search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "26 people"

    • அரசு மது பானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் உள்பட ௨௬ பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 328 மது பாட்டில்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி போலீசார் தங்கள் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்கணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கடத்தூர், புளியம்பட்டி, ஆப்பக்கூடல், அம்மா பேட்டை, கோபி, திங்களூர், வரப்பாளையம், அந்தியூர், பவானி, சித்தோடு, மொடக்குறிச்சி, சிவகிரி, பெருந்துறை, கருங்கல் பாளையம், கொடுமுடி.

    ஈரோடு தாலுகா, சத்திய மங்கலம், ஈரோடு வடக்கு, அறச்சலூர், ஈரோடு டவுன், ஈரோடு தெற்கு, மலைய ம்பாளையம், சென்னிமலை போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அரசு மது பானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் உள்பட 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்த னர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 328 மது பாட்டில்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    • புளியங்குடி சாலையில் சுற்றித்திரிந்த ஒரு நாய்க்கு திடீரனெ வெறி பிடித்தது.
    • சிறுவன் உள்ளிட்ட 26 பேரை கடித்து குதறியது

    புளியங்குடி:

    புளியங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் நாய்கள் சுற்றித்திரிந்தது. இந்நிலையில் நேற்று அதில் ஒரு நாய்க்கு திடீரனெ வெறி பிடித்தது.

    சாலையில் சுற்றித்திரிந்த அந்த நாய் அந்த வழியாக சென்றவர்களை கடிக்க ஆரம்பித்தது. இதில் பள்ளி சென்று கொண்டிருந்த 9 வயது சிறுவன் மற்றும் பெண்கள், வயதான ஆண்கள் என 26 பேரை அந்த நாய் கடித்து குதறியது.

    இதில் பாதிக்கப்பட்டவர்கள் புளியங்குடி அரசு மருத்துவ–மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த நகர சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு பழம், பிரட் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சைகளை விரைந்து வழங்க அறிவுறுத்தினார். வெறிநாயை உடனடியாக பிடிக்க தனிக்குழுவை அமைக்க நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அதன்படி இன்று காலை அந்த குழு அமைக்கப்பட்டு, அவர்கள் வெறிநாயை பிடித்தனர். பின்னர் அதனை காட்டுப்பகுதியில கொண்டு விட்டனர்.

    ×