search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people were arrested"

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அந்தப் பகுதிகளில் மது விற்ற 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஏட்டுக்கள் சேகர், வனராஜன் மற்றும் போலீசார் திண்டுக்கல் ஆர்.எஸ்.ரோடு, நாகல் நகர், பொன்மாந்துறைபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்தப் பகுதிகளில் மது விற்ற சோலைஹால் தெருவை சேர்ந்த தயாளன் (வயது 37), பெரிய கடைவீதியை சேர்ந்த சுரேஷ் (50), தோட்டனூத்து பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (43), தர்மத்துபட்டியைச் சேர்ந்த செல்வம் (37), பொன்மாந்துறை என்.ஜி.ஆர் நகரை சேர்ந்த போஸ் (33) ஆகிய 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சுற்றுலா பயணிகள் பலர் கோத்தகிரி சாலை வழியாகவே ஊட்டிக்கு செல்கின்றனர்.
    • வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்திற்கு புத்தாண்டு கொண்டா–ட்டத்திற்காக தற்போது வெளி மாவட்டம் மற்றும் வெளி–மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்த வண்ணம் உள்ளனர்.

    வெளிப்பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் கோத்தகிரி சாலை வழியாகவே ஊட்டிக்கு செல்கின்றனர்.

    அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை குஞ்சப்பனை சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    நேற்று மதியம் போலீசார் சோதனை சாவடியில் வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் காரின் பின் பகுதியில் வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    பின்பு காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தபோது அவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(வயது24) என்பதும் காரில் அவருடன் வந்த 4 பேர் ஸ்ரீதரின் நண்பர்கள் என்றும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோத்தகிரி போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாலிபர்கள் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியது உறுதியானது.
    • அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த நெடுகுளா பகுதியில் இளைஞர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்கு வாலிபர்கள் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியது உறுதியானது. இதையடுத்து பணம் வை்து சீட்டு விளையாடிய ரவிக்குமார், ஷினாத், ரமேஷ், அபிஷேக், ஜீவா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
    • மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கருமத்த ம்பட்டி நான்கு ரோடு அருகில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்தது சோதனையில் தெரிய வந்தது.

    இதனை அடுத்து அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளரிடம் விசாரணை செய்த போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாதாராம் (31), தீபாராம்(25) ஆகியோர் மூலம் இப்பகுதியில் குட்கா பொருள்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து வாகராயம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் இருவருக்கும் உடந்தையாக செயல்பட்ட பிரகாஷ் குமார்(40), ரஞ்சித் குமார் (26), சோகரம் (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் , பதுக்கி வைத்திருந்த ரூ. 3 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள 354 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

    ×