search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 person arrest"

    கேரளாவில் லாட்ஜ் அறையில் வைத்து 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரசினி கடவு பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயார் கண்ணூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அந்த மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.

    அந்த மாணவிக்கு பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் கூறியபடி மாணவி ஒரு லாட்ஜூக்கு சென்ற போது அவரை பள்ளி சீருடையை மாற்றி விட்டு வேறு உடை அணிய செய்துள்ளார்.

    பிறகு அந்த மாணவியை லாட்ஜ் அறையில் வைத்து பூட்டி விட்டு அந்த பெண் சென்று விட்டார்.

    அந்த பெண் சென்ற சிறிது நேரத்தில் லாட்ஜ் அறைக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அந்த மாணவியை கூட்டுபலாத்காரம் செய்தனர். மேலும் அவரை தங்களது செல்போன்களில் ஆபாச படம் எடுத்தனர்.

    அந்த ஆபாச படத்தை காட்டி மாணவியை மிரட்டி மேலும் 20 பேர் அவரை கற்பழித்து உள்ளனர். இது பற்றி அறிந்த அந்த மாணவியின் சகோதரன் கற்பழித்தவர்களை சந்தித்து தட்டி கேட்டார். அந்த கும்பல் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது.

    இந்த தகவல்களை போலீசாரிடம் கூறி மாணவி கதறி அழுதார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அதன்படி மாணவியை கற்பழித்ததாக சந்தீப், சம்சுதீன், அயூப், சமீர் மற்றும் லாட்ஜ் மேலாளர் பவித்திரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மாணவியை கற்பழித்தது தொடர்பாக 19 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் இரவு டியூசனுக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் அந்த மாணவியை கடத்த முயன்றது. இதனால் பயந்து போன அந்த மாணவி அவர்களிடம் இருந்து தப்பி அருகில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தார். இதனால் அந்த கும்பல் காரில் தப்பிச் சென்று விட்டது. இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் விசாரணை நடத்தி காரின் நம்பரை கண்டு பிடித்தனர். அதன் மூலம் கார் உரிமையாளரின் முகவரி மற்றும் அவரது செல்போன் நம்பரை அடையாளம் கண்டனர்.

    செல்போன் டவர் மூலம் துப்பு துலக்கிய போது பழனியில் உள்ள ஒரு லாட்ஜில் அவர்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கேரள போலீசார் அங்குச் சென்று திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சபின்(வயது22), நெடுமங்காட்டைச் சேர்ந்த விஷ்ணு(25), சரண்(21), வட்டியூர்காவைச் சேர்ந்த சைன்(36) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    விசாரணையில் மது போதையில் காரில் சென்ற இவர்கள் 4 பேரும் மாணவி தனியாக நடந்துச் செல்வதை பார்த்ததும் அவரை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அச்சரப்பாக்கம் நகர செயலாளர் கொலையில் உறவினர் உள்பட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரான இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அச்சரப்பாக்கம் நகர செயலாளராக இருந்தார். அச்சரப்பாக்கத்தில் டீக்கடையும் நடத்தி வந்தார்.

    நேற்று அதிகாலை பால முருகன் டீக்கடையை திறந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 6 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் இறந்தார்.

    இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக பாலமுருகனின் உறவினரான மகேஷ் உள்பட 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. காந்தி நகரில் உள்ள கோவில் திருவிழா தொடர்பாக பால முருகனுக்கும், சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் பால முருகன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திண்டிவனத்தை சேர்ந்த கூலிப்படையினர் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. கூலிப்படையினரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.
    புதுவையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். #PondicherryGirlharassment
    திருக்கனூர்:

    புதுவை ரெட்டியார் பாளயத்தை சேர்ந்த 16 வயது சிறுமி புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவரது பாட்டி வீடு விழுப்புரத்தில் உள்ளது. இவர் பாட்டி வீட்டுக்கு பஸ்சில் செல்லும் போது இவருக்கு வழுதாவூரை சேர்ந்த விக்கி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் ஆசைவார்த்தை கூறி அந்த சிறுமியை திருக்கனூர் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் செல்போனில் ஆபாச படமெடுத்து அடிக்கடி மிரட்டி அந்த சிறுமியிடம் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.

    ஒருகட்டத்தில் திருக்கனூர் பகுதியில் ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்த விக்கி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தனது நண்பர்கள் 7 பேருக்கு விருந்தாக்கினார். இதுகுறித்து அந்த சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் இதுபற்றி புதுவை குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் முறையிட்டனர். அவர்கள் தலையீட்டின் பேரில் இதன் மீது விசாரணை நடத்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா நடவடிக்கை எடுக்கும்படி திருக்கனூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் விக்கியுடன் சேர்ந்து சிறுமியை கற்பழித்தது அவரது நண்பர்களான கண்ணதாசன், முகிலன், சூர்யா, தேவா, கலை, மற்றொரு சூர்யா,அசோக் ஆகிய 7 பேர் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவர்கள் 8 பேரையும் தேடிவந்தனர். நேற்று இரவு திருக்கனூர் பகுதியில் பதுங்கி இருந்த விக்கி, முகிலன், கண்ணதாசன்,தேவா,சூர்யா ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடிவருகிறார்கள். #PondicherryGirlharassment
    ×