search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 youths Arrest"

    திருவாரூர் அருகே கள்ளக்காதலியை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி கற்பழித்த சம்பவம் குறித்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாபநாசம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா கோவிந்த குடியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது45). இவரது மனைவி ஜெயபாரதி(38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது கார்த்திகேயன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்கு முன் ஒரு தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பஸ்சில் பாபநாசம் அருகே உள்ள கோபுராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(32) என்பவர் டிரைவராக இருந்துள்ளார். இதில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

    கார்த்திகேயன் வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் இவரது மனைவி ஜெயபாரதிக்கும், வெங்கடேசனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தனது கள்ளத்தொடர்பு பற்றி வெங்கடேசன் குடிபோதையில் தனது நண்பர்கள் சிலரிடம் கூறியுள்ளார். இதனால் அவர்கள் தாங்களும் ஜெயபாரதியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு வெங்கடேசன் கோபுராஜபுரத்துக்கு ஜெயபாரதியை அழைத்து வந்து அப்பகுதியில் உள்ள ஒரு தோப்புக்குள் சென்று பேசிக் கொண்டிருந்தனராம்.

    அப்போது வெங்கடேசன் ரகசியமாக தனது நண்பர்களான கோட்டுச் சேரியை சேர்ந்த அய்யப்பன்(18), கார்த்திக்(20), சுந்தரப்பெருமாள் கோவில் பகுதி ஜெகன்(19) ஆகிய 3 பேரையும் போன் செய்து வர செய்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த 3 பேரும் வெங்கடேசனுடன் சேர்ந்து ஜெயபாரதியை மிரட்டி கற்பழித்துள்ளனர்.

    மேலும் அவர் அணிந்திருந்த செயின், மோதிரம், தோடு உள்ளிட்ட 5 பவுன் நகைகளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனராம்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயபாரதி அங்கிருந்து பாபநாசம் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோபுராஜபுரத்தில் பதுங்கியிருந்த வெங்கடேசன் உள்பட 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ×