிவலம் வந்து அணணாமலையாரை தரிசிக்க வேண்டும்.

    • ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம்.
    • சிறந்த பிரார்த்தனைத்தலம்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருக்கிறது, அரியக்குடி என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சக்கரத்தாழ்வாரும் அருள்பாலிக்கிறார். இத்தல லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து, எழைகளுக்கு அன்னதானம் வழங்கினால், கடன் பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம். தென் திருவேங்கடமுடையான் தலம். நகரத்தார் கோயில்களான 9 கோயில்களில் உள்ள வைணவத்தலம். சிறந்த பிரார்த்தனைத்தலம். இந்தத் தலத்திற்கு நேர் எதிரே இந்த லட்சுமி நரசிம்மப்பெருமாள் மகாலட்சுமியுடன் சேவை சாதிக்கிறார். பெருமாள் கோயிலுக்கு நிகரான தொன்மை சிறப்பு மிக்கது இந்த நரசிம்மர் கோயில். பிரசித்திபெற்ற அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் அவதாரத் தலம்.

    மகாலட்சுமியினை ஆலிங்கனம் செய்த வண்ணம் தென் திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலத்தில் அருட் பாலிக்கிறார். கிழக்கு திருமுகமாக ஸ்ரீதேவி பூமி தேவி நாச்சியார் உள்ளனர்.

    காரைக்குடியிலிருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ள அரியக்குடியில் இக்கோயில் அமைந்துள்ளது.

    • ஒருவரின் ஜனன ஜாதகத்தின் படி தான் கடன் வாழ்க்கை அமைகிறது.
    • உறவே ஒருவரை கடனில் இருந்து மீட்கும் வலிமை படைத்தவர்.

    ஒருவரின் சுய ஜாதக ரீதியாக 5-ம் இடத்துடன் சம்பந்தம் பெற்ற கிரக காரக உறவே ஒருவரை கடனில் இருந்து மீட்கும் வலிமை படைத்தவர்.

    சூரியன்

    5-ம் இடத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு தந்தை, மாமனார், அரசியல்வாதிகள் அல்லது சூரியனின் ஆதிக்கம் நிறைந்த பெயர் கொண்டவர்கள், சிவனின் பெயர் கொண்டவர்கள் மூலம் கடனை தீர்க்க உதவி கிடைக்கும்.

    சந்திரன்

    5-ம் இடத்திற்கு சந்திரன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு தாயார், மாமியார் அல்லது வயதான உறவுப் பெண்கள், சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த பெயர்கள் கொண்டவர்கள், அம்மன் பெயர் கொண்டவர்கள் கடன் தீர்க்க உதவுவார்கள்.

    செவ்வாய்

    5-ம் இடத்திற்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள், மைத்துனர்கள், முருகனின் பெயர் கொண்டவர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு வீடு, நிலம் போன்ற சொத்துகளை விற்பதன் மூலம் கடன் அடையும்.

    புதன்

    5-ம் இடத்திற்கு புதன் சம்பந்தம் பெற்றால் தாய் மாமன், நண்பர்கள், காதலன், காதலி, மகா விஷ்ணுவின் பெயரில் உள்ளவர்கள், வங்கி கடன், நிலம் விற்பனை மூலம் கடன் தீரும்.

    குரு

    5-ம் இடத்திற்கு குரு சம்பந்தம் பெற்றால் பிள்ளைகள், பாட்டனார் சித்தர்களின் பெயரை கொண்டவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

    சுக்ரன்

    5-ம் இடத்திற்கு சுக்ரன் சம்பந்தம் இருந்தால் அத்தை, பெரியம்மா, மனைவி, மகாலட்சுமியின் பெயர் உள்ளவர்கள் மூலம் கடன் தீரும்.

    சனி

    5-ம் இடத்திற்கு சனி சம்பந்தம் பெற்றால் ரத்த பந்த உறவுகளான சித்தப்பா, பங்காளிகள், சின்ன மாமனார், வேலையாட்கள் , நம்பிக்கையான விசுவாசிகள், காவல் தெய்வத்தின் பெயரைக் கொண்டவர்கள் மூலம் உதவி கிடைக்கும். பலர் சுயமாக உழைத்து கடன் தீர்க்கிறார்கள்

    ராகு/கேது

    5-ம் இடத்துடன் ராகு/கேது சம்பந்தம் பெறுபவர்கள் குல தெய்வ வழிபாட்டால் கடனில் இருந்து விடுபட முடியும். மேலே குறிப்பிட்டது போல் 6-ம் பாவக அதிபதியோடு தொடர்பு பெறும் கிரகம் கடனையும், 5-ம் பாவகத்தோடு தொடர்பு பெறும் கிரகம் கடனிலிருந்து விடுபடும் காலத்தையும் உணர்த்தும். கடன் வாங்கும் முன்பே சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் , ருண ஸ்தானம் , பாக்கிய ஸ்தானம், அஷ்டம ஸ்தானங்களையும் தசா, புத்திகளை ஆய்வு செய்து கடன் வாங்குவதை முடிவு செய்தல் சிறப்பு. எவர் ருணம், ரோக சத்ரு ஸ்தானத்தை பரிபூரணமாக அனுபவித்து அவதியுறுகிறார்களோ அவர்களுக்கு தான் ஞானம் பிறக்கும். ஞானம் பிறந்தவன் தான் முக்திக்கு வழி தேடுகிறான். சென்ற பிறவியில் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

    • கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக முகூர்த்த காலம் உள்ளது.
    • கடன் வெறும் பொருளாதாரச் சுமையாக மட்டும் இல்லாமல் மனதில் நிம்மதியில்லாத சூழலை ஏற்படுத்திவிடும்.

