search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 thousand notes"

    மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல நடித்து 12 ஆயிரத்தை திருடிய வாலிபரை கண்காணிப்பு காமிரா காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவை சூலூர் பாப்பம்பட்டி அருகே உள்ள அயோத்தியாபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சிவகாமி (வயது 65). இவர்கள் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.

    நேற்று கடையை சிவகாமி கவனித்துக்கொண்ட இருந்தார். முத்து வெளியே சென்று இருந்தார். அப்போது இவரது கடைக்கு ஒரு வாலிபர் காரில் வந்தார். அவர் சிவகாமியிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சிகரெட் வாங்கினார். பின்னர் தண்ணீர் பாட்டில் வேண்டும் என கேட்டார். சிவகாமி தண்ணீர் பாட்டில் எடுப்பதற்காக திரும்பினார். கண்இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் கல்லாவில் இருந்த ரூ. 12 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது காரில் தப்பிச் சென்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவகாமி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர் தப்பிச் சென்றார்.

    பின்னர் இது குறித்து சிவகாமி சூலூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் மளிகை கடைக்கு விரைந்து வந்து சிவகாமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வாலிபர் கொடுத்து சென்ற 2 ஆயிரம் ரூபாய் நோட்டை சோதனை செய்தனர். அப்போது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் காரில் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காரின் பதிவு எண்ணைக்கொண்டு மளிகை கடையில் ரூ. 12 ஆயிரத்தை திருடி, ரூ. 2 ஆயிரம் கள்ளநோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றி சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ×