என் மலர்
தோஷ பரிகாரங்கள்
நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர், ‘பஞ்சாங்கம்.’ திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும்.
நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர், ‘பஞ்சாங்கம்.’ திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும். நீண்ட ஆயுளைப் பெற வேண்டுமானால், நாளை அடிப்படையாக வைத்து வழிபாட்டை முன்னெடுக்க வேண்டும். பாவங்கள் அகல வேண்டுமானால், நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டை செய்ய வேண்டும்.
நோய்கள் தீர வேண்டுமானால், யோகத்தை அடிப்படையாக வைத்து இறைவனை வழிபட்டு வர வேண்டும். காரியங்களில் வெற்றி ஏற்பட வேண்டுமானால், கரணங்களையும், நட்சத்திரத்தையும் அடிப்படையாக வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு திதி, நாள், யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் பஞ்சாங்கத்தை நாம் பார்க்கின்றோம்.
இதன் அடிப்படையில் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், வாழ்வில் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். ‘ஐந்திற்கு இரண்டு பழுதில்லை’ என்பார்கள். அதன்படி நாள், நட்சத்திரம் இரண்டும், நமக்கு அனுகூலமாக ஒன்று கூடும் நேரத்தில் செய்யும் வழிபாடு உடனடியாகப் பலன் தரும்.
நோய்கள் தீர வேண்டுமானால், யோகத்தை அடிப்படையாக வைத்து இறைவனை வழிபட்டு வர வேண்டும். காரியங்களில் வெற்றி ஏற்பட வேண்டுமானால், கரணங்களையும், நட்சத்திரத்தையும் அடிப்படையாக வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு திதி, நாள், யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் பஞ்சாங்கத்தை நாம் பார்க்கின்றோம்.
இதன் அடிப்படையில் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், வாழ்வில் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். ‘ஐந்திற்கு இரண்டு பழுதில்லை’ என்பார்கள். அதன்படி நாள், நட்சத்திரம் இரண்டும், நமக்கு அனுகூலமாக ஒன்று கூடும் நேரத்தில் செய்யும் வழிபாடு உடனடியாகப் பலன் தரும்.
நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி. இங்கு மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
ஊரின் பெயர் - திருமங்கலக்குடி. அம்பாள் பெயர்- மங்களாம்பிகை. தல விநாயகர் பெயர்- மங்கள விநாயகர். கோவில் விமானம் - மங்கள விமானம். தீர்த்தம் - மங்கள தீர்த்தம். இப்படி 5 இடங்களில் மங்களத்தை கொண்டிருப்பதால், இந்தத் தலம் ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ ஆனது.
நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இத்தல இறைவனுக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
இந்தக் கோவிலின் தல விருட்சமாக கோங்கு, வெள்ளெருக்கு ஆகிய மரங்கள் இருக்கின்றன. நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
ஆலய பிரகாரத்தில் நடராஜர் சன்னிதியில் இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பாளுடன் இருக்கின்றனர். பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இந்த சன்னிதியில் மரகதலிங்கம் ஒன்றும் இருக்கிறது. தினமும் உச்சிகாலத்தில் மட்டும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்கிறார்கள். அப்போது வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள ஆடுதுறையை அடைந்து, அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், திருமங்கலக்குடியை அடையலாம்.
ஊரின் பெயர் - திருமங்கலக்குடி. அம்பாள் பெயர்- மங்களாம்பிகை. தல விநாயகர் பெயர்- மங்கள விநாயகர். கோவில் விமானம் - மங்கள விமானம். தீர்த்தம் - மங்கள தீர்த்தம். இப்படி 5 இடங்களில் மங்களத்தை கொண்டிருப்பதால், இந்தத் தலம் ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ ஆனது.
நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இத்தல இறைவனுக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
இந்தக் கோவிலின் தல விருட்சமாக கோங்கு, வெள்ளெருக்கு ஆகிய மரங்கள் இருக்கின்றன. நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
ஆலய பிரகாரத்தில் நடராஜர் சன்னிதியில் இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பாளுடன் இருக்கின்றனர். பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இந்த சன்னிதியில் மரகதலிங்கம் ஒன்றும் இருக்கிறது. தினமும் உச்சிகாலத்தில் மட்டும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்கிறார்கள். அப்போது வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள ஆடுதுறையை அடைந்து, அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், திருமங்கலக்குடியை அடையலாம்.
ராமநாதபுரம் அருகே உள்ளது, திருப்புல்லாணி திருத்தலம். இங்கு ஆதிஜெகந்நாத பெருமாள் கோவில் இருக்கிறது. குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகார முறையை அறிந்து கொள்ளலாம்.
ராமநாதபுரம் அருகே உள்ளது, திருப்புல்லாணி திருத்தலம். இங்கு ஆதிஜெகந்நாத பெருமாள் கோவில் இருக்கிறது. இது ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாகத் திகழ்கிறது.
நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜன், பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்தில் இருந்து தோன்றிய தேவதூதர் வழங்கிய பாயசத்தை, தன்னுடைய மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார்.
இதையடுத்து முதல் மனைவிக்கு ராமனும், இரண்டாவது மனைவிக்கு பரதனும், மூன்றாவது மனைவிக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர்.
இதன் அடிப்படையில், குழந்தை வரம் வேண்டும் தம்பதியர், அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோவிலுக்கு வந்து நாகர் சிலை முன்பாக ஒரு நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக தரப்படும் பால் பாயசத்தை அருந்தினால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜன், பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்தில் இருந்து தோன்றிய தேவதூதர் வழங்கிய பாயசத்தை, தன்னுடைய மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார்.
இதையடுத்து முதல் மனைவிக்கு ராமனும், இரண்டாவது மனைவிக்கு பரதனும், மூன்றாவது மனைவிக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர்.
இதன் அடிப்படையில், குழந்தை வரம் வேண்டும் தம்பதியர், அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோவிலுக்கு வந்து நாகர் சிலை முன்பாக ஒரு நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக தரப்படும் பால் பாயசத்தை அருந்தினால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபேஸ்வரரை, 11 வாரங்கள் தொடர்ச்சியாக, 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் கடன் தொல்லைகள் அகலும்.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில், மயிலாடுதுறை வழித் தடத்தில் இருக்கிறது ‘திருபுவனம்.’ இங்கு கம்பகரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கம்பகரேஸ்வரர், இறைவி- அறம்வளர்த்த நாயகி. இந்த ஆலயத்தில் சரபேஸ்வரருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.
பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரப பட்சியின் வடிவத்தை சிவபெருமான் எடுத்தார். இந்த பறவையானது, சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபமாக கருதப்படுகிறது. சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபேஸ்வரரை, 11 வாரங்கள் தொடர்ச்சியாக, 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும்.
அதோடு கடன் தொல்லைகள் அகலும். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரமானது, இவரை வழிபட சிறந்த நேரமாகும்.
பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரப பட்சியின் வடிவத்தை சிவபெருமான் எடுத்தார். இந்த பறவையானது, சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபமாக கருதப்படுகிறது. சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபேஸ்வரரை, 11 வாரங்கள் தொடர்ச்சியாக, 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும்.
அதோடு கடன் தொல்லைகள் அகலும். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரமானது, இவரை வழிபட சிறந்த நேரமாகும்.
ராமபிரான் சனி பகவானை வழிபடுவதற்காக தேவிப்பட்டணம் என்னுமிடத்தில் கடலில் இறங்கி ஒன்பது பிடி மணல் எடுத்து நவகிரகங்களாக உருவாக்கினார்.
ராமபிரான் சனி பகவானை வழிபடுவதற்காக தேவிப்பட்டணம் என்னுமிடத்தில் கடலில் இறங்கி ஒன்பது பிடி மணல் எடுத்து நவகிரகங்களாக உருவாக்கினார்.
அப்போது கடல் கொந்தளித்து அவற்றைக் குலைக்க முற்பட, ராமன் தன் திருக்கரத்தை உயர்த்தி கடலின் கொந்தளிப்பை அடக்கினார். அதற்கு சாட்சியாக இன்றுவரைக்கும் அந்தப் பகுதியில் கடல், அலைகள் இன்றி அமைதியாகக் காட்சியளிக்கிறது.
அங்கு அருளும் பெருமாளுக்கும் கடலடைத்த பெருமாள் என்பது திருநாமம். இங்கு ராமரை வழிபட்டால் சனிதோஷம் பரிபூரணமாக நீங்கும் என்பது நம்பிக்கை.
கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தொட்டில் குழந்தை ரூபத்தில் குலம் செழிக்க, குலம் தழைக்க, புத்திர பாக்கிய பெரும்பேறு சந்தான விருத்தி நல்கி பேரருள் வழங்கும் தலமாக விளங்குகிறது.
சோழமண்டலத்தில் தேவார பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. இவற்றுள் கொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம் தேவார வைப்புத் தலமாகும்.
புத்திர தோஷம் என்பது குழந்தை இல்லாதது முதல் பிறந்த குழந்தைகள் பெற்றோரை பேணி பாதுகாக்காதது வரையிலான பல கட்ட தோஷங்களாக கூறப்படுகிறது. நன்மக்கட்பேறு எனும் சற்புத்திர சந்தான பாக்கியம், குழந்தை உண்டாவது முதல் அந்த குழந்தை பிறந்து, வளர்ந்து, ஆளாகி குடும்ப தலைவராகி தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு பணிவிடை செய்வதுபோல் தங்களை பெற்றெடுத்த பெற்றோர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்யும் அனைத்து வகையான குணங்களுடன் கூடிய குழந்தை பாக்கியத்தை அருளும் பிரார்த்தனை தலமாகும்.
குழந்தைப் பேற்றிற்காக யாகம், ஹோமம் செய்வது இக்காலகட்டங்களில் இயலாத காரியம். எனவே கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்தான சுந்தரேஸ்வரரை வழிபடவே புத்திர பாக்கியம் உண்டாகும் என நம்பப்படுகிறது. ஏழை, எளியவர்கள் புத்திர பாக்கியம் பெறுவதற்காகவும், கடவுள் நம்பிக்கை உள்ள செல்வந்த பெருமக்களும் ஒரு சிறிய உரிய பரிகார வழிபாட்டின் மூலம் சற்புத்திர சந்தான பாக்கியம் பெறுவதற்காகத்தான் கொத்தங்குடி திருத்தலத்தில் அருள்மிகு சந்தான சுந்தரேஸ்வரர் தொட்டில் குழந்தை ரூபத்தில் அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறார்.
மீனாட்சி அம்மைக்கும், சுந்தரேஸ்வரருக்கும் அர்ச்சனை வழிபாடு செய்து விட்டு பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுவதற்காகவே பிறந்த குழந்தை ரூபத்தில் வடிவெடுக்கும் சந்தான சுந்தரேஸ்வரரை சிவாச்சாரியார் மூலம் இரு கரம் தாங்கி ஏந்திக்கொண்டு தெய்வக் குழந்தையின் தொட்டில் அருகில் அடியில் அமர்ந்து கொண்டு தாயாகப் போகும் தங்களின் தாய் மடியில் ஸ்ரீசந்தான சுந்தரேஸ்வரரை சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பிறகு பத்திரமாக எழுந்து தொட்டியில் உதிரிப் பூ மெத்தை படுக்கையில் குழந்தையை கிழக்கு மேற்காக வைத்து தொட்டிலை மெதுவாக ஆட்டி விட்டு சந்தான சுந்தரேஸ்வரருக்கு மனப்பூர்வமாக வேண்டி முதற்கட்ட பரிகார வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
சந்தான சுந்தரேஸ்வரரின் பெருங்கருணையால் புத்திர பாக்கியம் குழந்தைப் பேறு பெற்றவர்கள், தங்களின் குழந்தை தொட்டில் குழந்தையாக உள்ள பருவ காலத்திலேயே கொத்தங்குடி தலத்திற்கு மீண்டும் வந்து குழந்தையும், தெய்வமும் ஒன்று என்ற அனுபவ மொழிக்கு ஏற்ப தாங்கள் ஏற்கனவே செய்த முதற்கட்ட வேண்டுதல் பிரார்த்தனை பரிகாரத்தின் தொடர்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு அர்ச்சனை செய்து இரண்டாவது கட்ட பரிகாரமாக சந்தான சுந்தரேஸ்வரருக்கு உரிய தெய்வ தொட்டிலில் தங்களின் கைக்குழந்தையை கிழக்கு-மேற்காக உதிரிப்பூ மெத்தையில் படுக்க வைத்து நன்றி கடன் செலுத்தி இரண்டாம் கட்ட பரிகாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக மாத்தூர்- நன்னிலம் சாலையில் கொத்தங்குடி ஆத்துப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
புத்திர தோஷம் என்பது குழந்தை இல்லாதது முதல் பிறந்த குழந்தைகள் பெற்றோரை பேணி பாதுகாக்காதது வரையிலான பல கட்ட தோஷங்களாக கூறப்படுகிறது. நன்மக்கட்பேறு எனும் சற்புத்திர சந்தான பாக்கியம், குழந்தை உண்டாவது முதல் அந்த குழந்தை பிறந்து, வளர்ந்து, ஆளாகி குடும்ப தலைவராகி தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு பணிவிடை செய்வதுபோல் தங்களை பெற்றெடுத்த பெற்றோர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்யும் அனைத்து வகையான குணங்களுடன் கூடிய குழந்தை பாக்கியத்தை அருளும் பிரார்த்தனை தலமாகும்.
குழந்தைப் பேற்றிற்காக யாகம், ஹோமம் செய்வது இக்காலகட்டங்களில் இயலாத காரியம். எனவே கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்தான சுந்தரேஸ்வரரை வழிபடவே புத்திர பாக்கியம் உண்டாகும் என நம்பப்படுகிறது. ஏழை, எளியவர்கள் புத்திர பாக்கியம் பெறுவதற்காகவும், கடவுள் நம்பிக்கை உள்ள செல்வந்த பெருமக்களும் ஒரு சிறிய உரிய பரிகார வழிபாட்டின் மூலம் சற்புத்திர சந்தான பாக்கியம் பெறுவதற்காகத்தான் கொத்தங்குடி திருத்தலத்தில் அருள்மிகு சந்தான சுந்தரேஸ்வரர் தொட்டில் குழந்தை ரூபத்தில் அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறார்.
மீனாட்சி அம்மைக்கும், சுந்தரேஸ்வரருக்கும் அர்ச்சனை வழிபாடு செய்து விட்டு பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுவதற்காகவே பிறந்த குழந்தை ரூபத்தில் வடிவெடுக்கும் சந்தான சுந்தரேஸ்வரரை சிவாச்சாரியார் மூலம் இரு கரம் தாங்கி ஏந்திக்கொண்டு தெய்வக் குழந்தையின் தொட்டில் அருகில் அடியில் அமர்ந்து கொண்டு தாயாகப் போகும் தங்களின் தாய் மடியில் ஸ்ரீசந்தான சுந்தரேஸ்வரரை சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பிறகு பத்திரமாக எழுந்து தொட்டியில் உதிரிப் பூ மெத்தை படுக்கையில் குழந்தையை கிழக்கு மேற்காக வைத்து தொட்டிலை மெதுவாக ஆட்டி விட்டு சந்தான சுந்தரேஸ்வரருக்கு மனப்பூர்வமாக வேண்டி முதற்கட்ட பரிகார வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
சந்தான சுந்தரேஸ்வரரின் பெருங்கருணையால் புத்திர பாக்கியம் குழந்தைப் பேறு பெற்றவர்கள், தங்களின் குழந்தை தொட்டில் குழந்தையாக உள்ள பருவ காலத்திலேயே கொத்தங்குடி தலத்திற்கு மீண்டும் வந்து குழந்தையும், தெய்வமும் ஒன்று என்ற அனுபவ மொழிக்கு ஏற்ப தாங்கள் ஏற்கனவே செய்த முதற்கட்ட வேண்டுதல் பிரார்த்தனை பரிகாரத்தின் தொடர்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு அர்ச்சனை செய்து இரண்டாவது கட்ட பரிகாரமாக சந்தான சுந்தரேஸ்வரருக்கு உரிய தெய்வ தொட்டிலில் தங்களின் கைக்குழந்தையை கிழக்கு-மேற்காக உதிரிப்பூ மெத்தையில் படுக்க வைத்து நன்றி கடன் செலுத்தி இரண்டாம் கட்ட பரிகாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக மாத்தூர்- நன்னிலம் சாலையில் கொத்தங்குடி ஆத்துப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தனை வழிபாடு செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் அன்றைய தினம், சித்ரகுப்தனை வேண்டிக்கொண்டு பஞ்சாங்கம் படிப்பதும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.
26-4-2021 சித்ரா பவுர்ணமி
சூரியன் உச்சம் பெறும் மாதமாக, சித்திரை மாதம் உள்ளது. அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியில் சந்திரன் முழுமதியாக பலம்பெறுகிறார். இப்படி ராஜ கிரகங்களான சந்திரனும், சூரியனும் பலம் பெரும் மாதம் என்பதால், சித்திரை மாத பவுர்ணமி வழிபாட்டுக்குரியதாக மாறியிருக்கிறது. இந்த நாளில் மலை வலம் வருவதும், முருகப்பெருமானை வழிபடுவதும் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுக்கும்.
எமதர்மனின் கணக்காளராக இருந்து, உலக உயிர்கள் அனைத்தின் பாவ - புண்ணிய கணக்குகளை பாரபட்சமின்றி எழுதும் பணியைச் செய்பவர், சித்ரகுப்தன். இவர் அவதரித்த நாளாகவும், சித்ரா பவுர்ணமியை புராணங்கள் குறிப்பிடுகின்றன.
ஒரு முறை கயிலாயத்தில் இருந்த பார்வதிதேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் உருவத்தை, சித்திரமாக வடித்தாள். அப்போது உலகிற்கு படியளக்கும் பணியைச் செய்துவிட்டு வந்த ஈசனிடம், தான் வரைந்த சித்திரத்தை பார்வதிதேவி காட்டினாள். அந்த ஓவியம், சிவபெருமானை கவர்ந்தது. அப்போது அவருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. விதிமுடிந்த மனித உயிர்களின் உயிரைப் பறித்து, பூமித்தாயின் பாரத்தைக் குறைக்கும் பணியைச் செய்பவர் எமதர்மன். அவர் அதிக வேலைப்பளு காரணமாக, தனக்கு ஒரு உதவியாளரைத் தரும்படி, ஈசனிடம் கேட்டிருந்தார். அதுபற்றிய நினைவு வந்ததும், பார்வதிதேவி வரைந்த ஓவியத்தை கையில் எடுத்து அதில் தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்தினார், ஈசன். உடனே அந்தச் சித்திரம் உயிர்பெற்றது. சிவசக்தியின் அம்சமாக, சித்திரத்தில் இருந்து உயிர்பெற்றதால், ‘சித்ரகுப்தன்’ என்ற பெயர் வந்தது.
‘சித்’ என்பது ‘மனம்’ என்பதையும், ‘குப்த’ என்பது ‘மறைவு’ என்பதையும் குறிக்கும். அதாவது மனித மனங்களில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களையும் கவனித்து, அதற்குத் தகுந்தாற் போல் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் என்பதால் இந்தப் பெயர் வந்தது. சித்ரகுப்தன் பிறக்கும்போதே, தனது கையில் ஏடு மற்றும் எழுத்தாணியோடு பிறந்தவர்.
சித்ரா பவுர்ணமி அன்று இல்லத்தில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் சித்ரகுப்தன் உருவ படத்தை, தெற்கு திசையில் வைத்து, அதனை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். படத்திற்கு சந்தன- குங்குமம் வைத்து, பழங்கள்- காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசியுடன் வெல்லம் கலந்த இனிப்பு, கலவை சாதங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஐந்துமுக குத்துவிளக்கு ஏற்றி, நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் விலக வேண்டும் என்று, சித்ர குப்தனுக்கு தீபாராதனை காட்டி வழிபட வேண்டும்.
சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தனை வழிபாடு செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் அன்றைய தினம், சித்ரகுப்தனை வேண்டிக்கொண்டு பஞ்சாங்கம் படிப்பதும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்கும். அதோடு அன்றைய தினம் அம்பாளுக்கு, தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பின்னர் அந்த நைவேத்திய பிரசாதங்களை, பசித்தோருக்கு தானமாக கொடுத்தால், புண்ணியம் சேரும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், முழுமையாக விரதம் மேற்கொண்டு, சித்ரா பவுர்ணமி அன்று இரவு நிலவு பார்த்த பின் உணவருந்த வேண்டும்.
சித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அதேபோல் அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், சித்ரகுப்தனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சித்ரா பவுர்ணமி அன்று, இந்த ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்து வரலாம். சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சூரியன் உச்சம் பெறும் மாதமாக, சித்திரை மாதம் உள்ளது. அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியில் சந்திரன் முழுமதியாக பலம்பெறுகிறார். இப்படி ராஜ கிரகங்களான சந்திரனும், சூரியனும் பலம் பெரும் மாதம் என்பதால், சித்திரை மாத பவுர்ணமி வழிபாட்டுக்குரியதாக மாறியிருக்கிறது. இந்த நாளில் மலை வலம் வருவதும், முருகப்பெருமானை வழிபடுவதும் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுக்கும்.
எமதர்மனின் கணக்காளராக இருந்து, உலக உயிர்கள் அனைத்தின் பாவ - புண்ணிய கணக்குகளை பாரபட்சமின்றி எழுதும் பணியைச் செய்பவர், சித்ரகுப்தன். இவர் அவதரித்த நாளாகவும், சித்ரா பவுர்ணமியை புராணங்கள் குறிப்பிடுகின்றன.
ஒரு முறை கயிலாயத்தில் இருந்த பார்வதிதேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் உருவத்தை, சித்திரமாக வடித்தாள். அப்போது உலகிற்கு படியளக்கும் பணியைச் செய்துவிட்டு வந்த ஈசனிடம், தான் வரைந்த சித்திரத்தை பார்வதிதேவி காட்டினாள். அந்த ஓவியம், சிவபெருமானை கவர்ந்தது. அப்போது அவருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. விதிமுடிந்த மனித உயிர்களின் உயிரைப் பறித்து, பூமித்தாயின் பாரத்தைக் குறைக்கும் பணியைச் செய்பவர் எமதர்மன். அவர் அதிக வேலைப்பளு காரணமாக, தனக்கு ஒரு உதவியாளரைத் தரும்படி, ஈசனிடம் கேட்டிருந்தார். அதுபற்றிய நினைவு வந்ததும், பார்வதிதேவி வரைந்த ஓவியத்தை கையில் எடுத்து அதில் தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்தினார், ஈசன். உடனே அந்தச் சித்திரம் உயிர்பெற்றது. சிவசக்தியின் அம்சமாக, சித்திரத்தில் இருந்து உயிர்பெற்றதால், ‘சித்ரகுப்தன்’ என்ற பெயர் வந்தது.
‘சித்’ என்பது ‘மனம்’ என்பதையும், ‘குப்த’ என்பது ‘மறைவு’ என்பதையும் குறிக்கும். அதாவது மனித மனங்களில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களையும் கவனித்து, அதற்குத் தகுந்தாற் போல் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் என்பதால் இந்தப் பெயர் வந்தது. சித்ரகுப்தன் பிறக்கும்போதே, தனது கையில் ஏடு மற்றும் எழுத்தாணியோடு பிறந்தவர்.
சித்ரா பவுர்ணமி அன்று இல்லத்தில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் சித்ரகுப்தன் உருவ படத்தை, தெற்கு திசையில் வைத்து, அதனை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். படத்திற்கு சந்தன- குங்குமம் வைத்து, பழங்கள்- காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசியுடன் வெல்லம் கலந்த இனிப்பு, கலவை சாதங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஐந்துமுக குத்துவிளக்கு ஏற்றி, நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் விலக வேண்டும் என்று, சித்ர குப்தனுக்கு தீபாராதனை காட்டி வழிபட வேண்டும்.
சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தனை வழிபாடு செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் அன்றைய தினம், சித்ரகுப்தனை வேண்டிக்கொண்டு பஞ்சாங்கம் படிப்பதும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்கும். அதோடு அன்றைய தினம் அம்பாளுக்கு, தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பின்னர் அந்த நைவேத்திய பிரசாதங்களை, பசித்தோருக்கு தானமாக கொடுத்தால், புண்ணியம் சேரும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், முழுமையாக விரதம் மேற்கொண்டு, சித்ரா பவுர்ணமி அன்று இரவு நிலவு பார்த்த பின் உணவருந்த வேண்டும்.
சித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அதேபோல் அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், சித்ரகுப்தனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சித்ரா பவுர்ணமி அன்று, இந்த ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்து வரலாம். சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சனியைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இப்போது ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய சில பரிகாரங்களைக் காண்போம்.
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் இடம் பெயர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி. இத்தகைய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர எடுத்துக் கொள்ளும் காலம் இரண்டரை ஆண்டுகள் ஆகும்.
பொதுவாக சனிபகவான் ஒரு ராசியின் இருக்கிறார் என்றால், அந்த ராசியுடன், அதன் முன் மற்றும் பின் உள்ள ராசிக்கும் ஏழரை சனி என்று பெயர். பொதுவாக ஏழரை சனி என்றாலே பலரும் அஞ்சுவோம். ஆனால் சனி பகவான் ஒரு பாசக்காரர். அதே சமயம் நீதி நாயகனும் கூட. எனவே நீங்கள் நீதி தவறாமல் நடப்பவராயின், சனியைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இப்போது ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய சில பரிகாரங்களைக் காண்போம்.
அனுமன் சாலிசா
சனி பகவான் அனுமனின் பக்தர் மட்டுமின்றி, நண்பரும் கூட. சனி பகவான் அனுமனின் பக்தர்களுக்கு மோசமான விளைவுகளைத் தரமாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். எனவே ஏழரை சனி நடப்பவர்கள், தினமும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வதால், பெரிதும் பயனடையக்கூடும்.
சனி மந்திரம்
சனி பகவானின் அருளைப் பெற தினமும் மாலை வேளையில் சனி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். சனி சாலிசாவை தினமும் பாராயணம் செய்வதன் மூலமும், ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
“ஓம் ஷாம் சனிச்சாரய நம”
நவகிரக பூஜை
ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நவகிரக பூஜை நடத்த வேண்டும். நவகிரக பூஜையானது கடவுள்களை சாந்தப்படுத்துவதோடு, ஜாதகத்தில் உள்ள மோசமான கிரக நிலைகளால் சந்திக்கும் எதிர்மறை விளைவுகளைத் தடுத்து, வாழ்வில் நேர்மறை மற்றும் நம்பிக்கையை வழங்கும். மேலும் ஏழரை சனி நடக்கும் நபர்கள் சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று, நவகிரகங்களை வணங்கி, செய்த தவறுகளுக்கு மனமார மன்னிப்பு கேட்டு பிராத்தனை செய்தால், சனிபகவான் மகிழ்ச்சியை வழங்குவார்.
எள் எண்ணெய்/கடுகு எண்ணெய் தீபம்
ஏழரை சனி நடக்கும் நபர்கள், சனிக்கிழமை அன்று சனி பகவானுன்னு எள் எண்ணெய்/கடுகு எண்ணெய் தீபம் போட்டு வந்தால், சனி பகவான் சந்தோஷமடைவார். புராணத்தின் படி, கடுகு எண்ணெய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அனுமன் சனி பகவானின் காயங்கள் மற்றும் வடுக்களைக் குணப்படுத்த கடுகு எண்ணெயை வழங்கினாராம்.
காகத்திற்கு சாதம்
ஏழரை சனி நடப்பவர்கள், தினமும் சாப்பிடும் முன் வெள்ளை சாதத்தில் கருப்பு எள்ளைப் போட்டு பிசைந்து, அதை காகத்திற்கு வைத்து வந்தால், முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், காகம் சனி பகவானின் வாகனம் என்பதால், சனியின் அருளும் கிட்டும்.
இரும்பு அல்லது எண்ணெயை வாங்காதீர்கள்
ஏழரை சனி நடக்கும் நபர்கள், சனிக்கிழமை அன்று இரும்புப் பொருட்களை வாங்கவோ அல்லது எண்ணெய்களான கடுகு அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றையோ வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ஸ்ரீ/குபேர யந்திரம்
லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீ யந்திரம் அல்லது குபேரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குபேர யந்திரத்தை வீட்டின் வடக்கு திசையில் வைப்பதன் மூலம், செல்வத்தின் பாதுகாவலரான குபேரர் செல்வத்தை அதிகரிக்க உதவுவதோடு, வாழ்வில் வெற்றி அடைய உதவுவார். மேலும் இது ஏழரை சனியின் மோசமான விளைவுகளையும் குறைக்க உதவும்.
