search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிராணவரதேஸ்வரர் திருக்கோவில்
    X
    பிராணவரதேஸ்வரர் திருக்கோவில்

    மாங்கல்ய தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோவில்

    திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர் ஆலயத்தில் திருமணத் தடை உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் வழிபாடு செய்து வந்தால், அந்த தோஷங்கள் விலகும்.
    கும்பகோணத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருமங்கலக்குடி. இங்கு பிராணவரதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர், வரிப்பணத்தைக் கொண்டு இந்த கோவிலைக் கட்டினார்.

    வரிப்பணத்தில் கோவிலைக் கட்டியதால், கோபம் கொண்ட மன்னன், மந்திரியை சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது மந்திரி, தன்னுடைய உடலை திருமங்கலக்குடியிலேயே அடக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் மந்திரியின் மனைவி, திருமங்கலக்குடி திருத்தலத்தில் உள்ள மங்களாம்பிகை அம்மனிடம் வேண்டினாள்.

    இதையடுத்து அந்த மந்திரியின் தலையை ஒட்டச்செய்து, உயிர் பெறச் செய்தாள், அன்னை. மந்திரி மனைவியின் மாங்கல்யம் காத்ததால், இத்தல நாயகி, ‘மங்களாம்பிகை’ என்று பெயர் பெற்றாள். இறைவன் ‘பிராணவரதேஸ்வரர்’ ஆனார். இத்தலத்தின் பெயர் ‘மங்களக்குடி.’ தல விநாயகர் ‘மங்கள விநாயகர்.’ தீர்த்தம்- மங்கள தீர்த்தம், விமானம் - மங்கள விமானம்.

    இந்த ஆலயத்தில் திருமணத் தடை உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் வழிபாடு செய்து வந்தால், அந்த தோஷங்கள் விலகும்.
    Next Story
    ×