search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people Murder"

    பள்ளிப்பட்டு அருகே தாய், மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கொளையாளிகள் பற்றி துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    திருத்தணி அருகே உள்ள பி.டி.புதூரை சேர்ந்தவர் வனப்பெருமாள். இவர் திருத்தணியை அடுத்த இச்சி புத்தூரில் உள்ள தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வீரலட்சுமி (வயது 45). மாற்றுத்திறனாளி. மகன் போத்தி ராஜா அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை வனப்பெருமாள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது அங்குள்ள அறையில் மனைவி வீரலட்சுமியும், மகன் போத்தி ராஜாவும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் பீரோ உடைக்கப்பட்டு 21 பவுன் நகை கொள்ளைபோய் இருந்தது.

    இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. சேகர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொலையில் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் கொலையாளிகளை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    வனப்பெருமாள் பணியாற்றும் நிறுவனத்தில் அவரால் சிலர் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    கொலை நடந்த வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருக்கிறது.

    அதில் கொலையாளிகள் பற்றி ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews
    குழந்தை கடத்தல் பீதி நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது, அசாமிலும் 2 சுற்றுலா பயணிகளை கிராம மக்கள் அடித்து கொன்றுள்ளனர். #childkidnappingpanic

    கவுகாத்தி:

    குழந்தை கடத்தல் பீதி நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் அப்பாவிகள் பலர் அடித்து கொல்லப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவை தொடர்ந்து இப்பீதி வட இந்தியாவில் பரவியது.

    தற்போது வடகிழக்கு மாகாணங்களையும் ஆக்கிரமித்துள்ளது. மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பல் நடமாடுவதாக ‘வாட்ஸ் அப்’பில் பீதி பரவியது.

    இந்த நிலையில் கவுகாத்தியை சேர்ந்த நிலோத் பால்தாஸ், அபிஜீத் நாத் ஆகிய 2 பேர் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தனர்.

    இவர்கள் இருவரும் மும்பை மற்றும் கோவாவில் பணிபுரிந்தனர். நிலோத்பால் ஆடியோ என்ஜினீயராகவும், அபிஜீத்நாத் டிஜிட்டல் நிபுணராகவும் பணிபுரிந்தனர்.

    இவர்கள் இருவரும் கர்பி மலையில் உள்ள பஞ்சூரி சாரிகான் என்ற கிராமத்துக்கு சென்று இருந்தனர். அங்கு காரை நிறுத்தி வழி கேட்டனர். அவர்களை குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என கிராம மக்கள் சந்தேகப்பட்டனர். எனவே அவர்களது காரை சுற்றி வளைத்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரையும் காரில் இருந்து வெளியேற்றினர். அவர்களை ரோட்டில் ‘தரதர’ வென இழுத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள் நாங்கள் குழந்தை கடத்தும் கும்பல் அல்ல. அசாமை சேர்ந்தவர்கள்தான் என மன்றாடினர்.

    இருந்தும் விடாமல் சுமார் 250 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து தாக்கியது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கும்பலிடம் இருந்து 2 பேரையும் மீட்டனர். அவர்களில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மற்றொருவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த தகவலை கர்பி ஆஸ்லாஸ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.வி. சிவபிரசாத் தெரிவித்தார்.

    இத்தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அசாம் முதல் மந்திரி சர்பானந்தா கோனோவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் சமூக வலை தளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். #childkidnappingpanic 

    ×