நல்லெண்ணெய் குளியல்
சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டியது அவசியம். அதுவும் காலையில் 6-7 மணியளவில் சனி ஹோரையில் நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளித்தால், சனியின் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பொதுவாக சனிபகவான் ஒரு ராசியின் இருக்கிறார் என்றால், அந்த ராசியுடன், அதன் முன் மற்றும் பின் உள்ள ராசிக்கும் ஏழரை சனி என்று பெயர். பொதுவாக ஏழரை சனி என்றாலே பலரும் அஞ்சுவோம். ஆனால் சனி பகவான் ஒரு பாசக்காரர். அதே சமயம் நீதி நாயகனும் கூட. எனவே நீங்கள் நீதி தவறாமல் நடப்பவராயின், சனியைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இப்போது ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய சில பரிகாரங்களைக் காண்போம்.
அனுமன் சாலிசா
சனி பகவான் அனுமனின் பக்தர் மட்டுமின்றி, நண்பரும் கூட. சனி பகவான் அனுமனின் பக்தர்களுக்கு மோசமான விளைவுகளைத் தரமாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். எனவே ஏழரை சனி நடப்பவர்கள், தினமும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வதால், பெரிதும் பயனடையக்கூடும்.
சனி மந்திரம்
சனி பகவானின் அருளைப் பெற தினமும் மாலை வேளையில் சனி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். சனி சாலிசாவை தினமும் பாராயணம் செய்வதன் மூலமும், ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
“ஓம் ஷாம் சனிச்சாரய நம”
நவகிரக பூஜை
ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நவகிரக பூஜை நடத்த வேண்டும். நவகிரக பூஜையானது கடவுள்களை சாந்தப்படுத்துவதோடு, ஜாதகத்தில் உள்ள மோசமான கிரக நிலைகளால் சந்திக்கும் எதிர்மறை விளைவுகளைத் தடுத்து, வாழ்வில் நேர்மறை மற்றும் நம்பிக்கையை வழங்கும். மேலும் ஏழரை சனி நடக்கும் நபர்கள் சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று, நவகிரகங்களை வணங்கி, செய்த தவறுகளுக்கு மனமார மன்னிப்பு கேட்டு பிராத்தனை செய்தால், சனிபகவான் மகிழ்ச்சியை வழங்குவார்.
எள் எண்ணெய்/கடுகு எண்ணெய் தீபம்
ஏழரை சனி நடக்கும் நபர்கள், சனிக்கிழமை அன்று சனி பகவானுன்னு எள் எண்ணெய்/கடுகு எண்ணெய் தீபம் போட்டு வந்தால், சனி பகவான் சந்தோஷமடைவார். புராணத்தின் படி, கடுகு எண்ணெய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அனுமன் சனி பகவானின் காயங்கள் மற்றும் வடுக்களைக் குணப்படுத்த கடுகு எண்ணெயை வழங்கினாராம்.
காகத்திற்கு சாதம்
ஏழரை சனி நடப்பவர்கள், தினமும் சாப்பிடும் முன் வெள்ளை சாதத்தில் கருப்பு எள்ளைப் போட்டு பிசைந்து, அதை காகத்திற்கு வைத்து வந்தால், முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், காகம் சனி பகவானின் வாகனம் என்பதால், சனியின் அருளும் கிட்டும்.
இரும்பு அல்லது எண்ணெயை வாங்காதீர்கள்
ஏழரை சனி நடக்கும் நபர்கள், சனிக்கிழமை அன்று இரும்புப் பொருட்களை வாங்கவோ அல்லது எண்ணெய்களான கடுகு அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றையோ வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ஸ்ரீ/குபேர யந்திரம்
லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீ யந்திரம் அல்லது குபேரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குபேர யந்திரத்தை வீட்டின் வடக்கு திசையில் வைப்பதன் மூலம், செல்வத்தின் பாதுகாவலரான குபேரர் செல்வத்தை அதிகரிக்க உதவுவதோடு, வாழ்வில் வெற்றி அடைய உதவுவார். மேலும் இது ஏழரை சனியின் மோசமான விளைவுகளையும் குறைக்க உதவும்.
நல்லெண்ணெய் குளியல்
சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டியது அவசியம். அதுவும் காலையில் 6-7 மணியளவில் சனி ஹோரையில் நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளித்தால், சனியின் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
சிவனின் ரூபமான பைரவரை வழிபட்டால் நீங்கும் தோஷம் மற்றும் சிறப்புப் பூஜைகள் செய்வதால் கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்து காணலாம்.
பைரவரின் திருவுருவத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு ராசி என பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. அவரின் தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.
பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும்.
பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.
பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும்.
பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை போன்ற சிறு உருவபொம்மையை செய்து வைத்து அம்மனை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் பிரசித்திபெற்ற மரத்தடி மாரியம்மன் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் வடக்கு திசை நோக்கி மாரியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலின் தலவிருட்சம் ஆலமரம் ஆகும்.
வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மரத்தடி மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் மாலை நேரங்களில் அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு தீபாராதனை காண்பிக்கப்படும்.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள் மரத்தடி மாரியம்மனை மனமுருகி வழிபட்டால் அவர்களது நோய் தீருவதாக கூறப்படுகிறது. மேலும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை போன்ற சிறு உருவபொம்மையை செய்து வைத்து அம்மனை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும், தங்களது நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக பக்தர்கள் பொங்கல் வைத்து மரத்தடி மாரியம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மரத்தடி மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் மாலை நேரங்களில் அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு தீபாராதனை காண்பிக்கப்படும்.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள் மரத்தடி மாரியம்மனை மனமுருகி வழிபட்டால் அவர்களது நோய் தீருவதாக கூறப்படுகிறது. மேலும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை போன்ற சிறு உருவபொம்மையை செய்து வைத்து அம்மனை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும், தங்களது நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக பக்தர்கள் பொங்கல் வைத்து மரத்தடி மாரியம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!
கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. அதையொட்டி நடைபெறும் திருக்கல்யாணத்திலும் மாதந்தோறும் சஷ்டி நாளிலும் இங்கு வந்து ஸ்ரீசுப்ரமண்யரை வேண்டினால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!
மேலும் தை மாதம் வந்து விட்டால், தை மாத செவ்வாய், வெள்ளி , தை மாத சஷ்டி மற்றும் தைப்பூச நன்னாளிலும் இங்கு விரதம் இருந்து வள்ளி மணாளனை, வள்ளியூருக்கு வந்து தரிசிக்கின்றனர். கல்யாண வரம் கைகூடிவரும் என்பது உறுதி!
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!
கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. அதையொட்டி நடைபெறும் திருக்கல்யாணத்திலும் மாதந்தோறும் சஷ்டி நாளிலும் இங்கு வந்து ஸ்ரீசுப்ரமண்யரை வேண்டினால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!
மேலும் தை மாதம் வந்து விட்டால், தை மாத செவ்வாய், வெள்ளி , தை மாத சஷ்டி மற்றும் தைப்பூச நன்னாளிலும் இங்கு விரதம் இருந்து வள்ளி மணாளனை, வள்ளியூருக்கு வந்து தரிசிக்கின்றனர். கல்யாண வரம் கைகூடிவரும் என்பது உறுதி!
திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர் ஆலயத்தில் திருமணத் தடை உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் வழிபாடு செய்து வந்தால், அந்த தோஷங்கள் விலகும்.
கும்பகோணத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருமங்கலக்குடி. இங்கு பிராணவரதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர், வரிப்பணத்தைக் கொண்டு இந்த கோவிலைக் கட்டினார்.
வரிப்பணத்தில் கோவிலைக் கட்டியதால், கோபம் கொண்ட மன்னன், மந்திரியை சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது மந்திரி, தன்னுடைய உடலை திருமங்கலக்குடியிலேயே அடக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் மந்திரியின் மனைவி, திருமங்கலக்குடி திருத்தலத்தில் உள்ள மங்களாம்பிகை அம்மனிடம் வேண்டினாள்.
இதையடுத்து அந்த மந்திரியின் தலையை ஒட்டச்செய்து, உயிர் பெறச் செய்தாள், அன்னை. மந்திரி மனைவியின் மாங்கல்யம் காத்ததால், இத்தல நாயகி, ‘மங்களாம்பிகை’ என்று பெயர் பெற்றாள். இறைவன் ‘பிராணவரதேஸ்வரர்’ ஆனார். இத்தலத்தின் பெயர் ‘மங்களக்குடி.’ தல விநாயகர் ‘மங்கள விநாயகர்.’ தீர்த்தம்- மங்கள தீர்த்தம், விமானம் - மங்கள விமானம்.
இந்த ஆலயத்தில் திருமணத் தடை உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் வழிபாடு செய்து வந்தால், அந்த தோஷங்கள் விலகும்.
வரிப்பணத்தில் கோவிலைக் கட்டியதால், கோபம் கொண்ட மன்னன், மந்திரியை சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது மந்திரி, தன்னுடைய உடலை திருமங்கலக்குடியிலேயே அடக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் மந்திரியின் மனைவி, திருமங்கலக்குடி திருத்தலத்தில் உள்ள மங்களாம்பிகை அம்மனிடம் வேண்டினாள்.
இதையடுத்து அந்த மந்திரியின் தலையை ஒட்டச்செய்து, உயிர் பெறச் செய்தாள், அன்னை. மந்திரி மனைவியின் மாங்கல்யம் காத்ததால், இத்தல நாயகி, ‘மங்களாம்பிகை’ என்று பெயர் பெற்றாள். இறைவன் ‘பிராணவரதேஸ்வரர்’ ஆனார். இத்தலத்தின் பெயர் ‘மங்களக்குடி.’ தல விநாயகர் ‘மங்கள விநாயகர்.’ தீர்த்தம்- மங்கள தீர்த்தம், விமானம் - மங்கள விமானம்.
இந்த ஆலயத்தில் திருமணத் தடை உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் வழிபாடு செய்து வந்தால், அந்த தோஷங்கள் விலகும்.