    யார் எல்லாம் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும்.

    இந்த உலகில் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழப் பணம் இன்றியமையாத ஒன்று. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதுதான் வள்ளுவரின் வாக்கு. வருமானம் குறைகிறபோது தேவைக்குக் கடன் வாங்குவது இயல்பு. ஆனால், அந்தக் கடன் வெறும் பொருளாதாரச் சுமையாக மட்டும் இல்லாமல் மனதில் நிம்மதியில்லாத சூழலையும் ஏற்படுத்திவிடும்.

    கடன் பட்டுவிட்டால் அதை அடைக்கும்வரை யாருக்கும் நிம்மதியிருக்காது. ஒரு சிலர் கடன் வாங்கிக் கடன் அடைப்பது என்னும் பழக்கத்திலும் இருப்பர். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் தவிர்க்க முடியாத சுழலில் சிக்கியதுபோல நம்மை ஆழ்த்திவிடுகிறது. கடன்பட்டு அதை அடைக்கமுடியாமல் வருந்துகிறவர்களுக்கு ஓர் எளிய பரிகாரம் உண்டு. அதுவே மைத்ர முகூர்த்தம்.

    மைத்ர முகூர்த்தம் என்றால் என்ன?

    அசுவினி நட்சத்திர நாளில் மேஷ லக்ன நேரமும் அனுஷ நட்சத்திர நாளின் விருச்சிக லக்ன நேரமும் `மைத்ர முகூர்த்தம்' எனப்படுகின்றன.

    பொதுவாகவே கடனை அடைப்பதற்கு மனம் சார்ந்த சில உந்துதல்கள், முயற்சிகள் தேவை. அசுவினி நட்சத்திரம் என்பது கேதுவுடைய நட்சத்திரம். இதில் மேஷ லக்னம் என்பது செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது. கேது பகவான் ஒரு பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியவர். கடனை அடைக்க, உழைப்பும் முயற்சியும் தேவை. அதற்குச் செவ்வாயின் அனுக்கிரகம் தேவை.

    எனவேதான் கேதுவுக்கு உரிய நாளில் செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ லக்ன காலத்தில் கடனை அடைப்பதன் மூலம் கேது கடன் பிரச்னைகளைக் குறைத்து அருள்புரிவார். அதே போன்று விருச்சிக லக்னமும் செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்த காலம். அனுஷ நட்சத்திரம் சனிபகவானுக்குரியது. சனிபகவான் உழைப்பையும் ஊதியத்தையும் கொடுக்கக்கூடியவர். எனவே, அனுஷ நட்சத்திர நாளில் வரும் செவ்வாயின் பலம் பெற்ற விருச்சிக லக்ன நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக உழைப்பும் நம் முயற்சியும் இணைந்து நமக்கு நவகிரகங்களின் அருளைப் பெற்றுத்தரும் என்பதுதான் இதன் தாத்பர்யம்.

    ``பொதுவாக அசுவினி நட்சத்திரம் உதிக்கும் நாளில் வரும் மேஷ லக்னம் மற்றும் அனுஷ நட்சத்திர நாளில் வரக்கூடிய விருச்சிக லக்னம் வரும் நேரங்களில் ஒரு முகூர்த்தம் ஏற்படும். அதுவே மைத்ர முகூர்த்தம் எனப்படுகிறது. மைத்ர முகூர்த்தம் என்பது ஒருவருக்குப் பணத்தால் ஏற்படக் கூடிய மன சஞ்சலங்களுக்கு விடிவுகாலம் தரும் முகூர்த்த காலம். யார் எல்லாம் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும். அப்படி இந்த மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய மைத்ர முகூர்த்தம் இன்று வாய்த்துள்ளது.

    உங்கள் கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் கவலைப் படவேண்டாம். உங்கள் கையில் இருக்கும் பணம் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு சிறுதொகையை எடுத்துக் கொள்ளுங்கள். அது 100 ரூபாயாக இருந்தாலும் சரி 10 ரூபாயாக இருந்தாலும் சரி. அந்தப் பணத்தை ஒரு கவரில் வைத்து, நீங்கள் யாருக்குத் தர வேண்டுமோ அவரின் பெயரை அந்தக் கவரில் எழுதிவிடுங்கள். வங்கிக் கடனாக இருந்தால் வங்கியின் பெயரை எழுதிவிடுங்கள். பின்பு அந்தக் கவரை சுவாமிபடம், பூஜை அறை அல்லது நீங்கள் வழக்கமாகப் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள்.

    பின்பு வீட்டில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வத்தின் படத்துக்கு அல்லது சிவலிங்கம் போன்ற சிறு மூர்த்தங்கள் இருந்தால் அதற்கு சிறிது அரிசி மாவு கொண்டு அபிஷேகம் செய்து ஏதேனும் ஒரு பூ சாத்தி வழிபடுங்கள். குறைந்தது ஐந்து நிமிடம் சுவாமிக்கு முன்பாக அமர்ந்து சிவபுராணம் அல்லது கோளறுபதிகம் பாடுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த தெய்வ ஸ்லோகத்தைப் பாடி ஆராதியுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்களின் விருப்பமும் வேண்டுதலுமான செல்வ வளம் அதிகரிக்க இறைவன் அருள்புரிவார். அதனால் விரைவிலேயே உங்கள் கடன்கள் அடையும். நீங்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும்போது எடுத்துவைத்த அந்தச் சிறு தொகையையும் சேர்த்துச் செலுத்த வேண்டும். இது உங்களின் விருப்பத்துக்கும் பிரயாசைக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் என்பதை உணருங்கள்.

    ×