search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் : தேர்வில் தோல்வியடைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
    X

    கோப்பு படம்

    பெரியகுளம் : தேர்வில் தோல்வியடைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

    • மாணவி தேர்வு முடிவு வெளியான நிலையில் 6 பாடங்களில் 5 பாடத்தில் தோல்வியடைந்தார்.
    • வேதனை யடைந்த மாணவி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெரு பெரியகருப்பன் மகன் சுபஸ்ரீ மகா பிரதிநிஷா (வயது 20) இவர் பெரியகுளம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் 6 பாடங்களில் 5 பாடத்தில் தோல்வியடைந்தார்.

    இதனால் வேதனை யடைந்த மாணவி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தீபக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×