என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தமிழ் பேரவை"

    • முத்தமிழ்ப் பேரவையின் 51வது ஆண்டு இசைவிழா மற்றும் விருது வழங்கும் வி
    • நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது

    சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில்,  முத்தமிழ்ப் பேரவையின் 51வது ஆண்டு இசைவிழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார். 

    அதன்படி, நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. நாதஸ்வர கலைஞர் வடுவூர் எஸ்.என்.ஆர். கிருஷ்ணமூர்த்திக்கு ராஜரத்னா விருது வழங்கப்பட்டது. நகைச்சுவை தென்றல் என்ற பட்டம் பெற்ற, திருவாரூர் புலவர் சண்முக வடிவேலனுக்கு இயல் செல்வம் விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி வெங்கடராமனுக்கு இசை செல்வம் விருது அளிக்கப்பட்டது.


    விருது வழங்கியதற்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம்

    நடனக் கலைஞர் அனிதா குகாவின் நாட்டிய சேவையை பாராட்டி, அவருக்கு நாட்டிய செல்வம் விருது வழங்கப்பட்டது. மெய்நானம் சகோதரர்கள் டிகேஆர் ஐயப்பன், டிகேஆர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு நாதஸ்வர செல்வம் விருது வழங்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தவில் உதவி பேராசிரியராக உள்ள நாகூர் செல்வகணபதிக்கு தவில் செல்வம் விருது வழங்கப்பட்டது. மிருதங்க கலைஞர் தஞ்சை கே. முருகபூபதிக்கு மிருதங்கச் செல்வன் விருது வழங்கப்பட்டது.

    • எதிர்கால தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிகமிக முக்கியம்
    • கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா இன்று (டிச., 15) நடைபெற்றது. இதில், விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து விழாவில் உரையாற்றிய அவர், 

    "ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை தவறவிடாமல் தொடர்ந்து வருகிறேன். நடிகர் நாசர் கூறியதைபோல முதலமைச்சராக வருகிறேனோ இல்லையோ, முதல் ஆளாக அடுத்த ஆண்டும் வருவேன். விழாவின் இயக்குநர் அமிர்தம் அழைத்தால், நான் மறுக்கமுடியுமா?.

    சிறுவயதில் இருந்து என் வளர்ச்சியை பார்த்தவர். என்னை வளர்த்தவர்களில் முக்கியமான ஒருவர் அமிர்தம். தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்துகொண்டிருக்கும் முத்தமிழ் பேரவையின் 51வது ஆண்டுவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். கலைகளை, கலைஞர்களை மதித்த காரணத்தால், கருணாநிதி கலைஞராக விளங்கினார். அவர்பேரில் விருது வழங்கவேண்டுமென்று நான் வைத்த கோரிக்கையின் படி கடந்த ஆண்டு சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு நாசருக்கு கலைஞர் விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதியின் எழுத்தில் இளைஞன், பாசப்பறவை, பொன்னன் சங்கர் என பல படங்களில் நடித்தவர் நாசர். அவர் இன்று கலைஞர் விருதை பெறுவது மிக மிக பொருத்தம் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அவருக்கு எல்லாம் தகுதியும் உள்ளது. விருது பெற்றிருக்கும் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.


    விழாவில்

    முந்தைய ஆட்சிகாலத்தில் 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளையும், சின்னத்திரை விருதுகளையும் நாம் ஆட்சிக்கு வந்தபின் 2022ஆம் தரப்பட்டது. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. அதுபோல தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன விருதுகளும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

    வசனகர்த்தா ஆருர்தாஸ், கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது. டி.எம். சௌந்தராஜன் நூற்றாண்டு விழாவை கொண்டாடி உள்ளோம். எஸ்.பி.பி, விவேக், ஜெய்சங்கர் ஆகியோர் பெயரில் தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தியுள்ளோம். கலைமாமணி விருதுகள் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. நடிகர் சிவக்குமாருக்கு மதிப்புறு பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறு கலைஞர்களை போற்றக்கூடிய அரசாக திமுக உள்ளது. எதிர்கால தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிகமிக முக்கியம். கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.  

    • இயல் செல்வம் விருது பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கும், இசை செல்வம் விருது எஸ்.மகதிக்கும் வழங்கப்பட்டது.
    • கருணாநிதியால் வளர்க்கப்பட்ட அமிர்தம் முத்தமிழ் பேரவையை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

    சென்னை:

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் முத்தமிழ் பேரவை 42ஆம் ஆண்டு இசை விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.

    இயல் செல்வம் விருது பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவுக்கும், இசை செல்வம் விருது எஸ்.மகதிக்கும் வழங்கப்பட்டது. ராஜ ரத்னா விருது கணேசனுக்கும், நாட்டிய செல்வம் விருது எஸ்.பழனியப்பனுக்கும், வீணை செல்வம் விருது ராஜேஷ் வைத்யாவுக்கும், தவில் செல்வம் விருது கண்ணனுக்கும் வழங்கப்பட்டது.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    முத்தமிழ் பேரவையின் 42ம் ஆண்டு இசை விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதியால் வளர்க்கப்பட்ட அமிர்தம் பன்முகத்தன்மை கொண்டவர். முத்தமிழ் பேரவையை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் அமிர்தம். கலைஞர் பெயரால் முத்தமிழ் பேரவை விருது வழங்க வேண்டும். சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா. இசை உலகில் இளம் புயலாக வலம் வருபவர் பின்னணி பாடகி மஹதி. உங்கள் அனைவருக்கும் விருதுகளை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.

    கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டில் முத்தமிழ் பேரவைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த ஆண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் விருதினை, முத்தமிழ் பேரவை சார்பில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முத்தமிழுக்கு சிறப்புற தொண்டாற்றுபவர்களுக்கு இந்த விருதை வழங்கவேண்டும். பொதுவாக முதலமைச்சர் பங்கேற்கும் விழாவில் முதலமைச்சரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் இங்கே நான் முத்தமிழ் பேரவையின் செயலாளர் இயக்குனர் அமிர்தம் அவர்களின் மீது உள்ள உரிமையின் காரணமாக இந்த கோரிக்கையை வைத்திருக்கிறேன். அதை அவர் தட்டாமல் ஏற்றுக்கொள்வார் என நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×