search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20th Day of Fasting"

    • புனித ரமலானில் மூடப்படும் நரக வாசல்கள்.
    • நரகத்தில் 7 கதவுகள் உள்ளன.

    புனித ரமலானில் மூடப்படும் நரக வாசல்கள்

    புனித ரமலான் மாதம் வந்துவிட்டால் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    நரகத்திற்கு ஏழு வாசல்கள் உண்டு. அந்த ஏழு வாசல்களும் ரமலான் மாதம் முழுவதும் இறையருளால் மூடப்படும். அந்த நரகத்தில் நுழைபவர்கள் யாரென்றால் ஷைத்தானைப் பின்பற்றும் வழிகேடர்கள்தான். இதோ இறைவன் கூறுவதை பார்ப்போம்:

    'எனது இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் (சைத்தான்) கூறினான்'. 'நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாக, குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்' என்று இறைவன் கூறினான்.

    (அதற்கு இப்லீஸ்)'என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால், நான் இவ்வுல கில் (வழிகேட்டைத் தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். அவர்களில் அந்த ரங்க சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்ல டியார்களைத் தவிர' என்று கூறினான்.

    (அதற்கு இறைவன் 'அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்)' இந்த வழி என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை, உன்னைப் பின்பற்றி வழி கெட்டவர்களைத் தவிர' என்று கூறினான்.

    'நிச்சயமாக (உன்னை பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல் உண்டு; ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.' (திருக்குர்ஆன் 15:36-44)

    நரகத்தில் 7 கதவுகள் உள்ளன. அவை:

    1) ஜஹன்னம்

    2) லளா

    3) ஹூதமா

    4) ஸயீர்

    5) ஸகர்

    6) ஜஹீம்

    7) ஹாவியா

    இவ்வாறு ஏழு வகையான நரகத்தை குறிப் பிட்டு அதன் மூலம் அதனுடைய ஏழு வகையான வழிகளையும், ஏழு வகையான வாசல்களையும், ஏழு வகையான படித்தரங்களையும் இறைவன் நாடுகின்றான்.

    பாவம் செய்தவர்கள் அவர்களின் பாவங்களுக்குத்தக்கவாறு அவர்கள் ஏழு வகையினராக வகைப்படுத்தப்பட்டு ஏழுவகையான வாசல்களின் வழியாக வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வரப்பட்டு உள்ளே நுழைவிக்கப்படுவார்கள்.

    இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

    (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்த வுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் உங்களை நோக்கி: "உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில் லையா?" என்று கேட்டார்கள் ;

    (இதற்கு அவர்கள்) "ஆம் (வந்தார்கள்)" என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர் களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (திருக்குர் ஆன் 39:71,72)

    ஆகவே, ரமலானில் மூடப்படும் நரக வாசல் கள் நமது வாழ்நாள் முழுவதும் அது மூடப் பட்டதாகவே இருக்கட்டும். நரக நெருப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இறைவழியில் நடப்போம்.

    ×