search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinema Producer Arrested"

    • சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அழைத்து சென்று தன்னை கற்பழித்ததாக இளம்பெண் புகார் கூறியிருந்தார்.
    • புகார் தொடர்பாக போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மார்ட்டின் செபாஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் மார்ட்டின் செபாஸ்டின். சினிமா தயாரிப்பாளர்.

    மலையாள திரையுலகில் பல படங்களை தயாரித்து உள்ள மார்ட்டின் செபாஸ்டின் மீது திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் மார்ட்டின் செபாஸ்டின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.

    மார்ட்டின் செபாஸ்டின் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த 2000-ம் ஆண்டு இந்த சம்பவங்கள் நடந்ததாகவும் கூறி இருந்தார்.

    மேலும் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு அழைத்து சென்று தன்னை கற்பழித்ததாகவும் புகார் கூறியிருந்தார்.

    இந்த புகார் தொடர்பாக போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மார்ட்டின் செபாஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த குற்றச்சாட்டுகளை மார்ட்டின் செபாஸ்டின் மறுத்தார். மேலும் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, எர்ணாகுளம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

    இதையடுத்து போலீசார் மார்ட்டின் செபாஸ்டினிடம் விசாரணை நடத்தினர். 72 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். பாலியல் புகாரில் சினிமா தாயரிப்பாளர் மார்ட்டின் செபாஸ்டின் கைது செய்யப்பட்டது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    • போலீசார் தேடுவதை அறிந்து பார்த்திபன் தலைமறைவாக இருந்தார்.

    கோவை:

    சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    நான் 2019-ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். எனக்குள் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த சமயத்தில் கரூர் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவர் புதிய சினிமா ஒன்று தயாரிக்கப் போவதாகவும், அதற்கு கதாநாயகி தேர்வு நடப்பதாகவும் கூறி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    சமூக வலைதளங்களில் வந்த அறிவிப்பை பார்த்து நான் பார்த்திபனை தொடர்பு கொண்டேன். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கதாநாயகி தேர்வு நடப்பதாகவும், அங்கு வருமாறும் என்னை அழைத்தார்.

    நானும் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் அவர் சொன்ன பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றேன். அங்கு பார்த்திபன் இருந்தார். அவர், தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என கூறி என்னிடம் கேள்விகள் கேட்டார். சிறிது நேரத்தில் குளிர்பானம் கொடுத்தார். அதனை வாங்கி குடித்ததும் நான் மயங்கி விட்டேன்.

    இதனை பயன்படுத்தி பார்த்திபன் என்னை கற்பழித்து விட்டார். மயக்கம் தெளிந்து விழித்ததும் அவரை நான் கண்டித்தேன். என்னை சமாதானம் செய்து உன்னை நிச்சயம் கதாநாயகி ஆக்குவேன் என்றார். இப்படி ஆசைவார்த்தைகள் கூறியே மீண்டும், மீண்டும் என்னை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். குழந்தை பிறந்தால் சினிமாவில் நடிக்க முடியாது என்று கூறி கருவையும் கலைக்கச் செய்தார்.

    நான் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியபோது மறுத்தார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விவரம் எனக்கு பின்னர் தெரியவந்தது. இதேபோல் மேலும் பல பெண்களை அவர் ஏமாற்றியதையும் நான் அறிந்தேன். என்னை ஏமாற்றி கற்பழித்த பார்த்திபன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்து பார்த்திபன் தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் பார்த்திபனை கைது செய்தனர். கோவை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பார்த்திபன், பின்னர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கரூரைச் சேர்ந்த பார்த்திபன், சமீப காலமாக கோவை சரவணம்பட்டி கே.புதுப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இங்கும் ஒரு பெண்ணை அவர் ஏமாற்றி திருமணம் செய்து நகைகளை மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது. அந்த பெண் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

    ×