search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "including 3 women"

    • அரசு மது பானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் உள்பட ௨௬ பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 328 மது பாட்டில்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி போலீசார் தங்கள் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்கணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கடத்தூர், புளியம்பட்டி, ஆப்பக்கூடல், அம்மா பேட்டை, கோபி, திங்களூர், வரப்பாளையம், அந்தியூர், பவானி, சித்தோடு, மொடக்குறிச்சி, சிவகிரி, பெருந்துறை, கருங்கல் பாளையம், கொடுமுடி.

    ஈரோடு தாலுகா, சத்திய மங்கலம், ஈரோடு வடக்கு, அறச்சலூர், ஈரோடு டவுன், ஈரோடு தெற்கு, மலைய ம்பாளையம், சென்னிமலை போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அரசு மது பானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் உள்பட 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்த னர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 328 மது பாட்டில்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    ×