search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allan Donald"

    • வங்காளதேசம் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ஆலன் டொனால்ட் செயல்பட்டு வருகிறார்.
    • இவரது ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை வரை இருந்தது.

    வங்காளதேசம் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் எதிர்வரும் 2023-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை வரையில் இருப்பார் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக டொனால்ட் நியமிக்கப்பட்டார். இவரது ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை வரை இருந்தது. பின்னர் பிசிபி தனது ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் வரை நீட்டித்தது.

    இந்தியாவுக்கு எதிராக வங்காள தேச அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இந்நிலையில் டொனால்டின் ஒப்பந்தம் உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிசிபி கிரிக்கெட் இயக்கத் தலைவர் ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    • சச்சின்- டிராவிட் இணைந்து பேட்டிங் செய்யும்போது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டுள்ளார்.
    • நடந்த சம்பவத்திற்கு ராகுல் டிராவிட்டிடம் சென்று மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. வங்காளதேச அணியின் பயிற்சியாளராக டொனால்டு உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.

    இருவரும் அவர்கள் விளையாடிய காலத்தில் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்தனர். தென்ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக டொனால்டு திகழ்ந்தார். இவரது பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் நடுவாங்குவார்கள்.

    அதேபோல், எந்தவொரு வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசினாலும் எளிதாக தடுத்து விளையாடுவார் ராகுல் டிராவிட்.

    1997-ம் ஆண்டு இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டர்பனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. அப்போது இலக்கை நோக்கி இந்திய சென்றபோது ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

    இந்த ஜோடியை பந்து வீச்சால் விரைவில் பிரிக்க முடியாத தென்ஆப்பிரிக்கா வீரர்கள், ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறியதாக தெரிகிறது.

    இது டொனால்டு மனதில் சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. தற்போது இருவரும் சந்தித்து பயிற்சியாளராக இருக்கும் நிலையில், அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் டொனால்டு, அத்துடன் ராகுல் டிராவிட்டை டின்னருக்கு அழைத்துள்ளார்.

    இதுகுறித்து டொனால்டு தெரிவிக்கும்போது ''டர்பனில் மோசமான நிகழ்வு ஒன்று நடந்தது. நான் அதைப் பற்றி இங்கு பேச விரும்பவில்லை. சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் அனைத்து வகையிலும் எங்களை சிதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் கொஞ்சம் அதிகமாக எல்லை மீறி விட்டேன். ராகுல் டிராவிட் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை. அதைத்தவிர ஒன்றுமில்லை.

    நடந்த சம்பவத்திற்கு ராகுல் டிராவிட்டிடம் சென்று மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். அவருடைய விக்கெட்டை வீழ்த்த நான் சற்று சின்னப்பிள்ளை தனமாக நடந்து கொண்டேன். அதற்காக இன்னும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    அவர் சிறந்த மனிதன். சிறந்த வீரர். ஆகவே, நீங்கள் அதை புரிந்து கொண்டால், உங்களுடைய இரவில் உணவு சாப்பிட விரும்புகிறேன்'' எனத் தெரிவித்தார்.

    இதற்கு ராகுல் டிராவிட், ''நிச்சயமாக, நான் அதை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, நீங்கள் பணம் செலுத்துவதாக இருந்தால்...'' எனப் பதில் அளித்துள்ளார்.

    ×