search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "+2 Student committed Suicide"

    • மாணவி தேர்வு முடிவு வெளியான நிலையில் 6 பாடங்களில் 5 பாடத்தில் தோல்வியடைந்தார்.
    • வேதனை யடைந்த மாணவி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெரு பெரியகருப்பன் மகன் சுபஸ்ரீ மகா பிரதிநிஷா (வயது 20) இவர் பெரியகுளம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் 6 பாடங்களில் 5 பாடத்தில் தோல்வியடைந்தார்.

    இதனால் வேதனை யடைந்த மாணவி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தீபக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டிவீரன்பட்டி அருகில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • மதிப்பெண் குறைவாக பெற்றதால் அவர் தற்கொலை செய்து கொணடதாக விசாரணையில் தெரியவந்தது.

    வத்தலக்குண்டு:

    பட்டிவீரன்பட்டி அருகில் உள்ள அ.புதூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகள் தர்ஷிணி (வயது 17). பிளஸ் 2 மாணவியான இவர் நடந்து முடிந்த தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருந்ததாகவும் இதனால் கவலையில் இருந்துள்ளதாகவும் தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    ×